இஸ்லாமிய கேள்வி & பதில் பாகம் - 6


            இஸ்லாமிய கேள்வி பதில் .!!                                      பாகம் : 6 
            குர்ஆனை பற்றி தெரிந்து                     கொள்ளவேண்டிய  கல்வி : 

101) திருக்குர்ஆனின் ஞானம் பெற்றவர்கள் அதிக எண்ணிக்கையில் வாழும் மாவட்டம் எது?
பதில் :
திருநெல்வேலி மாவட்டம்.

102) திருக்குர்ஆனை மனைம் செய்தவர்கள் ஹாபிழ்கள் தமிழகத்தில் அதிகஎண்ணிக்கையில் வாழும் ஊர் எது?
பதில் :
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேலப்பாளையம்.

103) திருக்குர்ஆன் முதன் முதலில் எந்த மொழியில் தர்ஜூமா செய்யப்பட்டது?
பதில் :
சுர்யானீ மொழியில்.

104) திருக்குர்ஆன் இரண்டாவதாக எந்த மொழியில் எப்போது தர்ஜமா செய்யப்பட்டது?
பதில் :
பர்பரீ மொழியில், ஹிஜ்ரி 127ல்..


105) திருக்குர்ஆன் மூன்றாவது தடவை எந்த மொழியில், எப்போது தர்ஜூமா செய்யப்பட்டது?
பதில் :
பாரசீக மொழியில், ஹிஜ்ரி 255ல்.

106) திருக்குர்ஆனை ஒதுவதால் என்ன நன்மை?
பதில் :
ஒரு எழுத்துக்கு 10 நன்மைகள் உண்டு (ஆதாரம் :திர்மிதீ).

107) திருக்குர்ஆனை ஒதக் கேட்பதால் என்ன நன்மை?
பதில் :
ஒதுவது போன்றே நன்மை கிடைக்கும் (அல்ஹதீஸ்)

108) திருக்குர்ஆனை ஒளுவுடன் ஓதினால் என்ன நன்மை கிடைக்கும்?
பதில் :
ஒரு எழுத்துக்கு 25 நன்மைகள் கிடைக்கும் (ஆதாரம் :இஹ்யா)

109) திருக்குர்ஆனை ஒருவர் உட்கார்ந்து தொழுகும் போது ஓதினால் என்ன நன்மை கிடைக்கும்?
பதில் :
உட்கார்ந்து தொழும் போது ஒரு எழுத்துக்கு50,50 நன்மைகள் கிடைக்கும் (ஆதாரம் :இஹ்யா)

110) திருக்குர்ஆனை நின்று தொழும் போது ஒதினால் என்ன நன்மை கிடைக்கும்?
பதில் :
ஒரு எழுத்துக்கு 100 நன்மைகள் கிடைக்கும் (ஆதாரம்:இஹ்யா)

111) திருக்குர்ஆனை பார்த்து ஒதுவது சிறந்ததா? பார்க்காமல் ஒதுவது சிறந்ததா?
பதில் :
பார்த்து ஒதுவதே சிறந்தது

112) திருக்குர்ஆனை திக்கி ஓதினாலும் நன்மைகள் கிடைக்குமா?
பதில் :
ஆம் : இரு மடங்கு நன்மைகள் கிடைக்கும்
(ஆதாரம் : புகாரி, அபூதாவூது, முஸ்லிம்,திர்மிதி)

113) திருக்குர்ஆன் மறுமையில் பரிந்துரைக்குமா?
பதில் :
ஆம் அதனை ஒதியவருக்கு கண்டிப்பாக பரிந்துரைக்கும்
(ஆதாரம் : முஸ்லிம்)

114) சூரா ஃ பர்த்திஹா ஓதினால் என்ன நன்மை?
பதில் :
திருக்குர்ஆனில் 3ல் 2 பகுதி ஒதிய நன்மைகள் உண்டு.

115) சூரா யாசீன் ஓதினால் என்ன நன்மை?
பதில் :
10 திருக்குர்ஆன் ஓதிய நன்மைகள் உண்டு (ஆதாரம்: திர்மிதி)

116) சூரா இக்லாஸ் ஓத்னால் என்ன நன்மை?
பதில் :
திருக்குர்ஆனில் 3ல் 1பங்கு ஒதிய நன்மைகள் உண்டு.
(ஆதாரம் :புகாரி , இப்னு கஸீர்)

117) திருக்குர்ஆனில் எந்த சூராவை ஒதினால்4000 வசனங்கள் ஒதிய
நன்மை கிடைக்கும்?
பதில் :
சூரா தகாசுர்..

118) திருக்குர்ஆனில் தலைசிறந்த 'ஆயத்'எது?
பதில் :
ஆயத்துல் குர்ஸீ..

119) திருக்குர்ஆனில் 'இதயம்' எந்த அத்தியாயம்?
பதில் :
யாஸீன் என்ற அத்தியாயம்..

120) திருக்குர்ஆனில் மொத்தம் எத்தனை எழுத்துக்கள் உள்ளன?
பதில் :
3,21,267 (3 லட்சத்து 21 ஆயிரத்து 267எழுத்துக்கள் உள்ளன.)

Comments

Popular

இஸ்லாமிய கேள்வி பதில் :- பாகம் : 5

சத்திய இஸ்லாத்திற்காக ஸஹாபி பெண்களின் தியாகங்கள்..!

கஃபாவை பற்றிய சிறப்பு & ருசிகர தகவல்கள்

இஸ்லாமிய கேள்வி பதில் .!! பாகம் : 4

இஸ்லாமிய கேள்வி பதில் ..!! பாகம் : 2

புனித ஹஜ்ஜின் ஐந்து நாட்கள் செயல் முறை விளக்கம்

முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ( ரலியல்லாஹூ அன்ஹூ ) ஆண்டகை அவர்களின் சிறப்பு திருநாமங்கள்