எங்கள் உயிரே எங்கள் நாயகமே ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்
எங்கள் உயிரே எங்கள் நாயகமே
ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்
அபூஸூப்யானின் ஆவேசப் பேச்சு:
قول ابي سفيان عند ما قال لقومه ما رايت في الناس احدا
حب احدا كحب اصحاب محمد صلي الله عليه و سلم
ஒருவர் பிரியம் வைப்பதில் , முஹம்மது ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களை அவர்தம் தோழர்கள் பிரியம் வைத்தது போன்று மக்களில் ஒருவரையும் நான் கண்டதில்லை ‘ என்று அபூ ஸூப்யான் அவர்கள் கூறினார்கள் .
உர்வத் இப்னு மஸ்ஊத் ரலியல்லாஹூ அன்ஹூ :-
قول عروة بن مسعود :-
قط يعظمه اصحابه ما يعظم اصحاب محمد صلي الله عليه وسلم محمدا
முஹம்மது ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அவர்களின் தோழர்கள் கொடுக்கின்ற மரியாதையைப் போன்று வேறெங்கும் நான் காணவில்லை
மேலே கூறிய வார்தைகள் இஸ்லாத்தை தழுவுமுன் கூறியவைகள் ….!!!
ஆழமான அன்புக்கு உதாரணம் …!
உஹதுப் போரில் ஓர் அன்ஸாரித் தோழியுடைய உள்ளத்தின் வெளிப்பாட்டைப் பாருங்கள் ..!
அந்த அம்மையார் உஹதுக் களம் நோக்கி விரைந்தோடி வருகிறார் . அப்போது அவரிடம் :
‘ உம்முடைய தந்தை உஹதுக் களத்தில் ஷஹீதாஹிவிட்டார் .
உன் சகோதரர் உஹதுக் களத்தில் ஷஹீதாஹிவிட்டார்.
ஏன் உன் கணவரும் ஷஹீதாஹிவிட்டார் ‘
என்று மூச்சு வாங்கி ஓடிவந்த அந்த அம்மையாரிடம் சொல்லப்பட்டது.
அப்போது அந்த அம்மையார் “ அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் எப்படியிருக்கிறார்கள் ..?
என்று கேட்டார்.
அதற்கவர்கள் பதிலாக நீர் நேசிப்பது போன்று எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே அவர்கள் நலமாக உள்ளார்கள் என்று பதிலளித்தார்கள். அவர்களை என் கண்ணால் காணவேண்டும் என்று கூறினார் .
நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களைக் கண்ணால் கண்டவுடன் அந்த அம்மையார் :-
كل مصيبة بعدك جليل
உங்களை என் கண்ணால் கண்ட பின்பு ஒவ்வொரு துக்கமும் தெளிவாகிவிட்டது ,ஒவ்வொரு துக்கமும் சிறிதாகிவிட்டது. உங்களுக்கு ஏற்பட்ட உங்களைத் தொட்ட துன்பத்தைத் தவிர அல்லாஹ்வின் தூதரே ‘ என்று நெஞ்சம் நெகிழ்ந்து உணர்ச்சி பொங்கக் கூறினாரென்றால் அந்த அம்மையாரின் உண்மையான அன்பை பாருங்கள் ….
ஒரு சகோதரன் தன் உறவின் பாசத்தைக் கொட்டுவான் தந்தையோ தன் மகளின் உயிரோடு உறவாடுகிறான் ஆனால் இதையும் தாண்டி ஒரு மனைவியோ தன் கணவனின் வாரிசையே சுமக்கின்றாள் .தன் இரத்தத்தையே அமுதாக்குகிறாள்,தன் மூச்சையே காணிக்கையாக்குகிறாள், கணவனே கடைசி வரை மனைவிக்கு முகவரியாவன் .
அந்த முகவரியே அழிந்து போனால் தன் வாழ்வே சூனியம் ஆகிவிடும் என்று பயந்து நானும் என் கணவனோடு மாண்டிருக்கக் கூடாதா ? என்று கூக்குரல் போடும் பெண் சமூகத்திற்கு மத்தியில் அவரே போன பின்பு நான் மட்டும் ஏன் உயிர்வாழ வேண்டும் என்று ஒப்பாரி வைக்கும் பெண்களுக்கு மத்தியில் ,தந்தை, சகோதரர் ,கணவர் ஆகிய மூவரும் ஷஹீதானாலும் பரவாயில்லை என் உயிரினும் மேலான முஹம்மது ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்று கேட்டு தவிப்பில் ஏங்கிய அந்தத் தாயின் பாசத்திற்கு முன்பு நம் பாசம் எங்கே ? ….
உங்களை என் கண்ணால் கண்ட பின்பு அனைத்துத் துக்கங்களும் தூரமாகி வெளியேறி விட்டேனவே என்று ஒரே நிலையிலிருந்து அன்பின் வெளிப்பாட்டை வெளியாக்கி, முத்திரை நபி மீது முழுமையான அன்பைப் பொழிந்து ,முத்திரை பதித்து விட்டார்கள் .
இறைவா ! எங்கள் அனைவரையும் எங்கள் உயிர் மூச்சு நிற்கும் வரை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் மீது உண்மையான அன்பு கொண்டவர்களாக எங்களை வாழச் செஞ்வாயாக !
வாழ்ந்து காட்ட வைப்பாயாக !
வாழ்ந்து மரணிக்கச் செய்வாயாக !
ஆமீன்
ஆமீன்
ஆமீன்
யா. ரப்பல் ஆலமீன் .
Comments
Post a Comment