ஸையுதுனா அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்

வைரம் பாய்ந்த நெஞ்சம், எனினும் கனிந்த உள்ளம்...!!

அரபுநாட்டில் ஸையுதுனா அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்

யாவராலும் மிகவும் அஞ்சப்பட்ட ஒரு மனிதர்.

அவர்களின் உடல் கட்டுமஸ்தானது.
அவர்களின் பலத்தை ஒப்பிட்டுக் கூறமுடியாது.

அவர்களின் வல்லமையை வர்ணித்து கூற முடியாது.

 அவர்களின் தாக்குதல் தாக்குப்பிடிக்க இயலாதது.

 அவர்களின் தற்காப்பை யாராலும் ஊடுருவ முடியாது.

அவர்களின் தாக்குதல் பயங்கரமானது.

(நாற்பது பேர்களால் தூக்க இயலாத) கைபர் கோட்டையின் கதவை, தன்னந்தனியனாய் பெயர்த்தெடுத்து நன்னம்பிக்கையாளர்களுக்கு வெற்றியை ஈட்டிக் கொடுத்தவர்கள்.
அவர்களின் பெயரைக் கேட்ட மாத்திரத்திலேயே நயவஞ்சகர்கள் அச்சத்தால் நடுநடுங்கத் தொடங்கிவிடுவார்கள்.

படைக்களத்தில் அவர்கள் இருந்தால் எதிரிகள் துவம்சமாகிவிடுவார்கள்.

 அவர்களின் வார்த்தைகள்கள் நயவஞ்சகர்களின் ஆத்மாவயும் துளைத்து செல்லும் குத்துவாள்கள்.

 அவர்கள் தலைமைத்தாங்கிய போராளித் தலைவர்களுள் ஒருவர்.

அல்லாஹ்வின் பாதையில் கடுமையாகப் போரிட்ட எஜமானர்களுள் ஒருவர்.

அவர்கள் ‘அல்லாஹ்வின் சிங்கம்’ எனப் பெயரிடப்பட்டவர்கள்.

 அவர்களின் திருநாமம் சக்தி வாய்ந்தது. அதனால்தான் அது எமது ஈமானுக்கு உயிர்ப்பினைத் தருகிறது. எங்கள் நெஞ்சங்களை வீரத்தால் நிரப்புகிறது.

எனினும்...

மாதரசி, மாணிக்க மாநபிகளார் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அன்னவர்களின் திருமகளார் ஸையிதா பாத்திமா رضي الله عنها அவர்களின் மறைவுக்குப் பிறகு, அவர்கள் என்ன செய்தார்கள்?

அப்படியே நிலை தடுமாறி உட்கார்ந்துவிட்டார்கள்.

துயரம் தாளாது அழுதார்கள்.
 அந்த உத்தம மாதரசியை எண்ணும்போதெல்லாம் ஏங்கித் தவித்தார்கள்.

தன் இதய ராணியை, அவர்களின் உயர் அந்தஸ்தை நினைக்கும்போதெல்லாம்  மெல்லிய கண்ணீர் துளிகள் அவர்களின் அருள்பொழியும் கண்களில் வழிந்தோடின.

ஸுப்ஹானல்லாஹ்..!!

 எத்தனை பெரிய மனிதர் இவர்!
எத்தகு கண்ணியம் குண இயல்பை பூண்டிருந்தார்கள் இவர்கள்!

இவர்களின் ஆழம்காண இயலா நேசம் எத்தகையது!

கண்மணிகளார் மாநபிகளார் ﷺ அன்னவர்கள் கூறினார்களே, “யாரெல்லாம் தங்களின் பெண்மணிகளோடு நலவோடு நடந்துக்கொள்கிறார்களோ, அவர்களே உங்களில் சிறந்தவர்”
....

Comments

Popular

இஸ்லாமிய கேள்வி பதில் :- பாகம் : 5

சத்திய இஸ்லாத்திற்காக ஸஹாபி பெண்களின் தியாகங்கள்..!

கஃபாவை பற்றிய சிறப்பு & ருசிகர தகவல்கள்

இஸ்லாமிய கேள்வி பதில் .!! பாகம் : 4

இஸ்லாமிய கேள்வி பதில் ..!! பாகம் : 2

புனித ஹஜ்ஜின் ஐந்து நாட்கள் செயல் முறை விளக்கம்

முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ( ரலியல்லாஹூ அன்ஹூ ) ஆண்டகை அவர்களின் சிறப்பு திருநாமங்கள்