அஹ்லே பைத்துகள் சிறப்பு
அஹ்லே பைத்துகள் சிறப்பு
அஹ்லே பைத்துகளின்சிறப்புகளும் , கண்ணியமும் ...!
அஸ்ஸலாமு அலைக்கும்
வ ரஹ்மதுல்லாஹி வ பரக்கத்துஹூ
قل لا اسئلكم عليه اجرا الا المودة في القربي [ ٤٢=٢٣
என் சுற்றத்தார்களிடம் அன்பு வைக்க வேண்டும் என்பதை தவிர வேரெந்த கூலியையும் உங்களிடம் நான் கேட்கவில்லை.
عن ابي هريرة قال قال رسول الله صلي الله عليه و سلم خيركم خيركم لاهلي من بعدي
என் மறைவுக்குப் பிறகு என் குடும்பாத்தார்ருக்கு நல்லவரே ! உங்களில் நல்லவர் என்று நபி [ ஸல்லல்லாஹூ அலைஹி வ ஸல்லம் அவர்கள் கூறினார்கள் .
[ அதாரம் = மஜ்மஸ் ஸவாயித் பா= 9 , பக்கம் = 174 , அறிவிப்பவர் =அபூஹூறைறா ரலியல்லாஹூ அன்ஹூ ]
அஹ்லுபைத்துகள் என்பவர்கள் நபிகள் கோமான் எம் பெருமானார் [ ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் ] அவர்களின் பரிசுத்த இரத்ததிலிருந்து உதித்தவர்கள் என்ற காரணத்தினால் அஹ்லேபைத்துகளுக்கு என்று தனிபட்ட சிறப்பும் ,தனிபட்ட கண்ணியமும், தனிபட்ட கெளரவமும் இருக்கிறது என்பதைச் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பது அல்ல.
ஏன் என்றால் !
و ان مالك بن سنان رضي الله عنه مص الدم من وجه رسول الله صلي الله عليه و سلم ثم ازدرده فقال لن تتمسك النار [ فتح الباري في شرح حديث البخاري
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வ ஸல்லம் அவர்களின் புனித உடம்பிலிருந்து வெளிப்பட்ட உதிரத்தை அருந்தியவரைப் பார்த்து நரகம் தீண்டாது என்று கூறினார்கள்
[ பத்துஹூல் பாரி புகாரி ஹதீஸ் எண் =4070 க்குரிய விளக்கவுரை ]
இறை நேசர்களே !!!
இந்த ஹதீஸை பாருங்கள் சிந்தனையும் செய்யுங்கள் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வ ஸல்லம் அவர்களின் புனித மான உதிரத்தை குடித்த ஒரு ஸஹாபியின் [ரலியல்லாஹூ அன்ஹூ ] அவர்களின் உடலை நரகம் நெருப்பு தீண்டாது என்றால் நபிகள் கோமான் எம்பேருமான்ஸல்லல்லாஹூ அலைஹி வ ஸல்லம் அவர்களின் சதைத்துண்டாக இருக்கின்ற சுவனத் தலைவியான ஃபாத்திமா நாயகி [ ரலியல்லாஹூ அன்ஹா ] அவர்களையும் அவர்களின் சதைத்துண்டுகளை அஹ்லே பைத்துகளை நரக நெருப்பு எப்படித் தீண்ட முடியும் ?
இந்த சிறப்பே அஹ்லே பைத்துகளை பற்றி விளங்கி கொள்ள போதுமாகம் என்றாலும் குழப்பமும் குதர்க்கமும் நிறைந்த இக்காலகட்டத்தில் அஹ்லே பைத்துகளைப் பற்றி மரியாதையைக் குலைப் பதற்க்காகவே பல கூட்டங்கள் திட்டமிட்டு செயல் பட்டு வருகிறது .
எனவே அஹ்லே பைத்துகளைப் பற்றிய மாண்புகளையும் ,சிறப்புகளையும் , தெரிந்து வைத்துக் கொள்வது நம் அனைவரின் மீதும் கடமைகளில் ஒன்றாகும்...!!!
அஹ்லே பைத்துக்கள் என்றால்
யாரைக் குறிக்கும் :
யாரைக் குறிக்கும் :
قل لا اسئلكم عليه اجرا الا المودة في القربي
என் சுற்றத்தார்களிடம் அன்பு வைக்க வேண்டும் என்பதை தவிர வேரெந்த கூலியையும் உங்களிடம் நான் கேட்கவில்லை என்ற வசனம் இறங்கிய போது
قيل يا رسول الله من قرابتك هؤلاء الذين وجبت علينا
நாயகமே ! [ ஸல்லல்லாஹூ அலைஹி வ ஸல்லம் ] நாங்கள் அன்பு வைக்க கடமைப் பட்ட உங்கலின் சுற்றத்தினர் யார் ?
என்று ஸஹாபா பெருமக்கள் நபி [ ஸல்லல்லாஹூ அலைஹி வ ஸல்லம் ] அவர்களிடம் வினவினார்கள் .
அதற்க்கு
ஹஜரத் அலி. [ ரலியல்லாஹூ ]
ஹஜரத் ஃபாத்திமா [ ரலியல்லாஹூ அன்ஹா ]
ஹஜரத் ஹஸன் [ ரலியல்லாஹூ ] ஹஜரத் ஹூஸைன் [ ரலியல்லாஹூ ] என்று பதிலளித்தார்கள் .
நபி [ ஸல்லல்லாஹூ அலைஹி வ ஸல்லம் ] அவர்கள் வந்தார்கள் அவர்களுடன்
ஹஜரத் அலி [ ரலியல்லாஹூ ]
ஹஜரத் ஃபாத்திமா [ ரலியல்லாஹூ அன்ஹா ]
ஹஜரத் ஹஸன். [ ரலியல்லாஹூ ] ஹஜரத் ஹூஸைன் [ ரலியல்லாஹூ ] அவ்விருவரையும் [ ஹஸன் ,ஹூஸைன் ரலியல்லாஹூ அன்ஹூமா ] தமது தொடையில் வைத்துக் கொண்டு ஒரு போர்வையால்.
انما يريد الله ليذهب عنكم الرجس اهل بيت و يطهركم تطهيرا [٣٣=٣٣]
உங்களை இறைவன் பரிசுத்தப் படுத்தி விட்டான் .என்ற ஆயத்தை ஓதினார்கள்
பிறகு ;
பிறகு ;
اللهم هؤلاء اهل بيتي فاذهب عنكم الرجس و طهرهم تطهيرا
இறைவா ! இதோ இவர்கள் என்னுடைய அஹ்லுபைத்துகளாகும் ஆகவா ! இவர்களை பரிசுத்தப்படுத்துவாயாக ! என்று பிரார்த்தித்தார்கள் [ வேறோரு அறிவிப்பில் இறைவா இதோ இவர்கள் முஹம்மதின் குடும்பத்தார்களாகும் .
ஆகவே இப்ராஹிம் [ அலைஹி வஸல்லம் ] நபியின் மீது உன் பரக்கத்தையும் கருணையையும் , சொரிந்ததைப் போல இவர்கள் மீது சொரிந்தருள் வாயாக என்று பிரார்த்தித்தாக வந்துள்ளது
அந்த போர்வைக்குள் நபி [ ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் ] அவர்களின் மனைவிமர்களின் ஒருவரான உம்மு ஸல்மா [ ரலியல்லாஹூ ] அவர்கள் நூழைந்து கொள்ள முயன்ற போது நபி [ ஸல்லல்லாஹூ அலைஹி வ ஸல்லம் ] அவர்கள் நூழைய விடாமல் தடுத்து வட்டதுடன் நிச்சயமாக நீங்கள் நபி [ ஸல்லல்லாஹூ அலைஹி வ ஸல்லம் ] அவர்களின் மனைவிமார்களில் உள்ளவராகும் .என்று கூறியதாக ஹதீஸ வந்துள்ள ரிவாயத் இந்த இடத்தில் சிந்தனைக்குரியதாகும் .[ நூல் =அப்ஸார் =123 ]
அந்த போர்வைக்குள் நபி [ ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் ] அவர்களின் மனைவிமர்களின் ஒருவரான உம்மு ஸல்மா [ ரலியல்லாஹூ ] அவர்கள் நூழைந்து கொள்ள முயன்ற போது நபி [ ஸல்லல்லாஹூ அலைஹி வ ஸல்லம் ] அவர்கள் நூழைய விடாமல் தடுத்து வட்டதுடன் நிச்சயமாக நீங்கள் நபி [ ஸல்லல்லாஹூ அலைஹி வ ஸல்லம் ] அவர்களின் மனைவிமார்களில் உள்ளவராகும் .என்று கூறியதாக ஹதீஸ வந்துள்ள ரிவாயத் இந்த இடத்தில் சிந்தனைக்குரியதாகும் .[ நூல் =அப்ஸார் =123 ]
السيد عند المسلمون من كان من السلالة النبوية و السيدان الحسن و الحسين ابنا علي [ المنجد ]
ஸய்யித் என்பது முஸ்லிம்களிடம் நபி [ ஸல்லல்லாஹூ அலைஹி வ ஸல்லம் ] அவர்களின் பாரம்பரியத்தில் வந்தவர்களுக்குக் கூறப்படும் .
அஸ்ஸய்யிதானி என்பது அலி [ ரலியல்லாஹூ அன்ஹூ ] அவர்களின் அருமைச் செல்வர்களான ஹஸன் , ஹூஸைன் [ ரலியல்லாஹூ அன்ஹூமா ] ஆகியோர்களைச் குறிக்கும் .
என்று உலக பிரசித்திப் பெற்ற அரபு அகராதியான அல் முஞ்ஜித் , அல் முஃஜமுல் வஸீத் ஆகிய கிரந்தங்களில் கூறப்பட்டுள்ளது .
அன்னை ஃபாத்திமா [ ரலியல்லாஹூ அன்ஹா ] அவர்களின் வயிற்றிலிருந்து கியாம நாள் வரை வந்து கொண்டிருப்பவர்களே அஹ்லே பைத்துகள் ஆவர்கள் ,என்று ஷைகுனா மாப்பிள்ளை லெப்பை ஆலிம் வலியுல்லாஹ் [ ரலியல்லாஹூ அன்ஹூ ] அவர்கள் தாங்களின் ஹத்யா ஷரீஃபின் =302 ,ம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்கள் .
அஹ்லே பைத்துகளை நேசிப்பது அவசியமா = ! ?
ஆம் ! அஹ்லே பைத்துகளை நேசிப்பது ஈமானின் ஒரு பகுதி ;அல்லாஹூ தஅலா குர்ஆனில் கூறுகிறான் முஃமிங்களே ! உங்களுக்கு மத்தியில் நான் நபியாக அனுப்பப்பட்டு உங்களுக்கு எத்தி வைக்க வேண்டியதை எத்தி வைத்தற்க்காக எவ்வித பிரதி பலனையும் உங்களிடமிருந்து எதிர் பார்க்கவில்லை என்றாலும் எனது சுற்றத்தார்களான அஹ்லு பைத்துகளிடம் அன்போடு நடந்துகொள்ள வேண்டும் என்பதைத்தான் உங்களிடம் கேட்கிறேன் என்று நபியே நீங்கள் அவர்களிடம் கூறுங்கள் [ ஷூரா =23 ]
எவர் கைவசம் என் ஆன்மா இருக்கிறதோ அவன் மீது சத்தியமிட்டுக் கூறுகிறேன் எவர் அஹ்லே பைத்துகளாகிய உங்களை அல்லாஹ்வுக்காகவும் அவன் ரஸூலுக்காகவும் பிரியம் வைக்க வில்லையோ அவருடைய இதயத்தில் ஈமான் நூழையாது
[திர்மிதி=மிஷ்காத் --570 ]
அல்லாஹ்வின் அன்பை பெற விரும்பினால் என்னை அன்பு வையுங்கள் எனது அன்பைப் பெற வேண்டுமானால் என் குடும்பத்தார்களை அன்பு வயுங்கள்
[ திர்மிதி = மிஷ்காத் = 573 ]
எவர் கைவசம் என் ஆத்மா இருக்கிறதோ அவன் மீது சத்தியமிட்டு சொல்கிறேன் அஹ்லே பைத்துகளே நம்மை யாரவது கோபப்ப்டுத்திவிட்டால் அல்லாஹ் அவரை கண்டிப்பாக நரகில் நூழைத்து விடுவான்
[ முஸ்தத்ரக் =3=150 ]
இப்படி என்னற்ற ஹதிஸூகளை நபிகள் கோமான் [ ஸல்லல்லாஹூ அலைஹி வ ஸல்லம் ] அவர்களே அஹ்லு பைத்துகளின் சிற்ப்புகளை விளக்கும் ஹதீஸூகளை கூறி வுள்ளார்கள் .
அஹ்லு பைத்துகளின் தனி சிறப்புகள் , மகத்துவம் குறித்து வந்துள்ள ஹதீஸூகளின் ஒரு சில மட்டும் இங்கே பார்ப்போம் :
ان فاطمة رضي الله عنها سيدة نساء اهل الجنة [ ترمدى ]
ஃபாத்திமா [ ரலியல்லாஹூ அன்ஹா ] அவர்கள் சுவனப் பெண்கணின் தலைவியாகும்
ஃபாத்திமா [ ரலியல்லாஹூ அன்ஹா ] அவர்கள் சுவனப் பெண்கணின் தலைவியாகும்
[ மிஷ்காத் = 568=571 ]
عن ابي سعيد قال قال رسول الله صلي الله عليه و سلم الحسن و الحسين سيد اشباب اهل الجنة [ ترمدي ]
ஸய்யிதுனா ஹஸன் ஹூஸைன் [ ரலியல்லாஹூ அன்ஹூமா ] அவர்கள் சுவனத்து வாலிபர்களின் தலைவர்களாகும் என்று நபிகள் கோமான் [ ஸல்லல்லாஹூ அலைஹி வ ஸல்லம் ] கூறினார்கள்
[ திர்மிதி =மிஷ்காத் = பக் =570 ]
كيف نصلي عليك اذا نحن صلينا في صلاتنا [ مسلم ]
இன்ஷா அல்லாஹூ தொடரும் ......
Comments
Post a Comment