நாம் எதற்காக இங்கு வந்தோம் ?

      நாம் எதற்காக இங்கு வந்தோம் ?




என்னுடைய பாசநேசத்துக்குறிய ஆன்மீக நண்பர்களுக்கு மட்டும்....!!!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

இதில் முறையாக ஷெய்கிடம் பைஅத் வாங்கி அந்த வழியில் செயல்படுபவராக இருக்கலாம்.

இன்னும்சிலர் இந்த வழியில் நாமும் பயணிக்க வேண்டும் என்று என்ணிக்கொண்டு இந்த வழியை மிகவும் ஆசிப்பவராகவும் அதற்கான முயற்சியில் ஈடுபடாமல் இருப்பார்கள்.

இன்னும் சிலர் காமிலான ஷெய்கைத் தேடிக்கொண்டு காலத்தை வீன் விரயம் செய்வார்கள்.

காமிலான ஷெய்கை தொட்டுவிட்டால் ஞானம் அனைத்தும் நமக்கு கிட்டிவிடும் என்பது இவர்களின் நிணைப்பு இதுவும் தவரான நினைப்பு. தான் உழைத்து சம்பாதித்த ஒன்றில்தான் அதன் அருமையும் அதை பாதுகாக்கும் என்னமும் இருக்கும்.

குருடன் மற்றவர்கு வழிகாட்ட முடியாது தன் ரப்பை தரிசித்த ஒரு ஷெய்கே மற்றவர்கு வழிகாட்டலாம் இதில் ஷெய்கின் வழிகாட்டல் 25 % என்றால் உங்களின் உழைப்பும் உறுதியும் விடாமுயற்சியும் 75 % ஆகும். இந்தப்பாதையில் பயணிக்க யாருக்கு ஆசை இருக்கிறதோ அவருக்கு அல்லாஹ் நாடிவிட்டான் என்று பொருளாகும் நாம் இதற்காகவே இப்பிறவி எடுத்துள்ளோம் என்பது குறிப்பிடதக்கது.

கடந்த காலங்களில் ஆன்மீக என்பது இலையில் மறைந்த கனியதுபோல் பகிரங்கமற்ற நிலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது ஷெய்கிடம் ஞானதீட்சை பெறுவதும் அதைப்பற்றி பேசுவதும் மிக இரகசியமான ஒன்று.

ஆனால் இன்று அதிகமான அளவு
தெரிந்துகொள்ளும் வாய்ப்பு  உண்டு
இந்தப்பாதையில் இருப்பவர்களை
தெரிந்துகொள்ளும் வாய்ப்பும் உண்டு
இதில் யாரிடமேனும் தொடர்பை
ஏற்படுத்தி உங்களுக்கும் இந்தப்பாதையில் ஈடுபடும் வாய்பை தேடிக் கொள்ளுங்கள்  ..

முகநூலில் அதிகமான பதிப்புகள்
கடந்த காலத்தின் நிகழ்வுகளைப்பற்றி
ஹதீஸ் நபிமார்களின் வரலாறு வலி மார்களின் நிகழ்வுகள்  போன்றவைகளை படிப்பதும் Like போடுவதும்..

விமர்சனங்கள் செய்வதும் அதை வைத்து விவாதம் செய்து பட்டிமன்ற
மாக்குவதும் வஹாபிகளை விமர்சிப்பதும் இவைகளெல்லாம் பொழுது போக்காக செய்து கொண்டிருக்கிறோம்....!!!

ஆனால் நம்மைப்பற்றி நாம் சிந்திப்பதில்லை நாம் எதற்காக இங்கு வந்தோம் ? 

அதற்காக என்ன செய்தோம ? 
    என்று ஒரு நிமிடம்.

நம்மையே நாம் கேட்டுக்கொள்வோம்.
இந்த உடலில் உயிர் இருக்கும்போதே
நம்மை நாம் அறிய வேண்டும் இந்த
உடலை இழந்தால் நஷ்டவாளி ஆகி
விடுவோம் .

என்னை அறியாமல்
எனக்குள்ளே  நீ இருக்க  உன்னை
அறியாமல் உடல் இழந்தேன் பூரணமே என்றார் பட்டிணத்தார்.

இனிமேலாவது  ஒரு ஷெய்கை
தொட்டுக்கொண்டு  ஞானப்பாதையில்
பயணத்தை தொடர்ந்து விடுவோம்.
இன்ஷா அல்லாஹ்.....

Comments

Popular

இஸ்லாமிய கேள்வி பதில் :- பாகம் : 5

சத்திய இஸ்லாத்திற்காக ஸஹாபி பெண்களின் தியாகங்கள்..!

கஃபாவை பற்றிய சிறப்பு & ருசிகர தகவல்கள்

இஸ்லாமிய கேள்வி பதில் .!! பாகம் : 4

இஸ்லாமிய கேள்வி பதில் ..!! பாகம் : 2

புனித ஹஜ்ஜின் ஐந்து நாட்கள் செயல் முறை விளக்கம்

முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ( ரலியல்லாஹூ அன்ஹூ ) ஆண்டகை அவர்களின் சிறப்பு திருநாமங்கள்