அருமையான பதில்களும் ...!!
அற்புதமான கேள்விகளும் ... ?? அருமையான பதில்களும் ...!!
ரோமாபுரியின் சக்கரவர்த்தி கைஸர், அமீர் முஆவியா [ரலியல்லாஹூ அன்ஹூ ] அவர்களுக்கு ஒரு கடிதம் அனுப்பி, அதில் கீழ்காணும் கேள்விகளுக்கு பதில் வேண்டியிருந்தார்.....!!!
1, கிப்லா இல்லாத பகுதி எது ?
2, தந்தை இல்லாதவர் யார் ?
3, குடும்ப பாரம்பரியமில்லாதவர் யார் ?
4, ஒருவரை அவருடைய கப்று கொண்டு நடந்தது அவர் யார் ?
5, கருவறையில் படைக்கப்படாத மூன்று வஸ்துக்கள் எவை ?
6, மூன்று பொருள் :- ஒன்று முழுமையானது. இன்னொன்று அரைகுறையானது. மற்றொன்று ஒன்றுமே இல்லாத வஸ்து. இவை யாவை ?
7, உலகிலுள்ள எல்லாப் பொருளின் வித்தையும் ஒரு பாட்டிலில் போட்டு எனக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
இவ்வாறு கேள்விகள் அடங்கிய இக்கடிதத்தை அமீர் முஆவியா [ ரலியல்லாஹூ அன்ஹூ ] அவர்கள், அப்துல்லாஹ் பின் அப்பாஸ் [ரலியல்லாஹூ அன்ஹூ ] அவர்களுக்கு அனுப்பினார்கள்...
அருமை நாயகம் [ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் ] அவர்களால் “திருக்குர்ஆனின் விஷய ஞானத்தையும் மார்க்கத்தின் சட்ட ஞானத்தையும் யா அல்லாஹ்! இவருக்கு கற்றுக்கொடு” [புகாரி : 75,143]
என விஷேசமாக துஆ செய்யப்பட்டவரும் திருக்குர்ஆன் விரிவுரையாளர்களின் தலைவர் என பிரபலமாக அறியப்பட்டவருமான பேரறிஞர் இப்னு அப்பாஸ் [ரலியல்லாஹூ அன்ஹூ ] அவர்கள் மேற்படி கடிதத்திற்கு அளித்த பதில்கள் வருமாறு :-
1, கிப்லா இல்லாத பகுதி கண்ணியம் வாய்ந்த கஃபாவின் உள்பாகமாகும்.
2,தந்தை இல்லாதவர்,ரூஹுல்லாஹ் ஈஸா நபி [அலை] அவர்களாகும்.
3, குடும்ப பாரம்பரியமில்லாதவர், பாவா ஆதம் [அலை] அவர்களாகும்.
4, கப்று கொண்டு நடந்தது, ஹள்ரத் யூனுஸ் [அலை] அவர்களாகும்.
5, கருவரையில் வைத்து படைக்கப்படாத மூன்று வஸ்துக்களாவன ;
[1] நபி இஸ்மாயீல் [அலைஹி வஸல்லம் ] அவர்களுக்குப் பகரமாக குர்பானி கொடுப்பதற்காக நபி இப்ராஹீம் [அலைஹி வஸல்லம் ] அவர்களுக்கு வழங்கப்பட்ட ஆடு.
[2] கற்பாறையிலிருந்து வெளிவந்த சாலிஹ் நபி [அலைஹி வஸல்லம் ] அவர்களின் அதி அற்புத ஒட்டகம்.
[3] மூஸா [அலைஹி வஸல்லம்] அவர்களின் பாம்பு.
6, சுய புத்தி உள்ளவர் முழுமையானவர். சொல் புத்தி மட்டும் உடையவர் அரைகுறையானவர்.சொல் புத்தியும் இல்லை. சுய புத்தியும் இல்லை. இவர் தான் ஒன்றுமே இல்லாத வஸ்து.
பின்னர்,
ஹள்ரத் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் [ரலியல்லாஹூ அன்ஹூ ] அவர்கள் ஒரு பாட்டிலில் நீரை நிரப்பி “இது தான் எல்லா பொருளின் மூல வித்து” என பதிலளித்தார்கள்.
ஏனெனில் அல்லாஹ் தன் மறையில் وَجَعَلْنَا مِنَ الْمَاءِ كُلَّ شَيْءٍ حَيٍّ
"நீரிலிருந்து தான் உயிருள்ள ஒவ்வொரு வஸ்துவையும் நாம் ஆக்கினோம்". [அல்குர்ஆன் :21 ;30] எனக் கூறுகிறான்...
ஸூபுஹானல்லாஹ் ....அற்புதமான பதில்கள் ....
இப்னு அப்பாஸ் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்களின் சிறப்புக்கு ஒரு எடுத்துக்காட்டு....!!!!
Comments
Post a Comment