கலிமாவின் விளக்கம்...
லா இலாஹ இல்லல்லாஹ் முஹம்மது ரஸூலுல்லாஹ்
لا اله الله محمد رسول الله
நம்மில் ஒவ்வொரு நபர்களும் கலிமாவிலுள்ள எழுத்துக்களின் உச்சரிப்புகளையும் நுணுக்கங்களையும் அவசியமாக அறிந்து வைத்து கொள்ள வேண்டும் !
நாம் சொல்லும் கலிமாவின் வார்த்தை உச்சரிப்புகள் சரியா ? தவறா ? என்பதை அறிய கண்டிபா படிக்க வேண்டி செய்தி .....
" லா இலாஹ " لا اله - என்று கூறும் பொழுது அலிஃபை ' இ ' ( الف)என்று அழுத்தங்கொடுத்து தொண்டையால் உச்சரிக்க வேண்டும் . அவ்வாறின்றி " இ " (الف)-என்பதை " யி " (ي) -என்று " யே "யுடைய உச்சரிப்பைக் கொண்டு கூறினால் அது கலிமாவாக ஆகாது.
இவ்வாறே-
[ اهدنا الصراط المستقيم]" இஹ்தினஸ்ஸிராதல் முஸ்தகீம் " என்பதில் " இ " (الف)-என்பதை அழுத்தாமல் " யே " (ي)-யாக ஓதினால்
அதாவது- [يهدنا الصراطالمستقيم]( "யஹ்தினஸ்ஸிராதல் முஸ்தகீம் ") என்று ஓதினால் அது சூரத்துல் ஃபத்திஹாவாக ஆகாது . பாத்திஹா கூடாவிட்டால் தொழுகையும் கூடாது .
மேலும் " அல்லாஹ் " ( الله ) -என்பதை உச்சரிக்கும் பொழுது இரண்டு (لا )-லாமாகவே உச்சரிக்க வேண்டும் .மாறாக (ض)--ளாவாகவோ ,(ظ )- ளோயாகவோ ,உச்சரிக்கக் கூடாது .இதில் பெரும்பாலானவர்கள் தவறு செய்கிறார்கள் .இந்தத் தவறு ஏற்படுவதற்குரிய காரணத்தைக் கவனிக்க வேண்டும் . அதாவது - "அல்லாஹ் " ( الله )- என்ற வார்த்தை - ஜலாலத்துடைய - வல்லமைமிக்க வார்த்தை என்று கூறப்படும் .
இதனை வலுப்பமாக,கனமாகச் சொல்வது சுன்னத் . இவ்வாறு சொல்ல வேண்டுமென்பதற்காக நுனி நாவை முன் பல்லையடுத்த மேல் முரசில் சேர்த்துச் சொல்வதற்காக, நுனி நாவைச் சற்று அதிகமாக உயர்த்தி அழுத்திச் சொல்வதால்
" ளோ " (ظ) யுடைய உச்சரிப்பிலும் அல்லது நாவை அலகு பக்கத் சாய்த்து " ளா " (ض) துடைய உச்சரிப்பிலும் கூறுகின்றனர் . இது பெரும் தவறாகும் .
" அல்லாஹ் "( الله )- என்பதை " லா "(لا )- முடைய உச்சரிப்பிலேயே மெல்லினமாகவே உச்சரிப்பதால் ,அதனைக் கனப்படுத்திச் சொல்வது மட்டும் தான் விடுபட்டு விடுகிறது . பொருளில் தவறு ஏற்படுவதில்லை . ஆனால் அதனை " ளோ" (ظ) -யாக அல்லது " ளா "(ض)- தாக உச்சரிப்பதில் பொருள் மாற்றம் ஏற்பட்டு விடுகிறது . இது பெரும் தவறாகும்.இதனை
அறிவித்தவர் :-
ஷைகுனா ஸதக்கத்துல்லாஹ் ( ரலியல்லாஹூ அன்ஹூ ) அவர்கள் .
( ஆதார நூல் : தஸ்ஹீஹூல் ஜலாலா- )
Comments
Post a Comment