ஷரீஅத் & தரீகத் & ஹகீகத் & மஅரிஃபத் ...
ஷரீஅத் & தரீகத் & ஹகீகத் & மஅரிஃபத் ...!!!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகதுஹூ
யா கரீமல் இஹ்ஸான் :
ஷரீஅத் & தரீகத் என்பதை இன்று தவறாக விளக்கம் சொல்லப்படுகிறது . அந்த தவறை நாம் திருத்திக் கொள்ளும் ,தெளிவாக விளக்கிக் கொள்ளவும் இறைவன் நமக்கு அருள் புரிவானாக ... ஆமீன்
ஷரீஅத் என்பது குணம் , தரீகத் என்பது உள்ளமை . ஷரீஅத் உடல் என்றால் ,தரீகத் என்பது அதன் உயிர் . ஷரீஅத் என்பது ( வெளிப்படையானது ) பகிரங்கமானது , தரீகத் என்பது ( மறைமுகமானது ) அந்தரங்கமானது .
நினைவில் நாம் வைத்துக்கொள்ள வேண்டிய மிக முக்கிய மான விசையம் இது : ஷரீஅத் என்பது தரீகத்தின் அடிப்படையாகும் ஆனால் ! இன்று சில அறிவிலிகள் இறைநேசர்கள் போதித்த ஆன்மீக போதனைகளையும் , ஞானங்களையும் சரியாக விளங்கிக் கொள்ளாமல் . தான்தோன்றி தனமாக , இன்னும் அறை குறை மதியோடு ஷரீஅத் என்பது வேறு தரீகத் என்பது வேறு என்றும் .ஷரீஅத் என்பதை கடந்தது தான் தரீகத் இருக்கிறது என்றும் கூறுகிறார்கள் .
அதாவது - ஷரீஅத் என்பதும் , தரீகத் என்பதும் வெவ்வேறு பாதை ஒன்றோடு ஒன்று சேரது என்று தவராக நினைத்து கொண்டது மட்டும் இல்லாமல் அது தான் உண்மையா ஞானம் என்று மக்களுக்கு மத்தியில் சொல்கிறார்கள் . இது தவறான ஞானம் .
ஷரீஅத் என்பது தரீகத்தின் அடிப்படையாகும் . ஹகீகத்திற்க்கு வழி காட்டியாகும் ,ம அரிஃபத்தின் திரையை விலக்குவாதம் . ஆகவே ஷரீஅத்தினை பின்பற்றி செல்லுதல் முஸ்லிம்கள் , மற்றும் ஞான குருவின் சீடர்கள் ஆகிய ஒவ்வொருவரும் மீதும் மிகவும் இன்றியமையாத்தாகும் .
ஷரீஅத் என்பது உடல் ,
தரீகத் என்பது உயிர் இதில் ஒன்று இல்லை என்றாலும். மற்றொன்றை பெற முடியாது .என்பதை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும் .
ஷரீஅத் வெளிப்படையானது தரீகத் அந்தரங்கமானது என்பதை நாம் ஒவ்வொரு இபாத்ததிலும் காணலம் ஷரீஅத் ,தரீகத் என்பது ஒரு உடல் ஒரு உயிர் போல .எனவே
இவ்விரண்டும் ஒன்று சேர்துதான் இருக்க வேண்டுமே தவிற இதில் ஒன்றை விட்டாலும் நாம் செய்யும் எந்த ஒரு வணக்க வழிபாடும் இறைவனால் அங்கிகறீக படமாட்டது . என்பதற்கு ஹதீஸூகள் உள்ளன
ஷரீஅத் - துக்கு உதாரணம் :
ஷரீஅத் ( வெளிப்படையானது )
ஹதீஸ் : 1 :
النبي صلى الله عليه وسلم أنه قال : لا صلاة لمن لم يقرأ بفاتحة الكتاب .
ஹதீஸ் : 2 :
لا صلاة إلا بفاتحة الكتاب
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : யார் சூரத்துல் பாதிஹாவை ஓதாவில்லையோ அது தொழுகை அல்ல !
தரீகத் - துக்கு உதாரணம்
( அந்தரங்கமானது )
ஹதீஸ் : 1 :
لا صلوة الا حضور القلب
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : உள்ளம் ஈடுபடாமல் எந்த தொழுகையும் இல்லை !
நாம் தொழுகிற தொழுகை இறைவனிடம் இபாதத் ( வணக்கம் ) என்ற அந்தஸ்தை பெற வேண்டும் என்றால் ஷரீஅத் ( வெளிரங்கமான ) என்ற சூரத்துல் பாதிஹாவும் ( அல்ஹம்து சூராவும் ) இன்னும் தரீகத் ( அந்தரங்கமான ) என்ற உள்ளம் பறி சுத்தமானதாகவும் இருக்க வேண்டும்
எனவே ஷரீஅத்தும் , தரீகத்தும் வெவ்வேறு அல்ல இரண்டும் ஒன்றுதான் என்பதை விளங்கி கொள்வோம் ...
யாரவது ஷரீஅத் என்பது வேறு தரீகத் என்பது வேறு என்று சொன்னால் அவருக்கு ஆன்மீக ஞானம் அறவே கிடையாது என்று எண்ணிக் கொள்ளுங்கள் .
இன்ஷாஅல்லாஹ் இந்த விளக்கமே போதும் என்று நினைக்கிரேன் .....
Comments
Post a Comment