நாம் தேர்ந்தெடுக்க வேண்டிய நான்கு விஷையங்கள் :-
ஹளரத் ஹாத்திம் அல் அஸம் (ரலியல்லாஹூ அன்ஹூ ) அவர்கள்
இவ்வுலகில் 'நான்கே 'நான்கு விஷயங்களை மட்டும் நான் தேர்வு செய்து விட்டு மற்றவற்றைப் புறக்கணித்து விட்டேன் !
என்று கூறினார்கள்
அப்போது அதை கேட்ட அன்பர்கள் அவைகள் யாவை ? என கேட்டார்கள் ....
அதற்கு ஹளரத் ஹாத்திம் அல் அஸம் (ரலியல்லாஹூ அன்ஹூ ) அவர்கள் கூறினார்கள் ....
ஒன்றாவது விசையம் :-
எனக்கு உரிய உணவு என்பது இந்த உலகத்தில் நிர்ணயிக்கப் பட்ட ஒன்றாகும் . அதனை எவராலும் கூட்டவோ குறைக்கவோ இயலாது ; எனவே அதனைப் பற்றிய அக்கறையை என் உள்ளத்தில் இருந்து அகற்றி விட்டேன் .
இரண்டாவது விசையம் :-
நான் என்னைப் படைத்த பேரிறைவனுக்குப் பெரிதும் கட்டுபாடுடையவன்.அந்த நன்றியை என்னைத் தவிர வேறு எவராலும் திருப்பிச் செலுத்த இயலாது .எனவே அந்த நன்றி செலுத்தும் பணியில் என்னை நான் முற்றாக ஈடுபடுத்திக் கொண்டேன்.
மூன்றாவது விசையம் :-
இறப்பு என்னைத் துரத்திக் கொண்டே வருகிறது அதிலிருந்து ஒரு போதும் நான் தப்ப இயலாது -எனவே அதனைச் சந்திப்பதற்கு நான் தயாராகிக் கொண்டிருக்கிறேன் .
நான்காவது விசையம் :-
இறைவன் என்னைப் பார்த்துக் கொண்டே இருக்கிறான் என்பதை நான் உணர்கிறேன் ஆகவே தகாதவற்றைச் செய்வதில் நான் பெரிதும் நாணமுறுகிறேன் .....
Comments
Post a Comment