இதில் எது சிறந்த தியாகி?
நீங்கள் தான் நீதி பதி இப்போது
அன்புடையீர் ;
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரக்கத்துஹூ
தியாகத்திற்க்கு அடையாளமாக மெழுகுபத்தியையும் ஊதுபத்தியையும் சொல்வார்கள் இவை இரண்டில் எது சிறந்த தியாகி? என்பதை நீங்கள்தான் இப்போது கூற வேண்டும்!
மற்றவர்களுக்காகவே தன்னை அழித்துக் கொண்ட தியாகிகள்தான் இந்த இருவரும்.இந்த இரண்டு தியாகிகளின் தியாகங்களும் போற்றத்தக்க பெருமைக் கூறிய தியாகமாக இருந்தாலும்.இதில் எது சிறந்த தியாகி?
இந்த இரண்டு தியாகிகளின் தியாகங்களை பாருங்கள் :
1. மெழுகு பத்தியின் தியாகம் :
மற்றவர்களுக்கு வெளுச்சம் தரவே தன்னையே உருக்கி உருக்கி அழித்துக் கொள்கிறது மெழுகுபத்தி இதனுடைய தியாகம் சிறந்ததா ?
2. ஊது பத்தியின் தியாகம் :
மற்றவர்களுக்கு மணம் ஊட்டவே எரிந்து எரிந்து சாம்பலாகிப் போகிறது ஊது பத்தி இதனுடைய தியாகம் சிறந்ததா ?
கூர்மையாகப் பார்த்து எதனுடைய தியாகம் சிறந்த தியாகம் என்பதை தீர்ப்பு செய்ய சொன்னால்! நீங்கள் எதனுடைய தியாகம் சிறந்த தியாகம் என்று தீர்ப்பு செய்வீர்கள்
வெளிச்சம் ஊட்டுவதே நோக்கமாக கொண்ட மெழுகுபத்தியின் தியாகம் சிறந்ததா? அல்லது மணம் ஊட்டவதே நோக்கமாக கொண்ட ஊதுபத்தியின் தியாகம் சிறந்ததா?
உங்களின் பதில் என்ன ? ? ? ? ? ?
தயவு செய்து முதலில் எதனுடைய தியாகம் சிறந்தது என்று முடிவு செய்யுங்கள் பிறகு மீதியை படியுங்கள் உங்கள் கணிப்பு எப்படி இருக்கிறது என்று பார்போம்.
குறிப்பு : இரண்டில் ஒன்றுடைய தியாகத்தை மட்டும் தான் சொல்ல வேண்டும் இரண்டுமே சிறந்தது என்று பதில் தரக் கூடாது.
எனவே சற்று சிந்தனை செய்து பாருங்கள் நாம் மெழுகுவத்தியையும்,ஊதுவத்தியையும் பயன் படுத்துகிறோம் எனவே எது உண்மையான உயர்ந்த தியாகி என்பதை விளங்கி சொல்லுங்கள்
இன்ஷா அல்லாஹ் உங்கள் பதிலை பதியுங்கள் ......
Comments
Post a Comment