ஆன்மீகம் என்றால் ..!!!
ஆன்மீகம் என்றால் ..!!!
ما التصوف قال وجدان الفرح فى الفؤاد عند إتيان الترح
ஆன்மீகம் என்றால் என்ன என்ற கேள்விக்கு இப்படியும் பதில் உண்டு.
சிரமங்கள் வருகிற போதும் உள்ளத்தில் சந்தோசம் வருவது ஆன்மீகம்.
இது ஆன்மீக வாதிகளின் அடையாளம்.
அல்லாஹ் ஏதாவது தந்தாள் அவனுக்கு நன்றி சொல்லுவதும் அவன் எதையும் தர வில்லை என்றால் பொறுமையாக இருப்பது.
இது சாதாரண மக்களின் ஈமான்.
ஆனால் ஆன்மீக வாதிகள் அல்லாஹ் கொடுத்தாலும் நன்றி சொல்லுவார்கள் கொடுக்கவில்லை என்றாலும் எனக்கு கொடுத்தால் எதாவது பாதிப்பு வரும் என்று கருதிதான் அல்லாஹ் இதை கொடுக்க வில்லை என்று சொல்லி அதற்கும் நன்றி சொல்லுவார்கள்.
கொடுத்ததற்கும் நன்றி கொடுக்காமல் இருந்ததற்கும் நன்றி .
இது ஆன்மீக வாதிகளின் அடையாளம்.
எதையும் நல்ல கண்கொண்டு பார்க்கிற தன்மை.
நான் ஆங்கிலத்தில் positive mind என்று இதை நாம் குறிப்பிடுவோம்.
எனவே உள்ள பரிசுத்தம் ஆன்மீகத்தின் அடையாளம்.
எதையும் நல்ல கண் கொண்டு பார்ப்பதும் அவர்களின் மற்றொரு அடையாளம்...
இதுவே ஆன்மீகம்.....!!!
Comments
Post a Comment