உன்னையே வணங்குகிறோம் உன்னிடமே உதவி தேடுகிறோம்.


நாம் அனைவரும் சூரத்துல் பாதிஹா ஓதுகிறோம் அது தொடர்பாக சில விளக்கங்களை சொல்லல்லாமே ...!


اياك نعبد واياك  نستعين உன்னையே வணங்குகிறோம் உன்னிடமே உதவி தேடுகிறோம். 

இந்த வசனம் نعبدك ونستعينك இவ்வாறு வந்திருக்கலாம். ஆனால் இந்த வசனமோ அல்குர்ஆனிலே சுத்தி வளைத்து மூக்கைத்தொடும் கதைபோல வந்திருக்கிறது. அல்லாஹ் வீணாக எதையும் செய்யமாட்டன் சொல்லமாட்டன். அவ்வாறு சொல்லிருக்கிறான் என்றால் அதிலே ஒரு விடயம்; விளக்கம் இருக்கிறது அதைப் புரியவேண்டும்.


இதிலே உள்ள இந்த  ك என்ற ஒரு எழுத்து இருக்கிறது அந்த எழுத்தை முன்னாள் கொண்டு வருவதாக இருந்தால் அதை மட்டும் கொண்டுவர முடியாது. மாறாக ايّاك என்று ايّا உடன் சேர்த்தே சொல்ல வேண்டும் என்பது அரபு இலக்கணச் சட்டமாகும்.

அல்லாஹ் இந்த வசனத்தை, விடயத்தை உறுதிப்படுத்துவதற்காகவே இவ்வாறு சொன்னான். இதிலுள்ள பிரயோசனம் என்னவென்றால். نعبدك என்று  சொன்னால் "உன்னை   வணங்குகிறோம்' என்று வரும். 

ஆனால் اياك نعبد 
என்றால் உன்னையே வணங்குகிறோம் என்று வரும். முதலாவது சொன்ன வசனப்படி உன்னை வணங்குகிறோம் என்று சொன்னால்; உன்னையும் வணங்குகின்றோம் இன்னொன்றையும் வணங்குகின்றோம் என்ற ஒன்று அங்கு வருவதற்கு சாத்தியம் ஒன்று இருக்கிறது. ஆனால் "உன்னையே வணங்குகிறோம்" என்று சொல்லும்போது எந்த ஒரு சந்தேகத்துக்கும் இடமின்றி உறுதியாக தெளிவாக கூறப்பட்டுவிடுகிறது. இந்த பேச்சைப் பலப்படுத்தவே அல்லாஹ் இவ்வாறு சொல்லியிருக்கிறான்.


அடுத்தது واياك نستعين  . இதைக்கூட نستعينك  "உன்னிடம் உதவி தேடுகிறோம்" என்று சொல்லி இருக்கலாம். அவ்வாறு சொல்லும் போது உன்னிடமும் தேடுகிறோம் இன்னொருவரிடமும் உதவி தேடுகிறோம் என்ற ஒன்று அங்கே வருவதற்கு சத்தியம் இருக்கிறது. இந்த பேச்சை வலுப்படுத்தவே அல்லாஹ் واياك  نستعين என்று கூறி இருக்கிறான். 

இந்த இரண்டு இடத்திலும் உன்னையே வணங்குகிறோம் உன்னிடமே உதவி தேடுகிறோம் என்று வரும் இந்த உறுதிப்படுத்தலை தருவது மேலே வசனத்தில் உண்டான ايا என்ற சொல்லே ஆகும்.

ஆகக்குறைந்தது நாம் ஐந்து நேரம் தொழுகிறோம் சுன்னத்தான  தொழுகை அதிகம் தொழுபவர்களும் எத்தனையோ பேர் இருப்பார்கள். இவ்வாறு நாம் தொழும் ஒவ்வொரு தொழுகையின் ஒவ்வொரு ரக்அத்திலும் மேற்கண்ட வசனத்தை ஓதியே ஆகவேண்டும்.

நாம் தொழுகையில் அல்லாஹ்விடமே உரையாடுகிறோம் என்பது உங்களுக்குத் தெரியும். அப்படிஎன்றால் நாம் அல்லாஹ்விடம்  உன்னையே வணங்குகிறோம் என்று வாக்களிக்கிறோம். 

வாக்களித்துவிட்டு வெளியே வந்து அந்த வாக்கை மீறுகின்றோமா? இல்லையே! யாரையேனும் வணங்குகின்றோமா? அவ்வாறு யாரையும் வணங்குவதில்லை.
அடுத்தது என்ன சொல்கிறோம்? 

واياك  نستعين "இறைவனே உன்னிடமே உதவிதேடுகிறோம்" வேறு யாரிடமும் கிடையாது என்று தொழுகையில் பள்ளிவாயலில் வைத்து வாக்களித்துவிட்டு. 

வீடு சென்று தன் மனைவியை அழைத்து உணவு தா! என்றும் வேறு எதையோ எடுத்துக்கொடு என்றும் நாம் கேட்பதன் மூலம் எமது மனைவியிடம் உதவி தேடிவிடுகின்றோம். 

அல்லாஹ்வுக்களித்த வாக்கிலிருந்து மாறுபட்டுவிடுகின்றோம்.

இச்சமயம் அல்லாஹ்விடம் உதவி தேடப்படுகிறதா? அல்லது மனைவியிடம் வேறு சிருஷ்டிகளிடம் உதவி தேடப்படுகிறதா? சிருஷ்டிகளிடமே உதவி தேடப்படுகிறது.

 அல்லாஹ்வுக்கு அளிக்கப்பட்ட வாக்கின் நிலை என்ன? கொடுக்கப்பட்ட வாக்கின் பிரகாரம் எது வேண்டுமென்றாலும் அல்லாஹ்விடமே கேட்கவேண்டும். ஆனால் அது இங்கு நடக்கவில்லை.

உங்களால் சொல்லமுடியுமா இந்த உலகில் அல்லாஹ்விடம் மாத்திரம் உதவி தேடி வேறு யாரிடமும் உதவி கேட்காமல் வாழமுடியும் என்று. சொல்ல முடியவே முடியாது.

நாங்கள் வாக்களித்தபடி இன்றி இவ்வாறு வாழ்வது. வாக்கு மீறுதலா இல்லையா? இதற்கு பாவம் கிடைக்குமா இல்லையா? நிச்சயம் கிடைக்கும். 

அப்படிஎன்றால் அதிலிருந்து தப்புவதற்கு வழி இல்லையா? என்றால் வழி உண்டு. என்ன வழி நாம் யாரிடம் உதவி தேடினாலும் அல்லாஹ்விடமே உதவி தேடுவதாய் என்னவேண்டும். 

இது மாத்திரமே பாவம் ஏற்படாது போக ஒரே வழி. இல்லையென்றால் சூரத்துல் பாத்திஹா ஓதும் அனைவரும் அல்லாஹ்வுக்கு மாறு செய்தவர்களாகவும், பாவிகளாகவும் ஆகவேண்டியே வரும் என்பதில் சந்தேகம் கிடையாது.

اذا اخذت اخذت من الله اذا اعطيت اعطيت الله நீ கொடுத்தால் அல்லாஹ்வுக்குக் கொடு நீ எடுத்தால் அல்லாஹ்விடமிருந்து எடு. 

الاولياء كانو يأخذون من الله ويعطون الله அவ்லியாக்கள் என்பவர்கள் அல்லாஹ்விடமிருந்து எடுக்கிறார்கள், அல்லாஹ்வுக்குக் கொடுக்கிறார்கள்.

ஆகவே நாம் எதை எடுத்தாலும் அல்லாஹ்விடமிருந்து எடுப்பதாகவும் எதைக் கொடுத்தாலும் அல்லாஹ்வுக்குக் கொடுப்பதாகவுமே எண்ண வேண்டும் இல்லையென்றால் நாம் அல்லாஹ்வுக்களித்த வாக்கிற்கு மாறு செய்தவர்களாக ஆகிவிடுவோம். 

இவ்வாறு எண்ணுவது பிழையாகிவிடாதா என்றால் கிடையாது. ஏனெனில் அவனல்லாத ஒன்றுமில்லை என்பதுதானே தௌஹீத், ஈமான்.

எங்களுக்கு பலதாக மனைவியாக பிள்ளையாக தாயாக தந்தையாக மரமாக தெரிகிறதே அதெல்லாம் என்ன? 

அது எமது பேதைமை, மடமை, அறியாமை. நாம் பரிசோதனை செய்து கண்ணாடி அணிந்தால்தான் பொருள் எதுவென்று தெளிவாகத்தெரியும். மற்றவரின் கண்ணாடியை அணிந்து பார்த்தல் சாரைக் கண்போல பொருள் இரண்டாகவே தெரியும்....

இன்ஷா அல்லாஹ் உங்களுக்கு விளக்கத்தை தருவானாக..
ஆமீன்....

Comments

Popular

இஸ்லாமிய கேள்வி பதில் :- பாகம் : 5

சத்திய இஸ்லாத்திற்காக ஸஹாபி பெண்களின் தியாகங்கள்..!

கஃபாவை பற்றிய சிறப்பு & ருசிகர தகவல்கள்

இஸ்லாமிய கேள்வி பதில் .!! பாகம் : 4

இஸ்லாமிய கேள்வி பதில் ..!! பாகம் : 2

புனித ஹஜ்ஜின் ஐந்து நாட்கள் செயல் முறை விளக்கம்

முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ( ரலியல்லாஹூ அன்ஹூ ) ஆண்டகை அவர்களின் சிறப்பு திருநாமங்கள்