மஃரிஃபா - ஞானம் - ஆன்மீகம் ...!!!


                           ஆன்மீகம்...!!!  

                     மஃரிஃபா - ஞானம் -

                      பற்றிய விளக்கம் :-

           உண்மை ஒன்று கேளுங்கள்...!!!

                           اول الدينِ معرفةُ الله

மார்க்கத்தின் முதன்மையானது அல்லாஹூ தாலாவை பற்றி அறிவது
என்ற வாக்கின் படி முதல் கடமை அல்லாஹூதாலாவை பற்றி அறிவதாகும் .

இதுவே எல்லா காரியங்களுக்கும் அடிப்படையாகும் இது இன்றி எதுவும் சரியாக அமையாது .

எனவே இறை ஞானம் பற்றிய கல்வியை நாம் அறிய கடமை பட்டுள்ளோம்.

        قال رسول الله صلي الله عليه وسلم :-

                     كُلُّكُمْ حَمْقٰي فِي ذاتِ اللهِ

அல்லாஹ்வின் உள்ளமககயின் விஷயத்தில் நீங்கள் அனைவரும் அறிவற்றவர்கள் தாம் .

      قال رسول الله صلي الله عليه وسلم :-

                 اَعْرَفُكُمْ بالله اَعْرفُ بصفاته

உங்களில் அல்லாஹ்வை மிக அறிந்தவர் ( யாரென்றால் ) அவனுடைய ஸிபத்துகளை நன்றாக அறிந்தவர்தான்..

மஃரிஃபா என்னும் ஞானத்தின் மிக நெருக்கமானது " தன்னை பற்றி அறிவதாகும் "...

              من عرف نفسه فقد عرف ربه

தன்னை அறிவதே இறைவனை அறிவதாகும் .

மஃரிஃபா உடைய ஞானத்தில் மிகக்  குறைந்த்து " படைப்பினங்களைச் சிந்தனை செய்வதாகும் "..

        تفكَّروْا في اٰلآءِ اللهِ ولا تفكّرُوا في ذاتِهِ

" அல்லாஹ் வுடைய அருட்கொடைகளைப் பற்றி சிந்தனை செய்யுங்கள் அவனுடைய உள்ளமைப் பற்றி நீங்கள் சிந்தனை செய்ய வேண்டாம்  "என்று கூறப்பட்டுள்ளது . அது குப்ரை உண்டாக்கிவிடும் .

இந்த மஃரிஃபா என்ற ஞானம்  இரண்டு படித்தரங்களை உள்ளடக்கியதாகும் .

1 - கஸ்பீ - என்ற ஞானம்  படித்து தெரிந்து கொள்வதால் கிடைக்கும் இல்மு ஆகும் .
கஸ்பீ என்ற இல்முக்கு வரம்பு உண்டு...

2 - வஹ்பீ - என்ற ஞானம் அல்லாஹ்வின் புறத்திலிருந்து பெறப்படும்  இல்மு மாகும் .

இந்த வஹ்பீ என்ற ஞானத்திற்கு இரண்டு வகை பெயர் கூறப்படும் :-

1 - இல்முல்-லதுன்னி என்றும்.
2 - இல்முல்- கஷ்ப் என்றும் .
இந்த வஹ்பீ என்ற ஞான கல்விக்கு வரம்பு என்பது இல்லை .
இந்த இரண்டு வகையான ஞானங்களும் அதாவது இல்மே கஸ்பீ, இல்மே- வஹ்பீ என்ற இரண்டு ஞானங்களும் மூன்று தன்மையில் அடங்கிவிடும் .

அதாவது :-

 அல்லாஹூவை அறிவதற்கு மூன்று வழிகள் உண்டு ...

முதல் தன்மை :- تنزيه - தன்ஜீஹ் :-


அல்லாஹ்வின்  அனைத்துப் படைப்பினங்களை விட்டும் அல்லாஹூவை தூய்மைப் படுத்துவதாகும் , 

அதாவது :- அல்லாஹ்வுடைய தாத்து , ஸிபத்து ( தன்மை ) களின் புறத்தினால் அவனுக்கு இலாயிக் அல்லாதவைகளை ( படைப்பினங்களை ) விட்டும் பரிசுத்தமானவன் என்று அறிவதாகும் - இந்த வழி முறை மிக  அல்லாஹ்வை அறிவது மிக குறைவான வழி ஆகும் ( உபயோகம் அற்றது )...!!!

இரண்டாவது தன்மை :-تشبيه  தஷ்பீஹ் :-

அல்லாஹூவை அவனத்துப் படைப்பினங்களோடு ஒப்பாக்குவதாகும் அதாவது :-متشابهة - முதஷாபிஹான - நேர் பொருள் பொருந்தாத திருக்குர்ஆன் வசனங்களை நேரடியான ( அர்தத்திலேயே )  பொருள்களிலேயே கூறுவதாகும் ...

உதாரணத்திற்கு :-

ويبقي وجه ربك ذوالجلل والاكرام ٢٧:٥

كل شئ هالك الا وجهه

சகல வஸ்த்துகளும் அழிந்தாகும் அவனுடைய வஜ்கை ( முகத்தை) தவிர
இப்படி பொருள் செய்வது தவறு
அல்லாஹ்வுடைய - தாத்தையோ, அல்லது  ஸிபத்துகளையோ , அவனுடைய படைப்பினங்களுடைய உருவங்களையும் ,உருப்புகளையும் அல்லாஹ்க்கு உண்டு என்று கூறுவது .
இவ்வழி மிக மிக மோசமான குப்ரான வழியாகும் ...

மூன்றாவது தன்மை :- تنزيه தன்ஜீஹ் -

க்கும் , تشبيه தஷ்பீஹ் -க்கும் இடையில் ஒன்று சேர்த்துக் கொண்டிருக்கும் تنزيه محَض தன்ஜீஹூ மஹல் - கலப்பற்ற   தூண்மைப்படுத்துதல் என்பது தான் நேரான வழியாகும் .

இதுதான் நபிமார்கள் ,ரஸூல் மார்கள் ,ஸஹாபா பெருமக்கள் ,இறைநேசர்கள் ,நல்லடியார்கள் , ஆகியோர்களுடைய (ஞான) வழியாகும் ...

உதாரணம் :-
அல்லாஹூ - தஆலா   படைப்புகளைப் படைப்பதற்கு முன் எவ்வாறு இருந்தானோ அவ்வாறே இருந்து கொண்டிருக்கிறான் . இனி எப்பொழுதும் அவ்வாறே இருந்து கொண்டிருப்பான் . ஆனால் எல்லாப் பொருட்களையும் தன்னுடைய ஸிஃபத்துகள் வெளியாகும் படியான மள்ஹராக ( இடமாக ) ஆக்கி அவன் தஜல்லீயாகி ( வெளியாகி)க் கொண்டே இருக்கிறான் . 

பூவினுல் வாசத்தைப் போன்று, எள்ளினுள் எண்ணையைப் போன்று ஒட்டியும் ஒட்டாமலும் ,சேர்ந்தும், சேராமலும் இருக்கிறானென்று சொல்ல முடியாத வண்ணம் அமைந்திருக்கிறான் . இதனால் தான்..

        ليس كمثله شىء ١١-٤٢
அவனைப் போன்று எப்பொருளும் இல்லை ..!!

அல்லது :- அவனைப் போன்றதகப் போன்று எப்பொருளும் இல்லை (42- 11)
என்று அல்லாஹ் சொன்னது போல . அல்லாஹ்வுடைய தாத்துக்கு - எவ்விதமான எல்லையும் ,வடிவமும், கட்டுப்பாடும் , கோலமும் இல்லை என்று நம்புவது ...

                         وله كلّ شيءٍ ٩١-٢
அவனுக்கு எல்லா வஸ்துவும் உண்டு (27-91) என்று இறைவன் கூறியது போன்று . 

அவனுக்கு அவனுடைய சிபாத்தின் புறத்தினாலும் தஜல்லிய்யாத்தின் தோற்றங்களின் புறத்தினாலும் முன்பு மறுக்கப் பட்டவைகள் எல்லாம் உண்டு என்று நம்புவது .

அல்லாஹூ தாலாவுக்கு வேறொரு பொருள்
அறவே இல்லாத்தினால் வேறோன்றைக் கொண்டு ஒப்பானவனில்லை என்றும் " தஸ்பீஹ் " உடைய கோலங்களில் வெளியானவனாக இருப்பதுடன் அவன் முன் இருந்த " தன்ஸீஹ் " யை விட்டும் பேதகமாகவும் மில்லை என்று நம்புவது
இன்னும் ' தன்ஸீஹானது ' அவனுக்கு அவனுடைய தாத்தைப் பொருத்த தாகும்.
' தஷ்பீஹானது ' அவனுடைய மள்ஹரை வெளியாகும் ஸ்தானத்தைப் பொருத்ததாகும் என்று நம்புவதும்.

                سبحان ربك رب العزة عما يصفون
அவர்கள் வர்ணிக்கும் வர்ணிப்பை விட்டும் பரிசுத்தமானவன் ( 37-180)..

என்று அல்லாஹ் சொல்வதை போல் அவன் " தன்ஸீஹ் , தஷ்பீஹ் " இவை இரண்டிலேயும் கட்டு  என்றும் நம்புவதுமாகும் இந்த வழி ( முறை ) தான் பரிபூரணமான வழியாகும் .

அல்லாஹூ வின் உஜூதிற்கு கோல மில்லை , எல்லையுமில்லை ,கட்டுப்பாடுமில்லை, அப்படி தன்ஸீஹாக இருப்பதுடன் கோலத்திலும் குணப்பாடிலும் எல்லைய்யிலும் வெளியானது தோன்றினது கோலமின்மை,எல்லையின்மையில் நின்றும் அது எதன் பேரில்  அதைவிட்டும் பேதகப்படவுமில்லை .ஆதியில் எதன் பேரில் இருந்த்தோ அப்படியே இப்போதும் இருக்கிறது.

ஷைகுல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அரபி ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள் - புஸூஸூல் ஹிகம் - என்னும் நூலில் சொன்ன கவிதையின் கருத்தும் இதுவே ...
                  فان قلت بالتنزيه كنت مقيدا 

நீ ' தன்ஸீஹை ' கொண்டு [ மட்டும் தஷ்பீஹ் இல்லாமல் ] சொன்னால் [ அவனை தன்ஸீஹ் உடைய கோலத்தைக் கொண்டு ] கட்டுப்பாடுக்குள் ஆக்கிவிட்டாய் .

                 وان قلت بالتشبيه كنت محددا .
நீ - தஷ்பீஹ் கொண்டு [ மட்டும் தன்ஸீஹ் இல்லாமல் ] சொன்னால் நீ  [ அவனை தஷ்பீஹ் உடைய கோலத்தைக் கொண்டு ] எல்லைக்குள் ஆக்கிவிட்டாய் .

                 وان قلت بالامرين كنت مسددا.

நீ - [ தன்ஸீஹ் - தஷ்பீஹ் என்னும் ] இரண்டும் கருமங்களையும் கொண்டு சொன்னால் நேரான வழியில் ஆனவனாகவும் .

                   وكنت اماما في المعارف سيدا .
நீ மஃரிபாவில் மெஞ்ஞானங்களில் இமாமாகவும் ,தலைவனாகவும் ஆகுவாய் .
                         فمن قال بالاشفاع كان مشركا .
                         ومن قال بالافراد كان موحدا 

ஆகவே எவன் [ ஒன்றாகிய ஹக்கை  அதாவது அல்லாஹ்வோடு கல்கை அதாவது படைப்பினங்களை  தரிபடுத்துவது கொண்டு ] இரண்டாக்கி சொல்வானேயானால் அவன் [ ஹக்கை உஜூதில் ஒன்றாக்கி ஒன்றென்று தரிபடுத்தி அவனோடு அவனல்லாத்தை தரிப்படுத் தாததினால் ] முவஹ்ஹிதாக [ ஒன்றாக்கியவனாக ] ஆகுவான் .

                     فاياك والتشبيه ان كنت ثانيا .
                     واياك والتنزيه ان كنت مفردا .
ஆகையினால் நீ [ ஹக்கையும் , கல்கையும் , இரண்டு என்று சொல்லி ] இரண்டாக்குவாயானால் [ கல்கை ஹக்கோடு தரிபடுத்தி அவனை அதைக் கொண்டு ]
ஒப்பாக்குவதை பயந்துக் கொள் தவிர்த்துக் கொள் .
[ எனினும் கல்கை ஹக்குடைய தஜல்லியாத்தின் சூரத்து - வெளிப்பாட்டின் கோலம் என்றும் அது தன்னிலே மவ்ஜூது - அல்ல என்றும் தரி படுத்துவது அவசியமாகும் ] நீ ஒன்று என்று சொன்னால் தன்ஸீஹ் செய்வதை தவிர்ந்து கொள் .

இன்னும் அந்த உஜூதாகிறது ஒன்றே யாகும் ஆனால் உடைகளாகிறது பலதாக இருக்கும் உஜூதில் பலது என்பது மள்ஹருடைய - வெளியாகும்.

   وما الوجه الا واحد غير انه *اذا انت اعددت المراياتعددا
முகம் ஒன்றையல்லாதில்லை [ முகம் ஒன்றுதான் பல அல்ல ] எனினும் நீ கண்ணாடிகளைப் பலதாக்குவாயானால் அது பலதாகி விடும் .

சகல படைப்பினங்களும் அந்த உஜூதான அல்லாஹூ தாலவை விட்டும் நீங்கி இருக்காது .

               انما الكون خيال فهو حق في الحقيقة *
                 كل من يفهم هذا حاز اسرار الطريقة

நீச்சயமாக ' கௌன்'  படைபினங்கள் கற்பனை யானதாகும் எதார்த்தத்தில் அவனே ஹக்கானவனாகும் . இதை விளங்கிய ஒவ்வொருவரும் தரீகத்தின் இரகசியங்களை சேகரித்துக் கொண்டார் : 

என்று மகான் ஷைகானா முஹ்யீத்தீன் இப்னு அரபி அவர்கள் பாடிய கவிதையின் கருத்தும் இதுவே ஆகும் .
உலகம் என்பது கற்பனையானதாகும் எதார்த்த்தில் அதற்கு என்று ஒரு உஜூது இல்லை . [ பார்பதர்க்கு உஜூது போன்று தெரியும் ] உதாரணமாக கண்ணாடியில் பதியும் கோலத்தை போல் , கானல் நீரை பார்பது - தண்ணீர் என்று எண்ணுவது போன்றாகும் மெய்பொருளான ஹக்கான ஒருவனான அல்லாஹ்வுடைய உஜூதைத் தவிர வேறொன்றும் இல்லை .....
இன்ஷா அல்லாஹ் ...தொடரும் ...




Comments

Popular

இஸ்லாமிய கேள்வி பதில் :- பாகம் : 5

சத்திய இஸ்லாத்திற்காக ஸஹாபி பெண்களின் தியாகங்கள்..!

கஃபாவை பற்றிய சிறப்பு & ருசிகர தகவல்கள்

இஸ்லாமிய கேள்வி பதில் .!! பாகம் : 4

இஸ்லாமிய கேள்வி பதில் ..!! பாகம் : 2

புனித ஹஜ்ஜின் ஐந்து நாட்கள் செயல் முறை விளக்கம்

முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ( ரலியல்லாஹூ அன்ஹூ ) ஆண்டகை அவர்களின் சிறப்பு திருநாமங்கள்