வஸீலா...நல்லடியார்களின் வழிமுறையா ..?

 வஸீலா தேடுவது நபிமார்கள், வலிமார்கள் மற்றும் நல்லடியார்களின் வழிமுறையா ..?

ரஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வசல்லமவர்களை ஸியாரத் செய்வது பற்றிய விஷயத்தில் நான்கு மத்ஹபுகளின் இமாம்களும் இவ்வாறு ஒத்த கருத்துள்ளவர்களாக கூறியுள்ளார்கள்.

‘புனித ரௌலாவை தரிசிப்பவன் சங்கையான அன்னாரின் புனித ரௌலாவை முன்னோக்கி தனது பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டும். தனது தேவைகள் நிறைவேற வேண்டும் என்று மனதில் நாடி பெருமானார் ஸல்லல்லாஹு  வஸீலாவாக்கி அல்லாஹுத்தஆலாவிடம் பிரார்த்திக்க வேண்டும். இவ்வாறு பிரார்த்திப்பது சந்தேகமில்லாமல் (ஷரீஅத்தில்) சுன்னத்தான காரியமாகும்.

ஆதாரம்: ங{ன்யத்துத் தாலிபீன்
பாகம் - 1, பக்கம் - 90

முஹ்யத்தின் இமாம் நவவி றஹ்மத்துல்லாஹி அலைஹி கூறுகின்றார்கள்.
றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹிவசல்லமவர்களின் புனித ரௌலாவைத் தரிசிப்பவர் (கிப்லாவுக்கு பின்காட்டி) நபியவர்களின் திருமுகத்தை நோக்கி நின்று அன்னாரை வஸீலாவாக்கி அல்லாஹ்விடம் பிரார்த்திக்க வேண்டும். தனது பிரார்த்தனையில் அன்னாரின் ஷபாஅத்தையும் தேடுவான்.
ஆதாரம்: ஷரஹுல் முஹத்தப், பாகம் 2, பக். 224

இதே கருத்தை ஷா பிஈ மத்ஹபின் சட்ட உயர் நூற்களான மஹல்லி, பாகம் 2, பக்;. 126 நிஹாயா பாகம் 3, பக்கம் 310 லும் கூறப்பட்டுள்ளது. (இவ்விருநூற்களும் மத்ரஸாக்களின் இறுதி வகுப்பின் பாடத்திட்டத்தில் உள்ளது)

அல்லாமா இப்னு ஹஜர் மக்கி, ஹைதமி றஹ்மதுல்லாஹி அலைஹி கூறுகின்றார்கள்.

மழை தேடி பிரார்த்திப்பதற்காக திரண்டுள்ள யாவரும், மனதில் அல்லாஹ்வுக்காக தான் செய்த புனித அமல்களையும், நல்லடியார்களையும் வஸீலாவாக்கி பிரார்த்திப்பது சுன்னத்தாகும். குறிப்பாக நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லமவர்களின் புனித குடும்பத்தினரையும், அன்னாரின் நெருங்கிய உறவினர்களையும் பொருட்டாக்கி அவர்களின் ஷபாஅத்தை வேண்டி பிரார்த்திப்பதும் சுன்னத்தாகும்.

ஆதாரம்: ஷரஹு பாபழ், 97

ஹாஷியத்துல் ஈழாஹ் என்ற நூலில் இமாம் இப்னு ஹஜர் ரஹ்மத்துல்லாஹி அலைஹிகூறுகின்றார்கள்.
றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹிவசல்லமவர்களைப் பொருட்டாக்கி வஸீலாத் தேடுவது நபிமார்கள், வலிமார்கள் மற்றும் நல்லடியார்களின் வழிமுறையில் உள்ள நற்காரியம் என்பதற்கு ஆதிபிதா நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நபியவர்களைப் பொருட்டாக்கி யாஅல்லாஹ்! எனது சந்ததியில் பின்ன தோன்ற இருக்கும் முஹம்மதுவின் (ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம்) பொருட்டால் என் பாவத்தைப் பொறுத்துக் கொள்வாயாக! என்று கேட்ட துஆ தக்க ஆதாரமாகும்.

ஆதாரம்: ஹாஷpயத்துல் ஈழாஹ். பக்கம் - 500
வழிகேடர் முஹம்மதுப்னு அப்துல் வஹாப் நஜ்தி (வஹாபி)யின் ஆசிரியர் அல்லாமா முஹம்மத் இப்னு ஸுலைமானுல் குர்தி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகின்றார்கள். ஸாலிஹான நல்லடியாகர்களின் துஆ அங்கீகரிக்கப்படும் என்ற ஆதரவு இருப்பதனால் அவர்களைப் பொருட்டாக்கி பிரார்த்தனை செய்வது ஏற்றமாகும்.

ஆதாரம்: ஹாஷpயத்துல் குர்தி, பக்கம் 97
மேலும் அவர்கள் கூறும்போது,
அறிக! நபிமார்கள், ஸாலிஹீன்களின் பொருட்டை வஸீலாவாக்கிக் கொள்வது விரும்பத்தக்க செயலாகும். 

இது சஹீஹான பல ஹதீதுகள் மூலம் ஊர்ஜிதமாக்கப்பட்ட விஷயமாகும்.
ஆதாரம்: பதாவா குர்தி, பக் 25

Comments

Popular

இஸ்லாமிய கேள்வி பதில் :- பாகம் : 5

சத்திய இஸ்லாத்திற்காக ஸஹாபி பெண்களின் தியாகங்கள்..!

கஃபாவை பற்றிய சிறப்பு & ருசிகர தகவல்கள்

இஸ்லாமிய கேள்வி பதில் .!! பாகம் : 4

இஸ்லாமிய கேள்வி பதில் ..!! பாகம் : 2

புனித ஹஜ்ஜின் ஐந்து நாட்கள் செயல் முறை விளக்கம்

முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ( ரலியல்லாஹூ அன்ஹூ ) ஆண்டகை அவர்களின் சிறப்பு திருநாமங்கள்