குர்பானி எப்போது கடமையாகும் ?
குர்பானியின் பொதுவான சட்டங்கள் !!!!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரக்கதுஹூ
கேள்வி : குர்பானி எப்போது கடமையாகும் ?
பதில் = ஹனபியீ மத்ஹபின் படி குர்பானி கடமை !
இமாம் அபூஹனீஃபா [ ரஹ் ] கூறுகிறார்கள் அந்த நேரத்தில் ஜகாத்து கொடுக்கும் அளவிற்கு ஒருவரிடம் பொருள் இருந்தால் குர்பானி கடமையாகிவிடுகிறது = அதாவது =612, 1/2 ,கிராம் வெள்ளியோ அல்லது 87 ,1/2 ,தங்கம் அந்த நேரத்தில் இருந்தால் குர்பானி "" வாஜிபு "" கடமையாகும்
ஷாஃஃபியீ மத்ஹபின் படி குர்பானி கடமை !
இமாம் ஷாஃபீ [ ரஹ் ] அவர்கள் கூறுகிறார்கள் ; குர்பானி தினத்தில் ,தனக்கும் ,தன் குடும்பத்திற்க்கும் உள்ள செலவு போக வசதி இருந்தால் குர்பானி கொடுப்பது சுன்னத்தாகும் ,
மேற்கண்ட இரண்டு இமாம்கள் அறிவிப்பிற்க்கும் ஹதீஸ்கள் உள்ளன .
குர்பானிக்கும் , ஜகாத்துக்கும் உள்ள வேறுபாடு !!!
ஜகாத் கொடுக்க தகுதி பெற்றவருக்கு அதற்கென வரையறுக்கப்பட்ட தொகையோ , பொருட்களோ ,ஓராண்டு முழுவதும் அவர் கைவசம் இருந்திருத்தல் மட்டுமே அவர் மீது ஜகாது கடமையாகும் .ஆனால் குர்பானியின் வரையளவு அப்படி அல்ல . ஒருவர் ஆண்டு முழுவதும் ஏழையாக இருந்து குர்பானிக்கென அறிவிக்கப்பட்ட நாட்களில் ரு நாள் காலை இந்தத் தகுதியை அவர் அடைந்து விட்டாலும் அவர் மீது குர்பானி கடமையாகும் .
குர்பானி கொடுப்பதற்க்கான அளவு :
87/ 1/2 கிராம் தங்கம் அல்லது 6121 / 2 கிராம் வெள்ளி இருந்தாலும் குர்பானி கடமையாகும் . அல்லது மேற் கூறப்பட்ட அளவிற்க்கு வியாபாரச்சரக்காகவோ , பணமாகவோ , வீடு ,கடை , லாட்ஜ் , மண்டபம் வாடகையின் மூலம் வருமனாம் வந்திருந்தாலும் ,குர்பானி கடமையாகும்
ஹஜ் எப்போது கடமையாகும் ?
யாருக்கு ஹஜ் செய்ய சக்தி இருக்குமோ அவர்கள் மீது ஹஜ் கடமையாக இருக்கும் [ அல் குர்ஆன் = 3 ; 97 ]
அரஃபா நோன்பு எந்த பிறையில் வைக்க வேண்டும் ?
நோன்பின் நன்மை : [ துல் ஹஜ் பிறை= 9 ] அரஃபா நாளில் நோன்பு வைப்பது பற்றி நபி [ ஸல்லல்லாஹூ அலைஹி வ ஸல்லம்] அவர்களிடம் கேட்டபோது , சென்று போன மற்றும் வர உள்ள வருடங்களின் பாவங்களை அது அழிக்கும் என பதில் கூறினார்கள் . [ அறிவிப்பாளர் அபூகாதா [ ரலியல்லாஹூ அன்ஹூ ] நூல் = முஸ்லீம் ]
மேற் கண்ட ஹதீஸின் மூலமாக துல் ஹஜ் பிறை -9 ம் நாள் நோன்பு வைத்தால் நம் பாவங்கள் அழிக்கப்படும் நன்மைகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு ,குர்பானி கொடுப்பவர்களுக்கும் ,கொடுக்காதவர்களுக்கும் நோன்பு வைக்கலாம் .ஹஜ் செய்பவர்களுக்கு அரஃபா நோன்பு இல்லை
தக்பீர் ஆரம்பிக்கும் நாள் முடியும் நாள் எது ?
[ விசுவாசிகளே ! துல் ஹஜ் மாதத்தில் குறிப்பிட்ட [ மூன்று ] நாட்கள் வரை அல்லாஹ்வை திக்ரு செய்யுங்கள் [ அல்குர்ஆன் = 2=203 ]
அரஃபாவுடைய தினமாகிய துல் ஹஜ் மாதம் பிறை 9 ம் நாள் ஈதுடைய நாளாகிய 10 -ம் நாளும் அடுத்து வரும் 11-12 13 , ஆகிய மூன்று நாட்களும் 9 -ம் நாள் காலை சுபுஹ்புடை தொழுகை முதல் 13 -ம் நாள் மாலை அஸருடைய ] தொழுகை வரையிலும் ஒவ்வொரு ஃபர்ளு தொழுகைக்குப் பின்னும் தக்பீர் கூறுதல் ஹனஃபீ மத்ஹபின் படி கட்டாயமாகும். ஷாஃபீயி மத்ஹபின் படி தக்பீர் கூறுவது சுன்னதாகும் .
குர்பானி கொடுப்பவர்கள் முடி , நகம் வெட்டலாமா ? நீங்கள் துல் ஹஜ் பிறையைக் கண்டு உங்களிடம் ஒருவர் குர்பானி கொடுக்க எண்ணினால் , அவர் தமது முடியையும் , நகங்களையும் அகற்றாமல் இருக்கட்டும் ! [ அறிவிப்பாளர் = உம்மு ஸலாமா { ரலியல்லாஹூ அன்ஹா } ] நூல் = முஸ்லீம் எண் = 3999 ]
துல் ஹஜ் மாதம் பத்து நாட்களில் குர்பானி கொடுக்க விரும்புபவர் தன் முடியை , நகங்களை குர்பானி கொடுக்கும் வரை நீக்குவது கூடாது .[ அறிவிப்பாளர் = உம்மு ஸலாமா [ ரலியல்லாஹூ அன்ஹா ] நூல் =புகாரி =1706 ] மேற் கூறப்பட்ட ஹதீஸின் மூலம் குர்பானி கொடுப்பவர் துல் ஹஜ் பிறை -1 ல் லிருந்து குர்பானி கொடுத்து முடிக்கும் வரை நகம் , தலை முடி , அக்குள் முடி .[ மறைவான முடி ] இவைகளை அனைத்தையும் வெட்டக்கூடாது ,குர்பானி கொடுத்து பிறகுதான் வெட்டிக் கொள்ளவேண்டும்
குறிப்பு : துல் கஃதா மாதத்திலே நகம் , முடிகளை வெட்டி சரிசெய்து கொள்ள வேண்டும் !!!
கூட்டு குர்பானிக்கு எத்தனை பேர் அவை எப்படி பங்கு செய்ய வேண்டும் ?ஹூதைபிய்யா உடன் படிக்கை ஏற்பட்ட வருடம் , ஏழு நபர்கள் கூட்டாகச் சேர்ந்து ஒரு மாட்டையும் , அது போல் ஏழு நபர்கள் கூட்டாக ஒரு ஒட்டகத்தையும் நபி [ ஸல்லல்லாஹூ அலைஹி வ ஸல்லம் ] அவர்களுடன் சேர்ந்து நாங்கள் குர்பானி கொடுத்தோம்
[ அறிவிப்பாளர் =ஜாபிர் ரலியல்லாஹூ அன்ஹூ ] [ நூல் = முஸ்லிம் ]
குறிப்பு : மேற்கண்ட இந்த ஹதீஸின் மூலம் கூட்டுக் குர்பானி என்பது , மாட்டுக்கும் , ஒட்டகத்திற்க்கும் மட்டும் தான் என்பதை கவணத்தில் வைத்து செயல் பட வேண்டும் .
குர்பானி எத்தனை நாட்கள் கொடுக்கலாம் ?
துல் ஹஜ் பிறை- 10 -ம் நாள் தொழுகை முடிந்ததிலிருந்து துல் ஹஜ் பிறை 12 ம் நாள் மஃரிப் வரையிலும் குர்பானி கொடுக்கலாம்
[ அறிவிப்பாளர் ; ஹஜரத் அலீ , உமர் ,அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ [ ரலியல்லாஹூ அனஹும் ]
ஹனஃபீ மத்ஹபின் படி துல் ஹஜ் பிறை -12 -ம் நாள் மஃரிப் வரையிலும் , ஷாஃபீ மத்ஹபின் படி துல் ஹஜ் பிறை - 13 -ம் நாள் மஃரிப் வரையிலும் குர்பானி கொடுக்கலாம் . இந்த மூன்று நாட்களுமே குர்பானி கொடுக்கப்பட்ட வேண்டிய நாட்கள்தான் . மேற்கண்ட ஹதீஸில் மூலமாக குர்பானி மூன்று நாட்கள் கொடுக்கலாம் , என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்
குர்பானி இறைச்சியை யார் யாருக்கு கொடுக்க வேண்டும் ?
குர்பானியிலிருந்து நீங்களும் உண்ணுங்கள் ! திருப்தியாய் இருப்போர்க்கும் [ வறுமையிலும் கை யேந்தாமல் இருப்பதைக்கொண்டு ] திருப்தியாய் இருப்போருக்கும் உண்ணக் கொடுங்கள் [ அல் குர்ஆன் = 22 ; 36 ]
நபிகள் நாயகம் [ ஸல்லல்லாஹூ அலைஹி வ ஸல்லம் ] அவர்கள் கூறினார்கள் : குர்பானி கொடுக்கப்பட்டப் பிராணியின் இறைச்சியை நீங்கள் விரும்பியவாறு உண்ணுங்கள் ! பிறருக்கும் உண்ணக் கொடுங்கள் ! சேமித்தும் வைத்துக் கொள்ளுங்கள்
[அறிவிப்பாளர் = அபூஸ்ஸயீத் [ ரலியல்லாஹூ அன்ஹூ] நூல் = புகாரி ,முஸ்லிம் ]
மாற்று மத சகோதரர்களுக்கு கொடுக்கக் கூடாது
குர்பானி இறைச்சியை மூன்று பங்குகளாக பிரித்து கொடுக்க வேண்டும் :
[ 1 ] = முதல் பங்கு தனக்கும் தன் குடும்பத்திற்க்கும்
[ 2 ] = இரண்டாவது பங்கு உறவினர்களுக்கும் ,நண்பர்களுக்கும் கொடுக்க வேண்டும் .
[ 3 ] = மூன்றாவது பங்கு ஏழைகளுக்கு கொடுக்க வேண்டும் .வீண் விரயம் செய்வதை தவீர்த்துக் கொள்ள வேண்டும் .
Comments
Post a Comment