குர்பானி & உழ்ஹிய்யா பற்றிய தெளிவான விளக்கம்...
குர்பானி & உழ்ஹிய்யா சட்டங்களை பற்றிய தெளிவான விளக்கம்...
அஸ்ஸலாமு அலைக்கும்
வ ரஹ்மதுல்லாஹி வ பரகதுஹூ
வ ரஹ்மதுல்லாஹி வ பரகதுஹூ
நாம் முதலில் அறிந்து கொள்ள வேண்டியது சட்டங்கள் ...
குர்பானி என்றால் என்ன ..?
உழ்ஹிய்யா என்றால் என்ன ..?
என்பதை தெளிவாக
விளங்கிகொள்ள வேண்டும்..
பொதுவாக உழ்ஹிய்யா என்பதற்கு குர்பான் என்றும் கூறப்படும் . ஆனால் இரண்டு வார்தைகளால் ஒன்று பட்டு இருந்தாலும் இவைகளின் சட்டங்கள் மாறுபட்டதாகும் ...
குர்பானி என்ற வார்த்தைக்கும்
உழ்ஹிய்யா என்ற வார்த்தைக்கும்
வித்தியாசங்கள் உண்டு என்பதை விளங்கி கொள்ளவேண்டும் ஏன் என்றால் ,
உழ்ஹிய்யா என்ற வார்த்தைக்கும்
வித்தியாசங்கள் உண்டு என்பதை விளங்கி கொள்ளவேண்டும் ஏன் என்றால் ,
குர்பானி என்பது :
யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். எதை வேண்டுமானாலும் குர்பானி கொடுக்கலாம். குர்பானிக்கு என்று நேரமோ காலமோ கிடையாது . இறைப் நேருக்கத்தை நாடி செய்வதற்கு குர்பானி என்று சொல்லப்படும் ..
القُرْبانُ : ما يُتقرَّب به إلى الله تعالى من ذبيحة وغيرها
உழுஹிய்யா என்பது :
உழுஹிய்யா எனப் பெயர் வரக் காரணம் " ழுஹா " ( பொழுது உயரும் நேரத்தில் ) கொடுப்பதால் அவ்வாறு அழைக்கப் படுகிறது . ஆனால் மார்க்கத்தில் ஒரு குறிப்பான மிருகத்தை குறிப்பான நாளில் நிபந்தனைகள் , காரணங்கள் , நிறைவேறியிருக்கும் நேரத்தில் இறைப் பொருத்ததை நாடி அறுப்பதற்கு உழுஹிய்யா எனப்படும் . குறிப்பான மிருகமென்றால் ஒட்டகம் , பசு , காளை , செம்மறி ஆடு ,நிபந்தனைகள் ஆகியவைகளாகும் .குறிப்பான வயதென்றால் ஒட்டகம் ஐந்து வருடமும் ,பசு காளை எருமை இரண்டு வருடமும், ஆட்டினமாயிருந்தால் ஒரு வருடமாயும் இருத்தல் வேண்டும் ...
أما أصل تسميتها فمأخوذٌ من الضَّحوة، وهو وقت الضحى، ويُقصد بالأُضحية هنا ما يتمُّ ذبحه من الأنعام،والأصل أن يكون القصد من ذبح الأضحية التَّقرُّب إلى الله -سبحانه وتعالى- في أوقات معينة هي أيام عيد الأضحى المبارك.
ஆறுமாதக் குட்டியா ..?
ஒருவருடம் பூர்த்தியானதைப் போன்றுள்ள ஆறுமாத ஆட்டை ஒரு வருடம் பூர்த்தியான ஆடுகளுடன் நிறுத்திப் பார்த்தால் குறைந்த வயதுள்ளதாக வித்தியாசம் தெரியாவிடில் அதையும் குர்பானி கொடுக்கலாம்.
குர்பானியும் -மார்க்க சட்ட
மேதைகளும் ....
குர்பானியும் -மார்க்க சட்ட
மேதைகளும் ....
ஹிஜ்ரி 2-ம் வருடம் குர்பானி கடமையாக்கப்பட்டது.
ஹனபி மத்ஹபின் படி :
இமாம் அபூஹனீபா ( ரஹ்மத்துல்லாஹி ) அவர்களிடத்தில்
குர்பானி கொடுத்தல் வாஜிபாகும் ..
குர்பானி கொடுத்தல் வாஜிபாகும் ..
ஷாஃபி மத்ஹபின் படி :
இமாம் ஷாபிஈ (ரஹ்மத்துல்லாஹி ) அவர்களிடத்தில் குர்பானி கொடுப்பது வாஜிபுக்கு சம்மான சுன்னத்தே முஅக்கதாவாகும்..
மாலிகி மத்ஹபின் படி :
இமாம் மாலிக் ( ரஹ்மத்துல்லாஹி ) அவர்களிடத்தில்
குர்பானி கொடுத்தல் வாஜிபாகும் ..
குர்பானி கொடுத்தல் வாஜிபாகும் ..
ஹன்பலீ மத்ஹபின் படி :
இமாம் ஹன்பலீ ( ரஹ்மத்துல்லாஹி )
சக்தியிருந்தும் குர்பானி கொடுக்காத்து மக்ரூஹ் எனவும் , மற்றொரு ரிவாயத்தின்படி வாஜிபென்றும் கூறியுள்ளார்கள் ...
சக்தியிருந்தும் குர்பானி கொடுக்காத்து மக்ரூஹ் எனவும் , மற்றொரு ரிவாயத்தின்படி வாஜிபென்றும் கூறியுள்ளார்கள் ...
உழ்ஹிய்யாவின் காலம் :
துல்ஹஜ் மாதம் பிறை 10 அன்று பெருநாள் தொழுது முடிந்ததில் இருந்து, அய்யாமுத் தஷ்ரீக் பிறை ஹனபி மத்ஹப் படி துல்ஹஜ் பிறை 11,12,ம் நாள் சூரியன் மறையும் வரை..
ஷாஃபி மத்ஹப் படி துல்ஹஜ் பிறை 11,12, 13,ம் நாள் சூரியன் மறையும் வரை ...
எதன் குர்பானி கூடும் ...?
பசு , காளை , எருமை , ஒட்டகம் , வெள்ளை ஆடு ,செம்மறி ஆடு , ஆகியவைகளின் குர்பானி கூடும் .இது அல்லாதவைகளின் குர்பானி கூடாது ..
Comments
Post a Comment