டை அடிக்களாமா ..?
முடிக்கு கறுப்பு சாயம் பூசுதல் ஹறாம்!
01. ஹளரத்அபூபக்கர் சித்தீக் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் தந்தை குஹாபா றழியல்லாஹு அன்ஹு அவர்களின் தாடி முடி பூரணமாக வெண்மையாக இருந்ததை கண்ணுற்ற காத்தமுன் நபியவர்கள் ஏதாதொன்றினால் நிறமாற்றம் செய்யுங்கள். கறுப்பு நிறத்தை தவிர்த்துக் கொள்ளுங்கள் என்று கூறுங்கள்.
அறிவிப்பவர் : ஹளரத் ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரழியல்லாஹு அன்ஹுமா)
நூல் : அஹ்மத் - முஸ்லிம், நஸாஈ, இப்னுமாஜா
02. நரை முடியின் நிறத்தை மாற்றுங்கள். கறுப்பு நிறத்தின் பக்கம் நெருங்காதீர்கள்.
அறிவிப்பவர் : ஹளரத் அகஸ் ரழியல்லாஹு அன்ஹு
நூல் : முஸ்னத் அஹ்மத்
03. கடைசி காலத்தில் சில மனிதர்கள் புறாவின் இறக்கையைப் போல் கருஞ்சாயம் பூசுவார்கள்.
இவர்கள் சொர்க்கத்தின் வாடையை நுகரமாட்டார்கள்.
அறிவிப்பவர் : ஹளரத் அப்துல்லாஹ் இப்னு, அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா
நூல் : அஹ்மத், அபூதாவூத், நஸாஈ, இப்னு ஹிப்பான், ஹாகிம்
காட்டுப் புறாக்களின் வால்பகுதி கருமையாக இருக்கும். அதனால், தாடிக்கு புறாவின் வாலை ஒப்புவமை கூறினார்கள். நபிகள் கோமான் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம்.
04. கறுப்பு சாயம் பூசுபவர்களை மறுமையில் அல்லாஹுத்தஆலா பார்க்கவே மாட்டான்.
அறிவிப்பவர் : இப்னுஸஃது ஆமிர் ரழியல்லாஹு அன்ஹு (முர்ஸல்)
05. மஞ்சள் முஃமீனின் சாயம், சிவப்பு முஸ்லினின் சாயம், கறுப்பு காபிரின் சாயமாகும்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா
நூல் : தப்றானி, முஃஸமுல்கபீர், ஹாகீம், முஸ்தத்றக்
06. நரைமுடி (அல்லாஹ்வின்) பிரகாசமாகும். (நூர்) யார் நரை முடியை பிடுங்குகின்றாரோ அவர் அல்லாஹ்வின் பிரகாசத்தை பிடுங்கியவராவார். முதன் முதலில் நரை முடிக்கு மருதோண்டியால் சாயமிட்டவர் நபி இப்றாஹீம் அலைஹிவசல்லமாகும். முதன் முதலில் தாடிக்கு கறுப்பு சாயம் பூசியவன் பிர்அவ்ன் ஆகும்.
அறிவிப்பவர் : ஹளரத் அனஸ்பின் மாலிக் ரழியல்லாஹு அன்ஹு
நூல் : தைலமி, இப்னு நஜ்ஜார்
Comments
Post a Comment