யா ரசூலே..! யா ஹபீபே....!!!


       என் உயிருக்குள் உயிராகி என்               உணர்வுக்குள் உணர்வாகிய என்                               நாயகமே..!


என் உயிரோவியத்தின் சுவாச மூச்சே..!

என் நாடி நரம்புகளின் புத்துணர்ச்சியே..!

என் ஈமானின் இனிய சுவாசமே..!

என் உயிராய் அமைந்து விட்ட என் ஆருயிரே..!

எம்மானே! இரசூரே! என்னவென்று உரைப்பேன் உங்கள் புகழை..!

எப்படி வர்ணிப்பேன் தங்கள் பேரழகை..!

வர்ணிக்க தெரியவில்லை நாயகமே..!

என்றாலும் கோடி ஆசைகள் என் இதயமேனும் வீட்டில் என் உயிரே..!

மண்ணறையில் தங்கள் தரிசனம் கிடைக்க எனக்கோர் வரம் வேண்டும் கண்மணியே!

என் இறுதி மூச்சை தங்கள் காலடியில் விட எனக்கோர் வரம் வேண்டும் கண்மணியே!

சுவனமெனும் சோபன வீட்டில் தங்களுடன் நான் இருக்க எனக்கோர் வரம் வேண்டும் கண்மணியே..!

தங்கள் தளிர் கரங்களால் என்னை அள்ளி கப்ரில் வைத்திட எனக்கோர் வரம் வேண்டும் கண்மணியே..!

என் உயிர் பிரியும் வரை என் நாவு தங்களை புகழ்ந்துக்கொண்டே இருக்க எனக்கோர்
வரம் வேண்டும் கண்மணியே..!

இப்படியே கோடான கோடி ஆசைகள் இந்த பாவிக்கு கண்மணியே..!

என் இதயமென்னும் இல்லத்தில் ஒரு தவம் பல நாளாய் காத்து கிடக்கிறது….

ஆம்! அது என்ன தெரியுமா கண்மணியே..?

கண்மூட முன்னர் கண்மணியே தங்களை கனவிலேனும் காண எனக்கோர் பாக்கியம் வேண்டும்..!

தங்கள் பொன்னான மேனியை கண்ணார நான் கண்டு கறை படிந்த என் பாவம் கழுவிட எனக்கோர் பாக்கியம் வேண்டும்..!

என் உயிர் என்னை விட்டு பிரியும் முன் ஒரே ஒரு வினாடியேனும் தங்கள் பேரழகை என் கண்களால் பருக எனக்கோர் பாக்கியம் வேண்டும்..!

கருணை வடிவே! காருண்ய திலகமே..!
உங்கள் அடிமையின் துயர் துடைக்க அருட்கண் கொண்டு பாருங்கள்..!

உங்கள் ஆதரவை தாருங்கள்..! யா ரசூலே..! யா ஹபீபே....!!!



Comments

Popular

இஸ்லாமிய கேள்வி பதில் :- பாகம் : 5

சத்திய இஸ்லாத்திற்காக ஸஹாபி பெண்களின் தியாகங்கள்..!

கஃபாவை பற்றிய சிறப்பு & ருசிகர தகவல்கள்

இஸ்லாமிய கேள்வி பதில் .!! பாகம் : 4

இஸ்லாமிய கேள்வி பதில் ..!! பாகம் : 2

புனித ஹஜ்ஜின் ஐந்து நாட்கள் செயல் முறை விளக்கம்

முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ( ரலியல்லாஹூ அன்ஹூ ) ஆண்டகை அவர்களின் சிறப்பு திருநாமங்கள்