சத்திய இஸ்லாத்திற்காக ஸஹாபி பெண்களின் தியாகங்கள்..!
சத்திய இஸ்லாத்திற்காக ஸஹாபி பெண்களின் தியாகங்கள்..!
முதல் பெண்மணியின் ஷஹாதத் சாட்சி… !!!
சுமையா பின்த் கய்யாத் ரலியல்லாஹூ அவர்கள் முதன் முதலில் இஸ்லாத்தில் இணைந்த ஏழு நபர்களில் ஒருவராவார். இஸ்லாத்தில் இணைந்ததை துணிந்து மக்களுக்கு முன்பு வெளிப்படுத்தியவர் . பகிரங்கமாகச் சொன்னவர்.துணிச்சலோடு இந்த உலகிற்குச் சொன்ன பெண்மணி .
குடும்பமே இஸ்லாத்தில் இணைந்ததைப் பொறுத்துக் கொள்ள முடியாத காஃபீர்கள் கடுமையாக வேதனை செய்தார்கள் இரும்பால் கட்டி சுடுமணலில் வீசினார்கள் .தண்ணீர் தாகத்தால் துடிக்க வைத்தார்கள் .கடுமையான நெருப்புக்கங்கில் சூடு வைத்தார்கள் . அந்த வழியே வந்த அண்ணல் நபிஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் ‘ யாசிரின் குடும்பமே! நீங்கள் ஓதுங்கும் இடம் சொர்க்கம் ‘ என்று கூறினார்கள் .
முதுமை வயதையடைந்திருந்த சுமைய்யா ரலியல்லாஹூ அன்ஹா அவர்களின் முதுமையைக் கூடப் பொருட்படுத்தாமல் சுட்டேரிக்கும் சுடுமணலில் அவர்களைத் தூக்கி வீசினார்கள் .அப்போதும் அவர்கள் அல்லாஹ் அல்லாஹ் என்றே கூறினார்கள்
சுமைய்யா ரலியல்லாஹூ அன்ஹா அவர்கள் உறுதியாக இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக் கொண்ட பெண்களுள் முதல் இடத்தைப் பெற்றவர்கள் . அவர்களின் ஈமானிலிருந்து அவர்களை அகற்றவிடப் பல முயற்சிகள் செய்தும் பலனளிக்கவில்லை. இறுதியாக அபூஜஹல் பாலைவனத்தில் அம்மையாரை நடக்க விட்டு தான் வைத்திருந்த யுத்த அம்பை எடுத்து அந்த அம்மையாரின் முன் பகுதியில் வீசினான் .அது அம்மையாரின் இன உறுப்பைத் தொட்டு வெளியானது அம்மையார் அங்கே துடிதுடித்து அதே இடத்தில் ஷஹீதானார்கள் .
அவர்களின் கண்களுக்கு முன்பாகவே அம்மையாரின் கணவர் யாசிர் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்களைப் பிடித்து இரண்டு கால்களையும் இரு வேறு குதிரைகளில் கால்களோடு கட்டி இரு வேறு திசைகளில் விரைவாக அவ்விரண்டு குதிரைகளையும்
விரட்டினார்கள் . அம்மையாரின் கண்களுக்கு முன்பே இரு கூராகப் பிளந்து துடியாய்த் துடித்து இரத்த வெள்ளத்தில் ஷஹீதானார்கள் யாசிர் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள் .
ஷஹீதாகிவிட்ட சுமைய்யா ரலியல்லாஹூ அன்ஹா அவர்கள் தம் உயிர் பிரியும் நேரத்தில் ‘ அல்லாஹ்வே என் உயிரையும் என் கணவரையும் என் மகனையும் நீ திருப்தி கொள்வாயாக ! என்று பிரார்த்தனை செய்தார்கள் . அந்த அம்மையாரின் மன உறுதியைப் பாருங்கள் ! வயது முதுமையிலும் மன அழுத்தத்தைப் பருங்கள் .கல் நெஞ்சையும் கரைக்க வல்லது அவர்களுடைய ஈமானின் வெளிப்பாடு இறை மறுப்பாளர்களின் இதயத்தையும் நடுங க வைத்தது .
அனைத்து வேதனையையும் உள்வாங்கிக் கொண்டு அஹத் அஹத் என்றே அவர்களின் யாவும் நெஞ்சமும் உரைத்தன.இது போன்று எந்தப் பெண்ணுக்கும் காயம் ஏற்ப்பட்டதில்லை .இது போன்று இந்நாள் வரை அக்கொடுமையிலும் கொடுமையான வேதனையை எந்தப் பெண்ணும் சுவைத்ததில்லை.
பாலியல் கொடுமை,கணவனால் தீ வைத்துக் கொழுத்தப்படுதல் உள்ளிட்ட துன்பங்களை இன்றைய பெண்கள் அனுபவித்தாலும் அதையெல்லாம் கடந்து வயது முதிர்ந்த அந்த அம்மையாரின் இன உறுப்பை நோக்கி அம்பு எறிந்து கொலை செய்தான் . அதையும் அல்லாஹ்வுக்காக , அண்ணல் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களைநபியாக ஏற்றுக் கொண்டதற்காகத் திருப்தியோடு ஏற்றுக்கொண்டார்கள் .
ஏழ்மைநிலை முதுமையடைந்த நிலை ,கணவன் தன் கண் முன்னே இரு கூராகப் பிளக்கப்பட்டுக் கொலை செய்யப்படுதல் ஆகிய அனைத்தையும் இதயத்தில் ஏற்று அஹத் அஹத் ( ஒருவன் ஒருவன் ) என்றே கூறினார்கள் …
இன்று நம் ஈமானைப் பாருங்கள் ..!
நம் ஈமானும் அவர்களின் ஈமானைப் போன்றதா …?
அற்பக் பணத்துக்காக ஈமானை விற்று விடுகின்றார்கள் ..!
சுக போக வாழ்வு வாழ வேண்டும் என்பதற்காக ஈமானை அடகு வைத்து விடுகின்றார்கள் . நாம் உயர்ந்த இஸ்லாமிய மார்க்கத்தில் இருக்கின்றோம் .அல்லாஹ்வால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரே மார்க்கம் இஸ்லாம் என்ற உயர்ந்த உணர்வையும் மறந்து , அந்நிய மதத்தை ஏற்றுக் கொண்டு காதல் திருமணம் செய்து கொள்கிறார்கள். தீனுல் இஸ்லாத்திற்காகத் தம் உயிரையே தியாகம் செய்தார்கள் சுமைய்யா ரலியல்லாஹூ அன்ஹா அவர்கள் .ஆனால் உயிர் வாழ வேண்டும் என்பதற்காக மார்க்கத்தின் மதிப்பே தெரியாமல் நம்மவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
நாம் எத்தகைய மார்க்கத்தைச் சார்ந்து இருக்குறோம் என்று தெரிவிக்க அல்குர்ஆன் , நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் பொன்மொழிகளும் உள்ளன. அவை அனைத்தையும் மறந்து யார் பின்னே நாம் போய்க்கொண்டிருக்கின்றோம் என்பதையாவது நாம் அறிவோமா ? அன்று சுமைய்யா ரலியல்லாஹூ அன்ஹா அவர்கள் வாழ்ந்த வாழ்வு அவர்கள் செய்த உயிர்த் தியாகம் ஒரு துளியாவது நம்மிடம் இருக்கின்றதா …?
யோசிப்போம்…..
அல்லாஹ்வே ! அவர்கள் வாழ்ந்து காட்டிய அந்தத் தியாகச் சுடரில் எங்களையும் இணைத்து . இம்மண்ணில் ஒளிவீசச் செய்வாயாக….. மறுமையில் அந்த நல்லோர்களோடு எங்களையும் சேர்த்தருள்வாயாக…
ஆமீன் ….
Comments
Post a Comment