இஸ்லாமிய கேள்வி & பதில் பாகம் - 6
இஸ்லாமிய கேள்வி பதில் .!! பாகம் : 6 குர்ஆனை பற்றி தெரிந்து கொள்ளவேண்டிய கல்வி :
101) திருக்குர்ஆனின் ஞானம் பெற்றவர்கள் அதிக எண்ணிக்கையில் வாழும் மாவட்டம் எது?
பதில் :
திருநெல்வேலி மாவட்டம்.
102) திருக்குர்ஆனை மனைம் செய்தவர்கள் ஹாபிழ்கள் தமிழகத்தில் அதிகஎண்ணிக்கையில் வாழும் ஊர் எது?
பதில் :
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேலப்பாளையம்.
103) திருக்குர்ஆன் முதன் முதலில் எந்த மொழியில் தர்ஜூமா செய்யப்பட்டது?
பதில் :
சுர்யானீ மொழியில்.
104) திருக்குர்ஆன் இரண்டாவதாக எந்த மொழியில் எப்போது தர்ஜமா செய்யப்பட்டது?
பதில் :
பர்பரீ மொழியில், ஹிஜ்ரி 127ல்..
105) திருக்குர்ஆன் மூன்றாவது தடவை எந்த மொழியில், எப்போது தர்ஜூமா செய்யப்பட்டது?
பதில் :
பாரசீக மொழியில், ஹிஜ்ரி 255ல்.
106) திருக்குர்ஆனை ஒதுவதால் என்ன நன்மை?
பதில் :
ஒரு எழுத்துக்கு 10 நன்மைகள் உண்டு (ஆதாரம் :திர்மிதீ).
107) திருக்குர்ஆனை ஒதக் கேட்பதால் என்ன நன்மை?
பதில் :
ஒதுவது போன்றே நன்மை கிடைக்கும் (அல்ஹதீஸ்)
108) திருக்குர்ஆனை ஒளுவுடன் ஓதினால் என்ன நன்மை கிடைக்கும்?
பதில் :
ஒரு எழுத்துக்கு 25 நன்மைகள் கிடைக்கும் (ஆதாரம் :இஹ்யா)
109) திருக்குர்ஆனை ஒருவர் உட்கார்ந்து தொழுகும் போது ஓதினால் என்ன நன்மை கிடைக்கும்?
பதில் :
உட்கார்ந்து தொழும் போது ஒரு எழுத்துக்கு50,50 நன்மைகள் கிடைக்கும் (ஆதாரம் :இஹ்யா)
110) திருக்குர்ஆனை நின்று தொழும் போது ஒதினால் என்ன நன்மை கிடைக்கும்?
பதில் :
ஒரு எழுத்துக்கு 100 நன்மைகள் கிடைக்கும் (ஆதாரம்:இஹ்யா)
111) திருக்குர்ஆனை பார்த்து ஒதுவது சிறந்ததா? பார்க்காமல் ஒதுவது சிறந்ததா?
பதில் :
பார்த்து ஒதுவதே சிறந்தது
112) திருக்குர்ஆனை திக்கி ஓதினாலும் நன்மைகள் கிடைக்குமா?
பதில் :
ஆம் : இரு மடங்கு நன்மைகள் கிடைக்கும்
(ஆதாரம் : புகாரி, அபூதாவூது, முஸ்லிம்,திர்மிதி)
(ஆதாரம் : புகாரி, அபூதாவூது, முஸ்லிம்,திர்மிதி)
113) திருக்குர்ஆன் மறுமையில் பரிந்துரைக்குமா?
பதில் :
ஆம் அதனை ஒதியவருக்கு கண்டிப்பாக பரிந்துரைக்கும்
(ஆதாரம் : முஸ்லிம்)
(ஆதாரம் : முஸ்லிம்)
114) சூரா ஃ பர்த்திஹா ஓதினால் என்ன நன்மை?
பதில் :
திருக்குர்ஆனில் 3ல் 2 பகுதி ஒதிய நன்மைகள் உண்டு.
115) சூரா யாசீன் ஓதினால் என்ன நன்மை?
பதில் :
10 திருக்குர்ஆன் ஓதிய நன்மைகள் உண்டு (ஆதாரம்: திர்மிதி)
116) சூரா இக்லாஸ் ஓத்னால் என்ன நன்மை?
பதில் :
திருக்குர்ஆனில் 3ல் 1பங்கு ஒதிய நன்மைகள் உண்டு.
(ஆதாரம் :புகாரி , இப்னு கஸீர்)
(ஆதாரம் :புகாரி , இப்னு கஸீர்)
117) திருக்குர்ஆனில் எந்த சூராவை ஒதினால்4000 வசனங்கள் ஒதிய
நன்மை கிடைக்கும்?
நன்மை கிடைக்கும்?
பதில் :
சூரா தகாசுர்..
118) திருக்குர்ஆனில் தலைசிறந்த 'ஆயத்'எது?
பதில் :
ஆயத்துல் குர்ஸீ..
119) திருக்குர்ஆனில் 'இதயம்' எந்த அத்தியாயம்?
பதில் :
யாஸீன் என்ற அத்தியாயம்..
120) திருக்குர்ஆனில் மொத்தம் எத்தனை எழுத்துக்கள் உள்ளன?
பதில் :
3,21,267 (3 லட்சத்து 21 ஆயிரத்து 267எழுத்துக்கள் உள்ளன.)
Comments
Post a Comment