உவமான கதை!!!!
ஒரு உவமான கதை!!!!
மௌலானா ஜலாலுத்தீன் ரூமி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள்:-
மஸ்னவி ஷரீபில்:-
ஒரு உவமான கதை ஒன்றை கூறுகிறார்கள். ஒருவன் தனது கடையில் கிளி ஒன்றை வளர்த்து வந்தான். ஒரு நாள் அந்த கடையில் இருந்த கிளி எண்ணையை சிந்தி விட்டதற்காக அந்த முதலாளியானவன் அதன் தலையில் கோபமாக அறைந்து விடுகிறான். அடித்த வேகத்தில் கிளியின் தலைமுடி எல்லாம் உதிர்ந்து அது மொட்டையாகி விடுகிறது.
அதே கவலையில் அது அன்றுடன் மௌனம் சாதித்து கொள்கிறது. சில நாட்களுக்கு பின்னர் அந்த வழியே துறவி ஒருவர் வருகிறார். அவருடைய தலையும் முடியின்றி வழுக்கையாக காணப்பட்டது
உடனோ அந்த கிளி இங்கிருந்து கூவுகிறது. “என்ன பெரியவரே! நீங்களும் என்னைபோன்று எண்ணையை கொட்டி விட்டீரா?” என்று.
அந்த அற்ப கிளி மற்றவர்களையும் தன்னை போலவே நினைத்து கொண்டது. அந்த கிளியின் கதை இன்றைக்கும் நன்றாக பொருந்துகிறது. கிளியை போன்று அற்ப புத்தி படைத்த பலர் நம் மூதாதையர்களையும் சான்றோர்களையும் பெரியோர்களையும் நம்மை போன்றவர்களே என்று சொல்லி திரிகின்றனர். அவ்வாறு சொல்லி திரிபவர்கள் கிளியை போன்று அற்ப புத்தி படைத்தவர்களே என்று மௌலானா ரூமி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் அன்றே கூறிவிட்டார்கள்.
Comments
Post a Comment