ஈஸால் ஸவாப்
ஈஸால் ஸவாப்
السلام عليكم ورحمة الله وبركته
ஈஸால் ஸவாப் குறித்து ஹம்பலி இமாம் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்களின் தீர்ப்பு :
قال احمد المروزي سمعت احمد بن حنبل رضى الله عنه يقول اذا دخلتم المقابر فاقرؤا بفاتحة الكتاب والمعوذتين وقل هو الله احد واجعلوا ثواب ذلك لاهل المقابر فانه يصل اليهم
[ مرقات - ج - ٢ ، ص - ٣٨١ ، اعانة - ج - ٢ - فصل في الصلات على الميت ]
கப்ருக்குச் சென்றால் பாத்திஹா சூராவையும் முஅவ்வித்தைனியையும் குல் ஹூவல்லாஹூ அஹதையும் ஓதி அதன் நன்மையை கப்ராளிகளுக்குக் சேர்த்து வையுங்கள் . கண்டிப்பாக அது அவர்களை சென்றடையும் என்று அஹமத் இப்னு ஹம்பலி ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள் கூற நான் கேட்டேன் .
அறிவிப்பவர் : அஹ்மதுல் மரூஸி ,
ஆதாரம் : மிர்காத் - பாகம் - 2 , பக்கம் - 381 . இஆனா பாகம் 2 ( பஸ்லுன் பிஸ் ஸலவாத்தி அல ல் மய்யித்தி)
பெற்றோர்கள் மரணித்த பிறகு அவர்களுக்காக பிள்ளைகள் செய்ய வேண்டிய நம்மை [ கடமை ] இருக்கிறதா ?
ஒரு மனிதர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து யா ரஸூலல்லாஹ் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் பெற்றோர்கள் மரணித்த பின்பு அவர்களுக்காக பிள்ளைகளாகிய நாங்கள் செய்ய வேண்டிய நன்மைகள் ஏதேனும் இருக்கிறதா ? என்று கேட்டார். அப்போது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் ஆம் இருக்கிறது அவர்களுக்காக தொழுது , நன்மை சேர்த்தல் , அவர்களுக்காக பிழைபொறுக்கத் தேடுதல் , அவர்களின் வாக்குறுதிகளை நிறைவேற்றுதல் , அவர்களின் சுற்றத்தினர்களுடன் சேர்ந்த.து நடந்து கொள்ளுதல் , அவர்களின் நோழர்களுக்கு சங்கை செய்தல் என்று கூறினார்கள்
[ ஆதாரம் :: ஆபூதாவூத் , இப்னு மாஜா , மிஷ்காத் ≈ பக்கம் - 420 , பாபுல் பிர்ரி வஸ்ஸிலா ]
Comments
Post a Comment