இந்தியாவில் முதலில் இஸ்லாத்தை ஏற்றவர் [ தழுவியவர் ] யார் ?

இந்தியாவில் முதல் முதலில் இஸ்லாத்தை ஏற்றவர் யார் ? இந்தியாவில் முதல் மஸ்ஜித் எது ?


இந்தியாவில் முதலில் இஸ்லாத்தை ஏற்றவர் [ தழுவியவர் ] யார் ?

இந்தியாவில் முதல் ஜூம்மா மஸ்ஜித் எது ?


இந்தியாவில் உள்ளவர்கள் யாரவது நபி [ ஸல்லல்லாஹூ அலைஹி வ ஸல்லம் ] அவர்களை பார்த்து ஈமான் கொண்ட நபர் யார் ?

உலகத்திலே இரண்டாவது ஜூம்மா மஸ்ஜித் எது ? 


இந்தியாவில் பழமையான மஸ்ஜித் எது ? 


இந்தியவை ஆட்சி செய்த எந்த வொரு அரச வரலாற்றிலும் செய்திராத ஒரு காரியத்தை ஒரு மன்னர் செய்துள்ளார் . அதாவது : தனது மிகப் பெரும் ராஜ்யத்தையே துறந்திருக்கிறார்.அவர் தான் சேர வம்சத்து கடைசி அரசரான சேரமான் பெருமாள் என்கிற பாஸ்கர் ரவிவர்மன்  பிறகுதனது பெயரை சிராஜூதீன் என்று மாற்றினார்கள் .

அரசர் சேரமான் பெருமாள் அரசவை :

சேரமான் பெருமாள் பாஸ்கர் ரவிவர்மன் ராஜ்யத்தில் பல்வேறு வகையான சமூகமக்களும் இருந்தனர் .இருந்த போதிழும் இஸ்லாம் என்ற மார்க்கத்தை பற்றி இந்தியாவில் யாருக்கும் தெரியாமல் இருந்தார்கள் .அப்படி இருக்க !! சேரமான் பெருமாள் மட்டும் எப்படி இஸ்லாத்தின் பக்கம் ஈர்ப்பு வர காரணம் என்ன ? இஸ்லாத்தை எப்படி ஏற்றுக் கொண்டார்கள் ? என்பதையும் நாம் கிழேகாண்போம் ....

சேரமான் பெருமாள் கேரளாவில் உள்ள கொடுங்களுரை தலைமை இடமாக கொண்டு ஆட்சி செய்து வந்தார் .

 இஸ்லாத்திற்க்கு வர காரணம் :

ஒரு நாள் அரசர் தனது மாளிகையில் இருந்து அடிவானத்தில் நிலவு  இரண்டாக பிளந்ததை போன்று ஒரு காட்ச்சியை பார்த்தார்.மறு நாள் காலை அரசபையை கூட்டி தான் பார்த்த காச்சியை பற்றி தன்னுடைய அரசபையில் உள்ள ஜோதிட வல்லுனர்கள் ,மந்திரிகளிடம் விளக்கம்  கேட்டார் அப்போது

அங்கு உள்ள சிலர் கருத்து சொன்னார்கள் : அரசரே!! தாங்கள் கண்டது கனவு தான் !! அது உண்மை இல்லை !! .

இன்னும் சிலர்கள் : அரசரே !!இப்படி ஒரு நிகழ்சி நடக்க சாத்தியம் கிடையாது!! 

இன்னும் சிலர்கள் : அரசரே !! தாங்கள் கண்டகாட்சி ஒரு பிரமை அது உண்மை அல்ல !!

 அந்த அரசபையில் உள்ளோர் கொடுத்த விளக்கம் அரசருக்கு திருப்தி அளிக்கவில்லை .தான் கண்ட கட்சியின் விளக்கத்தை யாரிடம் கேட்பது என்று சிந்திக்க ஆரம்பித்தார் அந்த சமயத்தில் தான்கதான் கேரளாவுக்கு  கடல் வழியே வணிகம் செய்யது வந்த அரபியர்கள் சேரமான் பெருமாள் அரசரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது அந்த தருணத்தை பயன்படுத்திக்கொள்ள நினைத்தார் உடனேயே அரசர் தான் கண்ட காட்சியை அரபியர்கள் இடம் சொன்னார் அப்போது அந்த அரபியர்கள் "தாங்கள் கண்ட காட்சி உண்மை அது பொய்யான விசையம் அல்ல "அது பிறரையும் அல்ல "அது முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் ) அவர்கள் நிகழ்த்திய அற்புதம் தான் என்று பதில் அளித்தார்கள் .

அந்த அரபியர்கள் சொன்ன விளக்கம் :

மக்காவில் முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் ) என்ற ஒருவர் தன்னை அல்லாஹ் வின் தூதர் என்றும் இறைவன் ஒருவன் அவன் இணை துணை ,அனைத்தையும் விட்டு பரிசுத்தமான வன் என்று கூறிய போது மக்கள் அனைவரும் நீங்கள் இறைத்தூதர் என்று கூறுவது உண்மை என்றால் என்ன அத்தாச்சி ? என்று கேட்டார்கள் அதற்கு நபி (ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் ) அவர்கள் என்ன அத்தாச்சி வேண்டும் என்ற போது அந்த மக்கள் அனைவரும் எங்கே நீங்கள் இறைத்தூதர் என்றால் வானில் தெரியும் நிலவை இரண்டாக பிளக்கும் படி கூறினார்கள் ! அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் ) அவர்கள் தனது ஆள்காட்டி விரலை வைத்து நிலவின் பக்கம் நேரக கோடு போட்டார்கள் என்ன ஆச்சரியம்! நிலவு இரண்டாக பிளந்து! "அந்த நிகழ்ச்சியைத்தான் அரசரே !!! நீங்கள் பாரத்து உள்ளிரகள் .என்று அரபியர்கள் சொன்னார்கள்  


 அந்த விளக்கத்தை கேட்ட அரசர் சேரமான் பெருமாள் அவர்கள் அந்த அரபியர்களால் ஈர்க்கப்பட்டு இஸ்லாத்தை தழுவ முடிவு செய்தார்கள் !! மேலும் நபிகள் நாயகம் [ ஸல்லலாஹூ அலைஹி வ ஸல்லம் அவர்களை சந்திக்கவும் முடிவு செய்தார் தான் ஆண்டு கொண்டிருந்த  கேரளா ராஜியத்தையும் , பரந்த நிலப்பரப்புகளையும் முக்கியமான தலைவர்களிடம் ஒப்படைத்து விட்டு சேரமான் பெருமாள் மக்கா சென்றார்கள் அங்கு நபி [ ஸல்லல்லாஹூ அலைஹி வ ஸல்லம் ] அவர்களை சந்தித்து இஸ்லாத்தை ஏற்றார்கள் . சில காலம் அங்கே தங்கினார்கள் பின்பு தாயகம் திரும்பும் வேலையில் ஓமன் என்ற நாட்டில் துஃபர் என்ற இடத்தில் மரணம்மடைந்தார்கள் மரண்த்திற்க்கு முன் சில கடிதங்களை எழுதி நண்பர்களிடம் கொடுத்து வைத்து இருந்தார் "' அந்த கடிதத்தை மாலிக் இப்னு தீனார் [ ரலியல்லாஹூ அன்ஹூ ] அவர்கள் சேரமான் பெருமாள் அவர்கள் ஆட்சி செய்த அந்த பகுதிக்கு வந்து அரசர் கொடுத்த கடிதத்தை கொடுத்தார்கள் .அதை பெற்றுக்கொண்ட அந்த தலைவர்கள் பள்ளிவாசல் கட்ட அனுமதிக் கொடுத்தார்கள் 

 இவ்வாறக கொடுங்களூரில் இந்தியாவிலேயே முதல் பள்ளிவாசல் சேரமான் பள்ளி கட்டப்பட்டது அதன் முதல் காளியாக [ நிதிபதியாக]மாலிக் இப்னு தீனார் [ ரலியல்லாஹூ அன்ஹூ ] அவர்கள் இருந்தார்கள் சிலகாலம் கழித்து மாலிக் இப்னு தீனார் [ ரலியல்லாஹூ ] அவர்கள் சேரமான் பள்ளி வாசலின் பொறுப்பை தனது உறவினர் ஆனா ஹபீப் பின் மாலிக்  என்பவர் இடம் ஒப்படைத்து விட்டு மாலிக் இப்னு தீனார் [ரலி] அவர்கள் கேரளா முழுவதும் சுற்றி பல பள்ளிகளை உருவாக்கினார்கள் பிறகு மக்கா சென்றார்கள் அங்கேயே வஃபாத் ஆனார்கள் இதை உருதிப்படுத்தும் விதமாக இன்னும்

 சேரமான் பள்ளிவாசலில் ஹபீப் பின் மாலிக் மற்றும் அவரது மனைவி குஸரிய்யா ஆகியோர்களின் மஜார் ஷரீஃப் உள்ளது 

திருச்சூர் மாவட்டம் கொடுங்களூர்[ தாலுக்கா ] கொச்சியிலிருந்து வடக்கே 35 -கிலோமீட்டர் தொலைவில் NH -17 -ரோட்டில் அமைந்துள்ளது அதாவது கொடுங்களூர் பகவதி கோவிலிருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது பஸ் ஸ்டாப் சேரமான் பள்ளி வாசல் ஸ்டாப்

 மொத்தம் முஸ்லிம்கள் குடும்பங்கள் 1800 பதிவு செய்யப்படு உறுப்பினர்களாக உள்ளார்கள் மொத்தம் மக்கள் தொகை = 7000 ஆகும் .

 சேரமான் பெருமாள் அவர்கள் வாழ்க்கையை பற்றி இன்னும் தெரிய விருப்பினாள் : சலீம் வெளியிட்ட சேரமான் பெருமாள் என்ற புத்தகத்தையும் , புது யுகம் பப்லிசார் வெளியிட்ட மாமன்னர் சேரமான் பெருமாள் என்ற புத்தகத்தையும் படியுங்கள் 

 பள்ளியின் விபரம் இதோ = கிபி 629 - ல் உருவான பள்ளிவாசல் சுமார் = 1386 வருடங்கள் ஆனா பள்ளி வாசல் , இந்தியாவின் முதல் பள்ளி , உல்கிலேயே இரண்டாவது ஜூம்மா பள்ளி , 3 = 1 /2  , ஏக்கர் இடத்தில் 12000 ஸ்குயர் ஃபிட்டில் பள்ளிவாசல் அமைந்துள்ளது , 1984 ஆண்டு புதுப்பிக்கப் பட்டது



 பள்ளியின் விலாசம் : பள்ளி நிர்வாகம் சேரமான் ஜூம்மா மஸ்ஜித் ,கொடுங்களூர் ,திருச்சூர் [ மாவட்டம் ] கேரளா இந்தியா 680664 , போன் நம்பர் 04802803170

கூடுதலாக உங்கள் சிந்தனைக்கு:  விஞ்ஞான உண்மைகளையும் நாம் பார்ப்போம் நிலவு பிளந்த நிகழ்ச்சி பற்றிய விஞ்ஞான உண்மைகள் :




Comments

Popular

இஸ்லாமிய கேள்வி பதில் :- பாகம் : 5

சத்திய இஸ்லாத்திற்காக ஸஹாபி பெண்களின் தியாகங்கள்..!

கஃபாவை பற்றிய சிறப்பு & ருசிகர தகவல்கள்

இஸ்லாமிய கேள்வி பதில் .!! பாகம் : 4

இஸ்லாமிய கேள்வி பதில் ..!! பாகம் : 2

புனித ஹஜ்ஜின் ஐந்து நாட்கள் செயல் முறை விளக்கம்

முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ( ரலியல்லாஹூ அன்ஹூ ) ஆண்டகை அவர்களின் சிறப்பு திருநாமங்கள்