குர்பானி ஏன் ? எதற்க்கு ?

குர்பானி ஏன் ?
                                 எதற்க்கு ?
                                               எப்படி ?

         அஸ்ஸலாமு அலைக்கும் [ வரஹ்மதுல்லாஹி வ பரக்கதுஹூ ]


இஸ்லாமிய அன்பர்களே !!!


நாம் ஏன் குர்பானி கொடுக்கிறோம் ? எதற்க்காக கொடுக்க வேண்டும் ? எப்படிக் கொடுக்கிறோம் ? என்பதை என்றைக்காவது சிந்தித்தது உண்டா ? சரி வாருங்கள் நாம் அதை பார்போம் !!!

குர்பானி ஏன் !!!

நபிகள் நாயகம் [ ஸல்லல்லாஹூ அலைஹி வ ஸல்லம் ] அவர்கள்  கூறினார்கள் : இது நமது பாட்டனார் , இப்ராஹிம் [ அலைஹி வ ஸல்லம் ] அவர்களின் வழிமுறையாகும் . அவர்களின்  நண்றியுணர்ச்சிக்கும் , தியாக பண்புக்கும் , உயிருள்ள நிலையான ஓர் அடையாளமாகும் . இதனை பரிபூரண மகிழ்ச்சியுடனும் , ஈமானின் உணர்ச்சியுடனும் நிறை வேற்றவது ஒவ்வொரு முஸ்லிமின் மீது கடமையாகும் 

  [    நூல் = அஹ்மத் , இப்னு மாஜா ]

குர்பானி எதற்காக !!!

 நபிகள் நாயகம் [ ஸல்லல்லாஹூ அலைஹி வ ஸல்லம் ] அவர்கள்  கூறினார்கள் : யாருக்கு வசதி இருந்து குர்பானி கொடுக்க வில்லையோ அவர் தமது தொழுகும் இடத்திற்க்கு வர வேண்டாம் 

[ நூல் = இப்னு மாஜா , அஹமத் ]அபூஹூரைரா  [ ரலி ] அவர்கள் .

செய்து விட முடியாது !!!

 நபிகள் நாயகம் [ ஸல்லல்லாஹூ அலைஹி வ ஸல்லம் ] அவர்கள்  கூறினார்கள் : ஹஜ் பெருநாள் தினத்தில் அறுத்துப் பலியிடுவதை விட சிறந்த அமலை ஒருவன் செய்து விட முடியாது .

  [ நூல் = திர்மீதி ] ஆயிஷா [ ரலி ] அவர்கள் 

 எதற்கு ? 

நபிகள் நாயகம் [ ஸல்லல்லாஹூ அலைஹி வ ஸல்லம் ] அவர்கள்  கூறினார்கள் : சந்தேகமின்றி குர்பானியின் இரத்தம் பூமியில் விழும் முன்பே இறைவனிடம் அது அங்கீகாரம் பெற்று விடுகிறது. அதனை உள்ளபூர்வமாக செய்யுங்கள் .

 [ நூல் = மிஷ்காத் ]

 எப்படி !!!

நபிகள் நாயகம் [ ஸல்லல்லாஹூ அலைஹி வ ஸல்லம் ] அவர்கள்  கூறினார்கள் : உங்களுடைய எண்ணங்கள் எப்படியோ அப்படியே உங்கள் செயல்கள் அமையும் , அதற்கான கூலியை மட்டும் அல்லாஹ் வழங்குவான் .

   [ நூல் = புகாரி ]  

யோசனை !!!

நபிகள் நாயகம் [ ஸல்லல்லாஹூ அலைஹி வ ஸல்லம் ] அவர்கள்  சொன்ன அடிப்படையில் நாம் இறையச்சத்தோடு குர்பானி கொடுக்க வேண்டும் . அல்லாஹ்விற்க்காக மட்டும் தான் கொடுக்க வேண்டும் மாறாக உலக்த்திற்காகவோ ,ஊருக்காகவோ , பிறர் பார்க்க வேண்டும் என்பதற்க்காகவோ , குர்பானி கொடுக்கக் கூடாது அப்படி கொடுத்தால் அது அல்லாஹ்வினிடத்தில்  நன்மையை  பெற்று தராது .

 ''  நபிகள் நாயகம் [ ஸல்லல்லாஹூ அலைஹி வ ஸல்லம் ] அவர்கள்  கூறினார்கள் : கொழுத்த பிராணிகளையே குர்பானி செய்யுங்கள் ஏனெனில் ! அவை ஸிராதுல் முஸ்தகீம் பாலத்தில் உங்களை வாகனமாக உதவுபவை  ''

 மேற் கண்ட ஹதீஸூகளின் அடிப்படையில் தகுதி உள்ள ஒவ்வொரு முஸ்லிமும் குர்பானி கொடுப்பது கடமையாகும் 

Comments

Popular

சத்திய இஸ்லாத்திற்காக ஸஹாபி பெண்களின் தியாகங்கள்..!

இஸ்லாமிய கேள்வி பதில் :- பாகம் : 5

கஃபாவை பற்றிய சிறப்பு & ருசிகர தகவல்கள்

இஸ்லாமிய கேள்வி பதில் .!! பாகம் : 4

இஸ்லாமிய கேள்வி பதில் ..!! பாகம் : 2

புனித ஹஜ்ஜின் ஐந்து நாட்கள் செயல் முறை விளக்கம்

முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ( ரலியல்லாஹூ அன்ஹூ ) ஆண்டகை அவர்களின் சிறப்பு திருநாமங்கள்