இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்ட மார்க்ம் எது
இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்ட மார்க்ம் எது ....?
الحمد لله نحمده و نصلى على رسوله الكريم اما بعدان الدين عند الله الاسلام
السلام عليكم ورحمة الله و بركتهஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகத்துஹூ :
பேரன்பு மிக்க இஸ்லாமிர்களே :-
இஸ்லாம் என்பது :- அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு வழிபட்டும் , அவன் விலக்கியவைகளைத் தவிர்த்தும் நடப்பது மாகும் .இஸ்லாமிய மார்க்கம் என்பது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் - அவர்களால் புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட மார்க்கம் அல்ல .மாறாக நபி ஆதம் அலைஹி வஸல்லம் அவர்களின் காலம் தொட்டே [ வாழையடி வாழையாக ] இன்று வரை ஏன் உலக அழியும் நாள் வரை இருந்து கொண்டே இருக்க கூடிய ஒரே மார்க்கம் இஸ்லாம்தான் .
அல்லாஹூவால ஆங்கரிக்கப்பட்ட மார்க்கத்திற்கு ' இஸ்லாம் ' என்றும் ,அதைப் பின் பற்றுவோருக்கு ' இறைவனுக்கு முற்றும் வழிபட்டோர் ' என்ற அர்த்தத்தை உடைய " முஸ்லிம் " என்று சொல்லப்படும் .
இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்ட மார்கம் :
ان الدين عند الله الاسلام
நிச்சயமாக அல்லாஹ்வால ஆக்கப்பட்ட மார்க்கமாவது இஸ்லாமாக இருக்கும் .
இது இஸ்லாம் அல்லாத எந்த மார்கமாக இருந்தாலும் அது இறைவனால் அங்கிகரிக்கப் படமாட்டாது என்று தனது திருமறையில் கூறி விட்டான் :
و من يتبغ غير الاسلام دينا فلن يقبل منه وهو في الاخرة من الخسرين
இஸ்லாத்தையன்றி ( வேறொரு ) மார்க்கத்தை எவரேனும் விரும்பி எடுத்துக் கொண்டால்,நிச்சயமாக அவனிடமிருந்து ( அது ) அங்கீகரிக்கப் படமாட்டாது .
இந்த ஆயத்தில் இருந்து நமக்கு இறைவன் கூறுவது என்ன வென்றால் , இஸ்லாம் அல்லாத போலி மார்க்கமும் உண்டாகும் அது உண்மையான மார்கமாக இருக்காது .அதை ஏற்றுக்கொண்டால் நாளை அதாவது மறுமையில் நஷ்டமடைவான் ( நரகத்தில் நுழைவான் ) என்பதில் கடுகளவும் எந்த சந்தேகமும் இல்லை .
எனவே தீனுல் இஸ்லாத்தில் நிலைத்திருக்க அவனிடம் துஆ செய்வது கடமையாகும் :-
اهدنا الصراط المستقيم
" எங்களை நேரான வழியில் நடத்தாட்டுவாயாக " என்று ஒவ்வொரு தொழுகையிலும் கேட்பது பர்ளாக்கப் பட்டுள்ளது .
ஒருவருக்கு இவ்வுலகில் எவ்வளவு பாக்கியங்கள் கொடுக்கப் பட்டிருந்தாலும் - இஸ்லாம் - என்ற பாக்கியம் கிடைத்ததற்கு அவைகயெல்லாம் சமமாக மாட்டது.எனவே இஸ்லாம் நம்மிடம் நிலைத்திருப்பதற்காக நாம் ஒவ்வொருவரும் துஆ கேட்பது பர்ளாக்கப் பட்டிருப்பது போல் , அந்த பாக்கியம் நமக்கு கிடைத்ததற்காக நன்றி செலுத்துவதும் பர்ளாகும் .
முஸ்லிமான ஒருவர் தீனுல் இஸ்லாத்தை மகத்துவம் மிக்கதாக எண்ணாமலும் அதற்காக நன்றி செலுத்தாமலும் இருப்பதால் அவருடைய கடைசி முடிவு தீய முத்திரை உடையதாக ஆகிவிடும் என்பதை பயப்பட வேண்டும் . அவ்வாறு ஆவது விட்டும் அல்லாஹ் நம் அனைவரையும் காத்தருள்வானாக ...!
தீன் ( மார்க்கம் ) என்னும் கட்டிடத்திற்கு நான்கு தூண்கள் இருக்கிறது :-
1 - முதலாவது தூண் :-
ஈமான் [ நம்பிக்கை ]
2 - இரண்டாவது தூண் :-
இஸ்லாம் [ வழிபாடு ]
3 - மூன்றாவது தூண் :-
தவ்ஹீத் [ ஏகத்துவம் ]
4 - நான்காவது தூண் :-
மஃரிபஃ [ அல்லாஹ்வை அறிதல் ]
இந்த நான்கின் ஏதேனும் ஒன்று மாறுபட்டாலும் தீன் ( மார்கம் ) மாறுபட்டுவிடும் .
ஆகவே :-
அல்லாஹ்வின் அருளாளும் .
நபிகள் கோமான் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் பரக்கத்தாலும்
உலகில் உள்ள இறைநேசர்களின் மற்றும் நமது ஷேகு மார்கள் பொருட்டாலும் ...
அனைவரையும் தீனுல் இஸ்லாத்தில் வாழவும் , அதன் படியே மரணிக்கும் தவ்பீகை தருவானாக ஆமீன் ஆமீன் ஆமீன் !
யாரப்பல் ஆலமீன் .......
வழிகெட்டோர் யார்ராயினும் அவர்களுக்கு நேர் வழி பெற இறைவனிடத்தில் துஆ செய்பவர்களாக நாமாக இருப்போம் .
ஆமீன்...
Comments
Post a Comment