கல்வத் [ தனிமை தவம் ]
கல்வத் [ தனிமை தவம் ]
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரக்கதுஹூ..
கம்பம் மாநகரில் ஆன்மீக ஆட்சி செய்யும் ஜல்வத் நாயகம் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்களின் தனிமை தவம் :-
( வாழ்கை வரலாற்று குறிப்பகள் )
முஹம்மது ஸயீது ஜல்வத் நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் 42 ஆண்டு காலங்கள் கல்வத்தை மேற் கொண்டார்கள்.
அவர்கள் கல்வத்தில் ஈடுபடும் போது அவர்களின் மகளார் நபிஸா ரலியல்லாஹூ அன்ஹா அவர்கள் வயது மூன்றறை[ 3=1/2 ] மகனார் ஷைகுனா அம்பா நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இரண்டு வயது[ 2 ] பாலகராகும் இருந்தார்கள்.
கல்வத் [ தனிமை தவம் ]:-
ஜல்வத் நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கல்வத்தில் நுழைந்து விட்ட ஒரு சில தினங்களிலே கடுமையான காற்றுடன் பயங்கர இடியும் இடித்து சிறிது நேரத்தில் மின்னலுடன் கூடிய பலத்த மழையும் கொட்ட ஆரம்பித்தது.
அந்நேரத்தில் தனது மூன்றறை வயது மகளின் , இரண்டு வயது மகனின் நினைவு அவர்களை வாட்டி எடுத்தது. அப்போது அவர்களின்
திரு வாயானது கீழ் வரும் கவியை உதிர்த்தது :
" சாட்டு சாட்டென்றெனை
பன்முறையாய் உரைத்த கோவே
நோக்கு நோக்கென்றெனை
நொம்பலம் படுத்துவதேன்
நான் நோக்கிடில்
நடப்பது ஒன்றுமில்லை..!
நடப்பது ஒன்றுமில்லை..!
நீ நோக்கிடும் நிறைந்திடும் செல்வம் "
இந்தக் கவியின் சுருக்கம் என்னவென்றால்:-
இறைவா உன்னிடமே தவக்குல் வைக்க வேண்டும் என்று குர்ஆன் ஷரீபில் பல இடங்களில் நீ கூறியிருக்கிறாய்.
அதன்படி நானும் உன் மீது பாரம் சாட்டி விட்டு கல்வத்தில் நுழைந்துவிட்டேன்.
இப்போது என் மகளின்,மகனின் கவலையைத் தந்து எனது இதயத்தை அவர்பால் நோக்கச் செய்கிறாய்.
நான் சென்று என் மகளையிம், மகனைக் கவனிப்பதால் என்ன ஆகிவிடப் போகிறது...?
ஆகவே நீயே அவரைக் கவனித்துக் கொள்வாயாக என்பதாகும். இந்தக் கவியைப் படித்த மாத்திரத்திலேயே உடனடியாக மழையும் நின்று விட்டது.
மகளைப்,மகனைப் பற்றிய கவலையும் அவர்களின் மனதைவிட்டும் அகன்றுவிட்டது.
"தூய்மையான எண்ணம் ஏற்படுவதற்கு தனிமை காத்தல் என்பது மிகச் சிறந்த மூலிகையாகும்" என்று துன்னூனுல் மிஸ்ரி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் குறிப்பிடுகிறார்கள்
(குஷைரியா பக்கம் 58)
மேலும்:-
من اخلص لله اربعين يوما ظهرة ينابيع الحكمة من قلبه علي لسنه = الجامع الصغير =٨٣٦١
"எவர் 40 நாட்கள் தனிமை காத்து வருகிறாரோ அவரில் இதயத்திலிருந்து அவரின் நாவின் மீது ஞானத்தின் ஊற்றுக்கண்கள் வெளியாகும்" என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள் .
(அல் ஜாமிஉஸ் ஸகீர் ஹதீஸ் எண் 8361)
எல்லாம் வல்ல நாயன் நம் யாவருக்கும் தனிமையில் அகமியத்தை விளங்கச் செய்து தனிமையில் இனிமை கண்ட நல்லோர்களுடன் சேர்த்தருள் புரிவானாக. ஆமீன்!
Comments
Post a Comment