ஹுஜ்ஜத்துல் இஸ்லாம்..!!!
இறை உண்மை...!!!
سَنُرِيْهِمْ اٰيٰتِنَا فِى الْاٰفَاقِ وَفِىْۤ اَنْفُسِهِمْ حَتّٰى يَتَبَيَّنَ لَهُمْ اَنَّهُ الْحَـقُّ اَوَلَمْ يَكْفِ بِرَبِّكَ اَنَّهٗ عَلٰى كُلِّ شَىْءٍ شَهِيْدٌ
" நிச்சயமாக இதுதான்
உண்மையானது என்று அவர்களுக்கு தெளிவாகும் பொருட்டு நம்முடைய அத்தாட்சிகளை விளங்குவதற்காக இம்மண்ணுலகிலும், அவர்களுக்கு உள்ளேயும் நாம் நமது அடையாளங்களை காட்டுகிறோம் "
( அத்: 41 : ஆ : 53 )
தன்னை அறிந்தவன் தன் இறைவனை அறிந்தவனாவான்
(ஹதீஸ்)
நீ யார்?
நீ எங்கிருந்து வந்தாய்?
இங்கே சிலகாலம் நீ தங்கியிருப்பதன் நோக்கம் யாது?
உன் உண்மையான மகிழ்வும்,துயரமும் எதில் அடங்கியுள்ளன?
உன் பண்புகளில் சில மிருகங்களிடம் உள்ளவை.
மற்றும் சில மலக்குகளிடம் உள்ளவை...!!
பண்புகளில் எவை தற்செயலானவை,
எவை இன்றியமையாதவை என்பதை நீ தெரிந்துகொள்ள வேண்டும்....!
இவற்றை நீ அறிந்துகொள்ளாதவரை,
உன் உண்மையான இன்பம் எங்குள்ளது என்பதை நீ கண்டுகொள்ள மாட்டாய்....!!
உண்பதும்,தூங்குவதும்,
கலவி புரிவதும்,
சண்டையிடுவதும் மிருகங்களின் தொழில்கள்...!!
நீயும் ஒரு மிருகமாயின்,இவ்விஷயங்களிலேயே ஈடுபட்டுக்கொண்டிரு...!!
விஷமம் செய்வதும்,
ஏமாற்றுவதும்,
பித்தலாட்டம் செய்வதும் ஷைத்தான்களின் வேலை....!!
நீயும் அவர்களை சார்ந்தவனாயின்,
இக்காாியங்களில் உன்னை மூழ்கடித்துக்கொள்....!!
இறைவனின் சாத்மீக சௌந்தரியத்தை தீர்மானிப்பதும்,
மிருக இயல்புகளே இல்லாதிருப்பதும்,
மலக்குகளின் இயல்பாகும்....!!
நீயும் இத்தகைய மலக்குமார்களின்,
இயல்பை உடையவனாயின்,
உன் மூலஸ்தானம் பற்றி அறியும் முயற்சியில் ஈடுபடு....!!
இறைவனை அறிந்து தியானிக்கவும்,
ஆசை,விருப்பம்,கோபம்
ஆகியவற்றின் பிடியிலிருந்து விடுபடவும்,அதுவே இந்த வழியாகும்....!!
இச்சை,கோபமாகிய இரண்டு வகை மிருக இயல்போடு நீ படைக்கப்பட்ட நோக்கம் யாது?
அவை உன்னை வெற்றிகொண்டு,
அவை உன்னை கைதியாக நடத்தவா,,,
அல்லது,,,
நீ அவற்றை ஒடுக்கி,
உன் முன்னேற்ற பாதையில் செல்வதற்கு அவற்றுள் ஒன்றை,
உன் வாகனமாகவும்,,,
மற்றதை உன் ஆயுதமாகவும் ஆக்கிக்கொள்வதற்காகவா என்பதையும் நீ தேர்ந்தெடுக்க வேண்டும்....!!
ஹுஜ்ஜத்துல் இஸ்லாம்
இமாம் கஸ்ஸாலி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள்.
Comments
Post a Comment