வழிகேடர் பீ.ஜே. அவர்கள் நம்மை பார்த்து கேட்ட கேள்விகள்
பித்அத்வாதிகளிடம் கேட்ட கேள்விகள்..?
வழிகேடர் பீ.ஜே. அவர்கள் நம்மை பார்த்து கேட்ட கேள்விகள் :-
கூட்டு துஆ நல்லது என்று சொன்னால் மவ்லூது நல்லது என்று சொன்னால் இவ்வளவு நல்ல செயலை நபியவர்கள் எமக்கு சொல்லித் தராமல் போய்விட்டார்கள் என்று நபியையே குறை சொல்வதாக ஆகாதா...?
மார்க்கத்தை அல்லாஹ் பூரணப்படுத்தி விட்டதாகச் சொல்கின்றான். மவ்லூது நல்ல செயல் என்று சொன்னால் மார்க்கத்தை அல்லாஹ் பூரணப்படுத்தவில்லை.
நாம்தான் கூட்டு துஆ, கத்தம், கந்தூரி என புதிது புதிதாக உருவாக்கி மார்க்கத்தைப் பூரணப்படுத்தி வருகின்றோம் என்று சொல்வதாகாதா..?
கத்தம், கந்தூரி போன்ற நல்ல செயல்கள் அல்லாஹ்வுக்கும், ரஸுலுக்கும் தெரியாமல் போய்விட்டது என்று சொல்வதாகாதா? என்றெல்லாம் கேள்விக் கணைகளைத் தொடுத்து வந்தார்...!!
இப்போது இதே கேள்விகள் அவர்கள் பக்கம் திரும்பியுள்ளது :-
சூனியம் என்பது அன்றுதொட்டு இன்றுவரை இருந்து வருகின்றது. அல்லாஹ் நாடினால் சூனியத்தால் பாதிப்பு வரும் என்று நம்புவது ஷிர்க் என்றிருந்தால் அதை நபியவர்கள் அறிவித்திருக்க வேண்டும்.
அப்படி அவர்கள் அறிவிக்கவில்லையாம். நுணுக்கமான ஷிர்க்காம். இவர்கள்தான் இதைக் கண்டுபிடித்துச் சொல்கின்றார்களாம்.
அப்படியென்றால், மார்க்கம் இன்னும் பூரணமாகவில்லை. நாம்தான் கொஞ்சம் கொஞ்சமாக மார்க்கத்தைப் பூரணப்படுத்திக் கொண்டிருக்கின்றோம்.
சூனியத்தில் ஷிர்க் இருக்கும் விடயம் நபியவர்களுக்குக் கூடத் தெரியாமல் போய்விட்டது. மார்க்கத்தை நபியவர்கள் தெளிவாக, பூரணமாக மக்களுக்குப் போதிக்கவில்லை. நாம்தான் மார்க்கத்தின் முக்கியமான ஒரு அடிப்படையைக் கண்டுபிடித்திருக்கின்றோம்.
இது நபிக்குக்கூட தெரியாமல் போய்விட்டது. எங்கள் தலைவர் கண்டுபிடித்தார்.
நபி(ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் ) அவர்கள் சத்தியத்தைத் தெளிவாகப் போட்டு உடைக்கவில்லை. நாம்தான் போட்டு உடைக்கின்றோம் என்று கூறப்போகின்றீர்களா..?
இவர்கள் தமது இந்த பத்வா மூலம் தெள்ளத் தெளிவாக நாம் வழிகேடர்கள் என்பதை இனங்காட்டியுள்ளனர்.
எனவே, இந்த வழிகேடர்கள் விடயத்தில் விழிப்போடு இருப்பது அவசியமாகும். பொதுமக்கள் இவர்கள் வழிகேடர்கள் என்பதை உணர்ந்து இவர்களை விட்டும் விலகி நடக்க வேண்டும்.
சூனியத்தை நம்புபவர்கள் அல்லாஹ்வின் அதிகாரத்தை சூனியக்காரனுக்கு கொடுக்கின்றார்கள். அதனால் இணைவைக்கின்றார்கள் என்று தவறாகப் பிரசாரம் செய்கின்றனர்.
சூனியக்காரனுக்கு எந்த ஆற்றலும் இல்லை. அல்லாஹ் நாடினால்தான் சூனியம் பாதிப்பை உண்டுபண்ணும் என்று நம்பும்போது அங்கே அல்லாஹ் மீதுதான் நம்பிக்கை வைக்கப்படுகின்றது. சூனியத்தின் மீதல்ல.
தஜ்ஜால் வந்து பல அற்புதங்களைச் செய்வான். இறந்த ஒருவரை உயிர்ப்பிப்பான் என்றெல்லாம் ஹதீஸ்கள் கூறுகின்றன. இதை நம்புபவர்கள் அல்லாஹ்வின் அதிகாரத்தை தஜ்ஜாலுக்குக் கொடுத்துவிட்டனர் என்று கூற முடியுமா? அப்படியென்றால் தஜ்ஜால் குறித்த ஹதீஸ்களை நம்புபவர்களும் முஷ்ரிக் என்று கூற வேண்டும்.
ஆனால் தஜ்ஜால் பற்றிய ஹதீஸை மறுக்கும் அபுல் அஃலா மவ்தூதி அவர்களுக்கு மறுப்பெழுதியவர்கள் அல்லவா இவர்கள். இவர்கள் எப்படி அந்த ஹதீஸை மறுப்பார்கள்..?
எனவே, சூனியத்தை நம்புபவர்கள் சூனியக்காரனை அல்லாஹ்வாக ஆக்குகின்றனர் என்பது பொய் வாதம். இதுதான் அதனது அர்த்தம் என்றால் நபியவர்கள் அதனைச் சுட்டிக்காட்டி இருப்பார்கள்.
நபி(ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் ) அவர்கள் கூறாத ஒரு கொள்கையைக் கூறுவதன் மூலமாக இவர்கள் கொள்கை ரீதியான பித்அத்வாதிகள் என்பதை நிரூபித்து வருகின்றனர்....
அல்லாஹ் நம்மை இந்த வழிகெட்ட பிஜெ விட்டு பாதுகாபனாக ...!
ஆமீன்....
Comments
Post a Comment