இஸ்லாமிய கேள்வி பதில் :- பாகம் : 5
இஸ்லாமிய கேள்வி பதில் .!!
பாகம் : 5
குர்ஆனை பற்றி தெரிந்து கொள்ளவேண்டிய கல்வி :
81) திருக்குர்ஆனுக்கு முந்தைய வேதங்கள் எவை?
பதில் :
1.தவ்ராத், 2.ஸபூர் 3.இன்ஜீல் (ஆதாரம் : அபூதாவூத்)
82) திருக்குர்ஆனில் முதன் முதலில் முழுவதுமாக இறங்கிய சூரா எது?
பதில் :
சூரா ஃபாத்திஹா
83) திருக்குர்ஆன் லவ்ஹூல் மஹ் ஃபூலில் இருந்து எங்கு இறங்கியது?.
பதில் :
முதல் வானத்தில் பைத்துல் இஸ்ஸஹ் என்ற இடத்தில் இறங்கியது
84) திருக்குர்ஆன் முதல் (வஹீ) வசனம் எப்போது அருளப்பட்டது?
பதில் :
கி.பி.610ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்
85) திருக்குர்ஆன் எந்த இரவில் அருளப்பட்டது?
பதில் :
ரமலான் மாதத்தில் புனித லைலத்துல் கத்ர் என்னும் சங்கை மிகு இரவில் (ஆதாரம் 97.01)
ரமலான் மாதத்தில் புனித லைலத்துல் கத்ர் என்னும் சங்கை மிகு இரவில் (ஆதாரம் 97.01)
86) திருக்குர்ஆனின் கடைசி சூரா எங்கு இறக்கப்பட்டது?
பதில் :
மதீனாவில்
87) திருக்குர்ஆனில் மதீனாவில் இறங்கிய கடைசி சூரா எது?
பதில் :
சூரா நஸ்ரு
88) திருக்குர்ஆனை அல்லாஹ் எப்படி பாதுகாக்கின்றான்?
பதில் :
கல்வியாளர்கள் உள்ளத்தில் பாதுகாக்கின்றான்
89) திருக்குர்ஆன் ஒன்று திரட்டப்பட்ட காரணம் என்ன?
பதில் :
யமாமா என்ற போரில் ஏறத்தாழ 70ஹாஃபிழ்கள் (குர்ஆனை
மனனம் செய்தவர்கள்) ஷஹீதாக்கப்பட்டு வீரமரணம்
அடைந்ததால் (ஆதாரம் :புகாரி)
மனனம் செய்தவர்கள்) ஷஹீதாக்கப்பட்டு வீரமரணம்
அடைந்ததால் (ஆதாரம் :புகாரி)
90) திருக்குர்ஆனை ஒன்று திரட்டும் யோசனையை அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்களிடம் தெரிவித்தவர் யார்?
பதில் :
உமர் (ரலி)அவர்கள் (ஆதாரம் :புகாரி)
91) திருக்குர்ஆன் முதன் முதலில் அச்சிடப்பட்டது எப்போது?
பதில்:
ஹிஜ்ரி 1113
வது ஆண்டில்
வது ஆண்டில்
92) திருக்குர்ஆன் எங்கு முதன் முதலில் அச்சிடப்பட்டது?
பதில் :
ஜெர்மனில் ஹம்பர்க் நகரில்
93) திருக்குர்ஆன் என்ற வார்த்தையின் பொருள் என்ன?
பதில் :
ஓதுதல், ஓதப்பட்டவை, ஓதப்பட வேண்டியது என்பதாகும்.
94) திருக்குர்ஆனில் பிஸ்மில்லாஹ் எழுதப்படாத சூரா எது?
பதில் :
சூரா தவ்பா என்ற பராஅத் சூராவாகும்
95) திருக்குர்ஆன் ஒலி வடிவமாக இறங்கியதா? எழுத்து வடிவில் இறங்கியதா?
பதில் :
ஒலி வடிவில் இறங்கியது
96) திருக்குர்ஆனை ஒன்று சேர்த்தவர் என்ற சிறப்பு பெயருக்குரியவர் யார்?
பதில் :
ஹளரத் உஸ்மான் ரலியல்லாஹூ அன்ஹூ
97) திருக்குர்ஆனில் 'ஷத்து' குறியீடுகளை அமைத்தவர் யார்?
பதில்:
கலீல் இப்னு அஹ்மது அஸ்தீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள்
98) திருக்குர்ஆனுக்கு 'ஸபர், ஜேர், பேஷ்'என்னும் உயிர் குறியீடுகளை அமைத்தவர் யார்?
பதில் :
ஹிஜ்ரி 43ல் இராக் ஆளுநராக இருந்த ஹஜ்ஜாஜ் இப்னு யூசுப் என்பவராவார்.
99) திருக்குர்ஆனின் சூராக்களை வரிசைப்படுத்தியது யார்?
பதில் :
பதில் :
நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள்
100) திருக்குர்ஆனின் ஞானம் பெற்ற உலமாக்களை அதிகமாக உருவாக்கும் தமிழக மாவட்டம் எது?
பதில் :
வேலூர் மாவட்டம்...
தொடரும்...பாகம் - 6 ..
இன்ஷா அல்லாஹ் ...
Comments
Post a Comment