Posts

Showing posts from April, 2018

எல்லா முயற்சிகளும்

Image
قَلَّتْ حِيْلَتِىْ اَنْتَ وَسِيْلَتِيْ اَدْرِكْنِىْ يَارَسُوْلَ اَللهِ என்னுடைய எல்லா முயற்சிகளும் முற்றுப்பெற்றுவிட்டன. நாயகமே! ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  நீங்கள்தான் என்னுடைய வஸீலாவாக இருக்கிறீர்கள். அல்லாஹ்வின் ரஸூலே என்னைக் கைவிட்டுவிடாது இரட்சித்துக் கொள்ளுங்கள்...

பலவீனமான நபிமொழிகள் என்றால் என்ன?

Image
        பலவீனமான நபிமொழிகளை                 வைத்து அமல் செய்யலாமா? பலவீனமான நபிமொழிகள் என்றால் என்ன? நபிமொழியினை அறிவித்தவர்கள் பட்டியலில் ஒருவரோ, அல்லது சிலரோ நபிமொழிக் கலை வல்லுனர்கள் அறிவிப்பாளர்களுக்கென வகுத்து வைத்துள்ள விதிகளுக்கு மாற்றமானவர்களாக இருப்பர். எனவே அறிவிப்பாளர்களின் தகுதியின்மையைக் கருத்தில்  கொண்டு, அவர் அறிவித்த அந்த நபிமொழியை ளயீப்-பலவீனமானது என்று கூறுவர். இதில் கூட ஹதீஸ் கலைவல்லுனர்கள் ஒவ்வொருவரும் தனித்தனி விதிகளை வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அம்று-ஏவல், நஹீ-விலக்கல் போன்ற ஆணைகள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில்தான் பலவீனமான ஹதீஸ்களை ஆதாரமாக எடுக்கக் கூடாது. ஆனால் 'பழாயில்' சிறப்பு குறித்தான விசயங்களில் அமல் செயல்வதற்கு பலவீனமான நபிமொழிகளை எடுக்கலாம் என்பது நபிமொழிக் கலை வல்லுனர்களுடையவும் சட்ட அறிஞர்களுடையவும் ஏகோபித்த அபிப்பிராயம் ஆகும். பலவீனமான நபிமொழிகளை ஆதாரமாகக் கொண்டு 'பழாலயிலுல் அஃமால்'-நற்செயல்களில் அமல் செய்யலாம் என உலமாக்கள் ஏகோபித்துக் கூறியுள்ளனர். (நூல்: ஷரஹ்...

முஸ்லீம் என்று சொல்ல வேண்டியது வரும் அவர் யார் ?

Image
தொப்பி ,தாடி,தலைப்பா,இது போன்றவைகள் ..? இவர் எப்போது  பார்த்தாலும் தொப்பி அணிந்து இருக்கிறார் இவர்தான் முழுமையான முஸ்லீம் என்று சொல்வதாக இருந்தால் . இவரையும் நாம் முஸ்லீம் என்று சொல்ல வேண்டியது வரும் அவர் யார் ?  அவர்தாங்க போப்பாண்டவர் அவர் எப்போதும் தொப்பி அணிந்து இருக்கிறார்.அதற்க்காக இவரை முஸ்லீம் என்று சொல்லாமுடியுமா ? இவர் இஸ்லாமிய பட்டியலில் இடம் பெறமுடியுமா ?  தாடி,தலைப்பா இவைகள்  இன்று இருக்கிற சீக்கியர்கள்,சிங்,இவர்கள்.அனைவரும் தாடி ,தலைப்பா அணிந்து இருப்பார்கள் . இவர்கள்  இஸ்லாமிய பட்டியலில் இடம் பெறமுடியுமா ?  சட்டம்,மற்றும் வைத்தியத்தின் அரிச்சுவடியே தெரியாத ஒருவன் அது சம்மந்த பட்ட ஆடைகளை அணிந்து கொண்டு நான் ஒரு வக்கீல்என்று,டாக்டர் என்று சொன்னால்  நாம் ஏற்றுக் கொள்வோமா ?  அதுபோலதான் இஸ்லாமியர்களின் ஆடை,உணவு முறை,தோற்றம், இவைகளை வைத்து மட்டும் ஒருவன் முழுமையான முஸ்லீம்மாக முடியாது.

டை அடிக்களாமா ..?

Image
முடிக்கு கறுப்பு சாயம் பூசுதல் ஹறாம்! 01. ஹளரத்அபூபக்கர் சித்தீக் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் தந்தை குஹாபா றழியல்லாஹு அன்ஹு அவர்களின் தாடி முடி பூரணமாக வெண்மையாக இருந்ததை கண்ணுற்ற காத்தமுன் நபியவர்கள் ஏதாதொன்றினால் நிறமாற்றம் செய்யுங்கள். கறுப்பு நிறத்தை தவிர்த்துக் கொள்ளுங்கள் என்று கூறுங்கள். அறிவிப்பவர் : ஹளரத் ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரழியல்லாஹு அன்ஹுமா) நூல் : அஹ்மத் - முஸ்லிம், நஸாஈ, இப்னுமாஜா 02.  நரை முடியின் நிறத்தை மாற்றுங்கள். கறுப்பு நிறத்தின் பக்கம் நெருங்காதீர்கள். அறிவிப்பவர் : ஹளரத் அகஸ் ரழியல்லாஹு அன்ஹு நூல் : முஸ்னத் அஹ்மத் 03.  கடைசி காலத்தில் சில மனிதர்கள் புறாவின் இறக்கையைப் போல் கருஞ்சாயம் பூசுவார்கள்.     இவர்கள் சொர்க்கத்தின் வாடையை நுகரமாட்டார்கள். அறிவிப்பவர் : ஹளரத் அப்துல்லாஹ் இப்னு, அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா நூல் : அஹ்மத், அபூதாவூத், நஸாஈ, இப்னு ஹிப்பான், ஹாகிம் காட்டுப் புறாக்களின் வால்பகுதி கருமையாக இருக்கும். அதனால், தாடிக்கு புறாவின் வாலை ஒப்புவமை கூறினார்கள். நபிகள் கோமான் ஸல்லல்லாஹு அலைஹி...

شَعْبَان المبارك

Image
فضل شَعْبَان المبارك قال الشيخ الصفوري رضي الله عنه في كتاب نزهة المجالس: عن النبي : { من صلى أول ليلة من شعبان اثنتي عشرة ركعة يقرأ في الركعة الأولى فاتحة الكتاب مرة وقل هو الله أحد خمس مرات أعطاه الله تعالى ثواب اثني عشر ألف شهيد وكتب له ثواب اثنتي عشرة سنة وخرج من ذنوبه كيوم ولدته أمه ولا يكتب عليه خطيئة إلى ثمانين يوما }[ذكره النسفي]. ورأيت، في كتاب البركة عن النبي : { من صام أول خميس من شعبان وآخر خميس منه كان حقا على الله أن يدخله الجنة } وآخر خميس: محمول على من له عادة. وقالت عائشة :" كان أحب الشهور إلى النبي  شعبان ". وقال : { شعبان جُنة من النار فمن أراد أن يلقاني فليصمه ولو ثلاثة أيام }، قال بعض العلماء:" الجُنة بضم الجيم هي ما يجنك أي يسترك ويقيك مما تخاف. وعن النبي : { شعبان شهري ورمضان شهر أمتي، شعبان هو المكفر ورمضان هو المطهر }. وعن أسامة بن يزيد قال: قلت يا رسول الله! رأيتك تصوم من شعبان صوما لا تصومه في شهر من الشهور إلا في شهر رمضان؟! قال: { ذلك شهر يغفل عنه الناس بين رجب ورمضان وترفع فيه أعمال الناس فأحب أن يرفع عملي وأنا ...

பராஅத் இரவு என்றால் என்ன...?

Image
                       பரகத் நிறைந்த ..         ஷபான் மாதத்தின் சிறப்புகள் ...!!    بينَ رجبٍ ورمضانَ                                 ரஜப் மாதத்திற்கும், ரமழான்         மாதத்திற்கும் இடையிலுள்ள மாதமே  ...ஷபான் மாதமாகும் سأل أسامةُ بنُ زيد رضي الله عنهما الرسول قائلاً: (يا رسولَ اللَّهِ ! لم ارك تَصومُ شَهْرًا منَ الشُّهورِ ما تصومُ من شعبانَ ؟ ! قالَ : ذلِكَ شَهْرٌ يَغفُلُ النَّاسُ عنهُ بينَ رجبٍ ورمضانَ ، وَهوَ شَهْرٌ تُرفَعُ فيهِ الأعمالُ إلى ربِّ العالمينَ ، فأحبُّ أن يُرفَعَ عمَلي وأَنا صائمٌ) [صحيح النسائي      ஹளரத் உஸாமா ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள், “அல்லாஹ்வின் திருத்தூதரே! நீங்கள் ஷஃபான் மாதத்தில் நோன்பு நோற்பது போன்று வேறு எந்த மாதத்திலும் நான் காணவில்லையே! என்றேன்“. அதற்கு நபியவர்கள் பதில் கூறினார்கள். “இது ரஜபுக்கும், ர...

புத்தகம் வாசிக்கும் பழக்கம் இருப்பின் உங்களுக்காக..

Image
நண்பர்களே! யாரேனும் புத்தகம் வாசிக்கும் பழக்கம் இருப்பின் உங்கள் ஓய்வு நேரத்தில் அனுபவித்து கொள்ளுங்கள். வாழ்க்கை வரலாறுகள் தமிழ் PDF மின்நூல்கள்: கார்ல் மார்க்ஸ் https://t.co/BbQwjgJFcq சேகுவேரா https://t.co/JI9eSrEDUE தாமஸ் ஆல்வா எடிசன் https://t.co/a6InSC0Da1 ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் https://t.co/IWWUTSWna5 மேதகு வே.பிரபாகரன் https://t.co/Zg5mtFiFE8 மாவீரன் அலெக்சாண்டர் https://t.co/A2abcypbAv மருதநாயகம் https://t.co/gpeSWfN4R6 ராமானுஜம் https://t.co/HgR7VZeYGI சுனிதா வில்லியம்ஸ் https://t.co/jkSAD1kMEL ஹெலன் கெல்லர் https://t.co/Jjw8SYd5XH அறிஞர் அண்ணா https://t.co/hanYh3Y2cS திப்பு சுல்தான் https://t.co/hMPzLcS68j நெப்போலியன் https://t.co/2CeBxGohU3 கேனல் கடாபி https://t.co/W6aukGy6rs ஹிட்லர் https://t.co/qHpoaN6Z0A காமராசர் https://t.co/Y7A7LCmo1o பாரதியார் https://t.co/lVAC1Skenq பிடல் காஸ்ட்ரோ https://t.co/2fAuV7G33K பெரியார் https://t.co/q2VexzfDTP

இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல்

Image
      இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல்             ரஹ்மத்துல்லாஹி அலைஹி                   அவர்களின் வாழ்கை குறிப்பு .. பிறப்பு           - ஹிஜ்ரி 164இல் பகுதாதில் பிறந்தார்கள். இறப்பு           - ஹிஜ்ரி 241ஆம் வருடத்தில் பகுதாதிலேயே வபாத்தானார்கள் சேவை          - நான்கு பெரும் இமாம்களிலேயே மிகவும் வயதில் இளையவர். ஆனால் 78ஆம் வயதில் சத்திய இஸ்லாமிய கோட்பாட்டினை விட்டுக்கொடுக்க மறுத்து விட்டதால் அக்கால மன்னரால் கசையடி தண்டனை கொடுக்கப்பட்டு மரணமடைந்தார்கள். இவர்களும் குர்ஆன் ஹதீத் அடிப்படையில் சட்டங்களை எழுதி தந்தவர்கள்.

இமாம் - முஹம்மது ஷாஃபி

Image
இமாம்          - முஹம்மது ஷாஃபி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் வாழ்கை குறிப்பு  பிறப்பு           - ஹிஜ்ரி 150ஆம் வருடம் ஸிரியாவில் பைத்துல் முகத்தாஸுக்கும் பக்கத்திலுள்ள அஸ்கலானில் பிறந்தார்கள். இறப்பு           - 54 வருடங்கள் வாழ்ந்து ஹிஜ்ரி 204ஆம் வருடத்தில் எகிப்து நாட்டில் காலமானார்கள். சேவை          - இவர்களும் இமாம் அபூஹனிஃபா அவர்களைப்போல் குர்ஆன் ஹதீதுகளை ஆராய்ந்து தேறியபின் இஸ்லாமிய மார்க்க சட்டங்களை அன்றாட வாழ்விற்கு பயன்படும் விதத்தில் எழுதி தந்துள்ளார்கள்.

இமாம் மாலிக் ..

Image
   இமாம் மாலிக் ரஹ்மத்துல்லாஹி         அலைஹி அவர்களின் வாழ்கை                                 குறிப்பு.... பிறப்பு           - ஹிஜ்ரி 93இல் மதீனாவில் பிறந்து 86 வருடங்கள் வாழ்ந்தார்கள். இறப்பு           - ஹிஜ்ரி 176இல் மதீனாவிலேயே  வபாத்தானார்கள். சேவை          - இவர்கள் இமாம் அபூஹனீபாவை விட 13 வயது இளையவர்கள், அவர்களுடன் சமகாலத்தில் வாழ்ந்தவர்கள் இவர்களுடைய சேவை. அன்றாட தேவைக்கு ஏற்றபடி குர்ஆன், ஹதீதிலிருந்து  ஆதாரக் கருத்துக்களை எடுத்து சட்டங்களாக எழுதிக் கொடுத்துள்ளார்கள்...

இமாம் அபூ ஹனீஃபா

Image
                 இமாம் அபூ ஹனீஃபா          ( ரஹ்மத்துல்லாஹி அலைஹி)                     அவர்கள் வாழ்கை குறிப்பு : இயற்பெயர்      - நுஃமான் இப்னு தாபித். பிறப்பு           - ஹிஜ்ரி 80இல் கூஃபா நகரில் பிறந்தார்கள். இறப்பு           - ஹிஜ்ரி 150இல் பகுதாதில் காலமானார்கள். சேவை          - தமது 70 வருட ஜீவிய காலத்தில் குர்ஆன், ஹதீதுகளை கற்று ஆராய்ந்து அவற்றிலிருந்து அடிப்படை கருத்துக்களை எடுத்து தமது அன்றாட வாழ்வில் அனுசரித்து பயன்படுத்தும் விதத்தில் மார்க்க சம்பந்தமான பிக்ஹ் சட்டங்களை இயற்றினார்கள்...

வழிகேடர் பீ.ஜே. அவர்கள் நம்மை பார்த்து கேட்ட கேள்விகள்

Image
பித்அத்வாதிகளிடம் கேட்ட கேள்விகள்..? வழிகேடர்  பீ.ஜே. அவர்கள் நம்மை பார்த்து கேட்ட கேள்விகள் :- கூட்டு துஆ நல்லது என்று சொன்னால் மவ்லூது நல்லது என்று சொன்னால் இவ்வளவு நல்ல செயலை நபியவர்கள் எமக்கு சொல்லித் தராமல் போய்விட்டார்கள் என்று நபியையே குறை சொல்வதாக ஆகாதா...? மார்க்கத்தை அல்லாஹ் பூரணப்படுத்தி விட்டதாகச் சொல்கின்றான். மவ்லூது நல்ல செயல் என்று சொன்னால் மார்க்கத்தை அல்லாஹ் பூரணப்படுத்தவில்லை.  நாம்தான் கூட்டு துஆ, கத்தம், கந்தூரி என புதிது புதிதாக உருவாக்கி மார்க்கத்தைப் பூரணப்படுத்தி வருகின்றோம் என்று சொல்வதாகாதா..? கத்தம், கந்தூரி போன்ற நல்ல செயல்கள் அல்லாஹ்வுக்கும், ரஸுலுக்கும் தெரியாமல் போய்விட்டது என்று சொல்வதாகாதா? என்றெல்லாம் கேள்விக் கணைகளைத் தொடுத்து வந்தார்...!! இப்போது இதே கேள்விகள் அவர்கள் பக்கம் திரும்பியுள்ளது :- சூனியம் என்பது அன்றுதொட்டு இன்றுவரை இருந்து வருகின்றது. அல்லாஹ் நாடினால் சூனியத்தால் பாதிப்பு வரும் என்று நம்புவது ஷிர்க் என்றிருந்தால் அதை நபியவர்கள் அறிவித்திருக்க வேண்டும்.  அப்படி அவர்கள் அறிவிக்கவில்லையாம். நுணு...

சமீபத்தில அல்லாஹ்வுக்கும் உருவம் இருக்கின்றதா?

Image
இந்த ஹதீஸ்களையும் மறுக்கலாமா?       சமீபத்தில அல்லாஹ்வுக்கும் உருவம்                               இருக்கின்றதா? என்றொரு வாதம் நடந்தது. அந்த விவாதத்தில் மறுமையில் மக்கள் நரகத்தில் போடப்பட்ட பின்னர் நரகம் “இன்னும் இருக்கிறதா..? இன்னும் இருக்கிறதா..? என்று கேட்கும்.  அப்போது அல்லாஹ் தன் காலை நரகத்தில் வைத்து நரகத்தை நிரப்புவான் என்ற ஆதாரபூர்வமான ஹதீஸ் தௌஹீத் தரப்பால் முன்வைக்கப்பட்டது. இந்த ஹதீஸை வழிகேடர்கள் சிலர் குர்ஆனுக்கு முரண்படுவதாகக் கூறி ஏற்கனவே மறுத்துள்ளனர். قَالَ اخْرُجْ مِنْهَا مَذْءُوْمًا مَّدْحُوْرًا ‌ لَمَنْ تَبِعَكَ مِنْهُمْ لَاَمْلَــٴَــنَّ جَهَنَّمَ مِنْكُمْ اَجْمَعِيْنَ                    ‏  “இதிலிருந்து இழிவுபடுத்தப்பட்டவனாகவும் சபிக்கப்பட்டவனாகவும் நீ வெளியேறி விடு!   அவர்களில் எவரேனும் உன்னைப் பின்பற்றினால் உங்கள் அனைவராலும் நிச்சயமாக நான்   நரகத்தை நிரப்புவேன்.” (7:18) ஷைத்தா...

மீன் சாப்பிடலாமா..??

Image
குர்ஆனுக்கு முரண்படுவதாகக் கூறி ஆதாராபூர்வமான ஹதீஸ்களை நிராகரிக்கும் ஆபத்தான நிலை...!                               பகுதி - 4                    மீன் சாப்பிடலாமா..? இறந்தவைகள் உங்களுக்கு தடுக்கப்பட்டுள்ளது என குர்ஆன் கூறுகின்றது.    اِنَّمَا حَرَّمَ عَلَيْکُمُ الْمَيْتَةَ وَالدَّمَ وَلَحْمَ الْخِنْزِيْرِ وَمَآ اُهِلَّ بِهٖ لِغَيْرِ   اللّٰهِ‌ فَمَنِ اضْطُرَّ غَيْرَ بَاغٍ وَّلَا عَادٍ فَلَاۤ اِثْمَ عَلَيْهِ‌ اِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ‏                       (2:173) “தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் மாமிசம், அல்லாஹ் அல்லாதோருக்காக   அறுக்கப்பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்குத் தடுத்துள்ளான்.. .. .. .. .”   (பார்க்க: 5:3, 16:115) மீன் போன்ற நீர் வாழ் உயிரினங்கள் இறந்த பின்னரும் அவற்றை நாம் சாப்பிடுகின்றோம். நேரடியாகப் பார்த்தால் அது இந்த...

தவறான பாலியல் உறவு:

Image
                                பகுதி -3 அல் குர்ஆனுக்கு முரண்படுவதாகக் கூறி ஆதாராபூர்வமான ஹதீஸ்களை நிராகரிக்கும் ஆபத்தான போக்கு தமிழ் வட்டத்தில் அதிகரித்து வருகின்றது. ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படாது!      தவறான பாலியல் உறவு:              نِسَآؤُكُمْ حَرْثٌ لَّـكُمْ فَاْتُوْا حَرْثَكُمْ اَنّٰى شِئْتُمْ‌  “உங்கள் மனைவியர் உங்கள் விளை நிலங்களாவர். உங்கள் விளை நிலங்களுக்கு நீங்கள் விரும்பிய விதத்தில் செல்லுங்கள்.” (2:223) மனைவியர் விளை நிலம் என்றும், நீங்கள் விரும்பிய விதத்தில் அவர்களிடம் செல்லுங்கள் என்றும் இந்த வசனம் கூறுகின்றது. எப்படி வேண்டுமானாலும் மனைவியுடன் இன்பம் அனுபவிக்கலாம் என இந்த வசனம் கூறுகின்றது. எனினும் மனைவியின் மலப்பாதையில் உறவு கொள்வது ஹதீஸ்களில் தடுக்கப்பட்டுள்ளது. எப்படி வேண்டுமானாலும் செல்லுங்கள் எனக் குர்ஆன் கூறுவதற்கு இது முரண்படுவதாகக் கூறி இந்த ஹதீஸை மறுப்பதா அல்லது எப்படி வேண்டுமானாலும் செல்லுங்...

ஒரு பெண்ணையும் அவள் சாச்சியையும் ஒரே நேரத்தில் முடிக்கலாமா?

Image
அல் குர்ஆனுக்கு முரண்படுவதாகக் கூறி ஆதாராபூர்வமான ஹதீஸ்களை நிராகரிக்கும் ஆபத்தான போக்கு தமிழ் வட்டத்தில் அதிகரித்து வருகின்றது. ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படாது...!!                                 பகுதி : - 2 ஒரு பெண்ணையும் அவள் சாச்சியையும் ஒரே நேரத்தில் முடிக்கலாமா...? ஒரு பெண்ணையும், அவளது தாயின் சகோதரிகளையும் (சாச்சி, பெரியம்மா) தந்தையின் சகோதரி (மாமி)யையும் ஒரே நேரத்தில் ஒருவர் மணமுடிப்பது இஸ்லாத்தில தடைசெய்யப்பட்டதாகும். எனினும் அல் குர்ஆன் திருமணம் முடிக்கத் தடை செய்யப்பட்டவர்கள் பற்றி குறிப்பிடுகின்றது. அதில் இந்தத் தரப்பினர் இடம்பெறவில்லை. அந்த வசனத்தை அல்லாஹ் முடிக்கும் போது. “…. இவர்களைத் தவிர ஏனையோரை நீங்கள் விபச்சாரத்தில் ஈடுபடாதவர்களாகவும்,   கற்பொழுக்கம் உடையவர்களாகவும், உங்கள் செல்வங்களை (மஹராக)க் கொடுத்து அடைந்து   கொள்வது உங்களுக்கு ஆகுமாக்கப்பட்டுள்ளது…..” (4:24) என்று முடிக்கின்றான். இதற்குப் பின்னால் உள்ள உறவினர்கள் அனைவரும் உங்களுக்கு ...

குர்ஆனுக்கு முரண்படுவதாகக் கூறி ஆதாராபூர்வமான ஹதீஸ்களை நிராகரிக்கும் ஆபத்தான நிலை...!!!

Image
ஹதீஸ்களை நிராகரிக்கும் ஆபத்தான போக்கு...!!! அல் குர்ஆனுக்கு முரண்படுவதாகக் கூறி ஆதாராபூர்வமான ஹதீஸ்களை நிராகரிக்கும் ஆபத்தான போக்கு தமிழ் வட்டத்தில் அதிகரித்து வருகின்றது. ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படாது! அவை முரண்படுவது போல் தோன்றினாலும் அவதானமாக நோக்கினால் முரண்பாடு இருக்காது. இத்தகைய ஹதீஸ்களைக் கண்டால் ஹதீஸின் வெளிப்படையான கருத்தைக் கவனத்திற் கொண்டு குர்ஆனின் கருத்தை மறுத்து விடவும் கூடாது. குர்ஆனை ஏற்பதாகக் கூறி ஹதீஸ்களை மறுத்துவிடவும் கூடாது. இரண்டையும் இணைத்து பொருள் கொண்டு இரண்டையுமே அங்கீகரிக்க வேண்டும் இருப்பினும் இந்த சரியான கருத்திலிருந்து சிலர் தடம் புரண்டதால் ஹதீஸ்களை அவரவர் தமது விருப்பு, வெறுப்புகளுக்கு ஏற்ப மறுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மக்களை எந்த மனநிலைக்கு இந்த கொள்கை கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது என்பதற்கு இது நிதர்சனமான சான்றாகும்.                            هل النساء أكثر أهل النار என்ற பெயரில் ஒருவர் ஒரு நூலை எழுதுகின்றார்....!!! பெண்கள் அதிகமாக...

சூரத்துல் பாத்திஹாவின் படி நாம் யாரிடம் உதவி கேட்கலாம்..

Image
             சில ஹதீதுகள் இப்படியும்                                       வருகின்றன.!             إذا سألت فاسأل الله واذا استعنت فاستعن بالله  நீ எதையாவது கேட்டால் அல்லாஹ்விடத்திலேயே கேட்டுக்கொள். நீ உதவி தேடினால் அல்லாஹ்வைக் கொண்டே உதவிதேடு. இந்த ஹதீதை வழிகெட்டவர்கள் புரியாமல் அல்லாஹ் அல்லாதவரிடம் உதவி கேட்கக் கூடாது என்பதற்கு ஆதாரமாக எடுத்துப் பேசுகிறார்கள். இது ரசூலுல்லாஹி (ஸல்) அவர்கள் தன்னிடம் கேள்வி கேட்டு வருபவர்களின் ஆன்மீக நிலையைப் பொறுத்து சொல்லும் பதில்கள். உங்களுக்குத் தெரிந்திருக்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து                         اي العمل افضل  "அமல்களில் சிறந்தது எது" என்று கேட்கிறார். அதற்கு நாயகம் (ஸல்) அவர்கள்.. الصلاة اول وقتها "தொழுகையை அதன் ஆரம்ப நேரத்தில் தொழுவது" என்று பதிலளித்தார்கள். இன...

உன்னையே வணங்குகிறோம் உன்னிடமே உதவி தேடுகிறோம்.

Image
நாம் அனைவரும் சூரத்துல் பாதிஹா ஓதுகிறோம் அது தொடர்பாக சில விளக்கங்களை சொல்லல்லாமே ...! اياك نعبد واياك  نستعين உன்னையே வணங்குகிறோம் உன்னிடமே உதவி தேடுகிறோம்.  இந்த வசனம் نعبدك ونستعينك இவ்வாறு வந்திருக்கலாம். ஆனால் இந்த வசனமோ அல்குர்ஆனிலே சுத்தி வளைத்து மூக்கைத்தொடும் கதைபோல வந்திருக்கிறது. அல்லாஹ் வீணாக எதையும் செய்யமாட்டன் சொல்லமாட்டன். அவ்வாறு சொல்லிருக்கிறான் என்றால் அதிலே ஒரு விடயம்; விளக்கம் இருக்கிறது அதைப் புரியவேண்டும். இதிலே உள்ள இந்த  ك என்ற ஒரு எழுத்து இருக்கிறது அந்த எழுத்தை முன்னாள் கொண்டு வருவதாக இருந்தால் அதை மட்டும் கொண்டுவர முடியாது. மாறாக ايّاك என்று ايّا உடன் சேர்த்தே சொல்ல வேண்டும் என்பது அரபு இலக்கணச் சட்டமாகும். அல்லாஹ் இந்த வசனத்தை, விடயத்தை உறுதிப்படுத்துவதற்காகவே இவ்வாறு சொன்னான். இதிலுள்ள பிரயோசனம் என்னவென்றால். نعبدك என்று  சொன்னால் "உன்னை   வணங்குகிறோம்' என்று வரும்.  ஆனால் اياك نعبد  என்றால் உன்னையே வணங்குகிறோம் என்று வரும். முதலாவது சொன்ன வசனப்படி உன்னை வணங்குகிறோம் என்று சொன்னால்; உன்...

நான்கு காரியங்களை இருப்பதாக வாதித்தால் அவர் பொய்யராவார்.

Image
இமாம் கஸ்ஸாலி ரஹ்மத்துல்லாஹி அலைஹி இஹ்யாஉலூ முத்தீனில் கூறுகின்றார்கள்... எவர் ஒருவர் நான்கு காரியங்கள் இல்லாமல், நான்கு காரியங்களை இருப்பதாக வாதித்தால் அவர் பொய்யராவார். 01. நன்மையான காரியங்களை செய்யாமல் சொர்க்கத்தை நேசிப்பது. 02. ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை நேசிப்பதாக வாதிக்கின்றார்கள். ஆனால், உலமாக்கள், ஸாலிஹீன்களை நட்புக் கொள்வதில்லை. 03. நரகத்தை அஞ்சுவதாக வாதிக்கின்றார், ஆனால் பாவம் புரிவதிலிருந்து விலகியிருப்பதில்லை. 04. ஒருவர் அல்லாஹ்வை நேசிப்பதாக வாதிக்கின்றார். ஆனால், கஷ்டங்களை முறையிடுகின்றார்.

வஸீலா...நல்லடியார்களின் வழிமுறையா ..?

Image
 வஸீலா தேடுவது நபிமார்கள், வலிமார்கள் மற்றும் நல்லடியார்களின் வழிமுறையா ..? ரஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வசல்லமவர்களை ஸியாரத் செய்வது பற்றிய விஷயத்தில் நான்கு மத்ஹபுகளின் இமாம்களும் இவ்வாறு ஒத்த கருத்துள்ளவர்களாக கூறியுள்ளார்கள். ‘புனித ரௌலாவை தரிசிப்பவன் சங்கையான அன்னாரின் புனித ரௌலாவை முன்னோக்கி தனது பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டும். தனது தேவைகள் நிறைவேற வேண்டும் என்று மனதில் நாடி பெருமானார் ஸல்லல்லாஹு  வஸீலாவாக்கி அல்லாஹுத்தஆலாவிடம் பிரார்த்திக்க வேண்டும். இவ்வாறு பிரார்த்திப்பது சந்தேகமில்லாமல் (ஷரீஅத்தில்) சுன்னத்தான காரியமாகும். ஆதாரம்: ங{ன்யத்துத் தாலிபீன் பாகம் - 1, பக்கம் - 90 முஹ்யத்தின் இமாம் நவவி றஹ்மத்துல்லாஹி அலைஹி கூறுகின்றார்கள். றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹிவசல்லமவர்களின் புனித ரௌலாவைத் தரிசிப்பவர் (கிப்லாவுக்கு பின்காட்டி) நபியவர்களின் திருமுகத்தை நோக்கி நின்று அன்னாரை வஸீலாவாக்கி அல்லாஹ்விடம் பிரார்த்திக்க வேண்டும். தனது பிரார்த்தனையில் அன்னாரின் ஷபாஅத்தையும் தேடுவான். ஆதாரம்: ஷரஹுல் முஹத்தப், பாகம் 2, பக். 224 இதே கருத்தை ஷா பிஈ ம...

வஸீலா தேடுதல் ...!!!

Image
                வஸீலாத் தேடுவதற்கு                              திருக்குர்ஆனிலும், திரு நபி                        மொழியிலும் உண்டு...!!! பனூ இஸ்ரவேலர்களில் ஒரு நல்ல மனிதர் வஸீலாத் தேடிய விபரம் ஸஹீஹ் முஸ்லிமில் பதியப்பட்டுள்ளது. இவர் இவ்வாறு பிரார்த்தித்தார்.'யா அல்லாஹ்! சூனியக்காரர்களின்  செயலை விட துறவியின் செயல் உனக்கு விருப்பமாயின், (மக்கள் செல்வதற்கு சூனியக்காரர்களால் தடை ஏற்படுத்தியிருக்கும்) மாட்டைக் கொண்று மக்களுக்கு வழி விடுவாயாக! என்று கூறி கல்லை எடுத்து அம்மிருகத்தை நோக்கி எறிந்தார். அம்மிருகம் உடன் கொல்லப்பட்டது. மக்கள் நிம்மதியாகச் சென்றனர்'     ஆதாரம் - ஸஹீஹ் முஸ்லிம் பக்கம் 04 - 05 ஹஸறத் ஜாபிர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் அதான் - பாங்கைச் செவியேற்கும் ஒருவர் அல்லாஹும்ம றப்பஹாதிஹித் தஃவதித் தாம்மா..... என்ற துஆவை ஓதுவாராயின், அவருக்கு மறுமையில் எனது ஷபாஅத் கடமையா...