நோன்பாளியின் துஆ நிராகரிக்கப்படாது
நாமும் ...!!
நோம்பு திறக்கும் நேரமும் .....!!!
இஃப்தார் நேரத்தில் நோன்பாளியின் துஆ நிராகரிக்கப்படாது .அதற்கான பொருப்பை நானே ஏற்கிறேன்..என்று
அல்லாஹூ தாலா சொல்கிறான் ..
இஃப்தார் நேரம் ....நம்முடைய நிலை ..?
وقال سيدنا موسى عليه السلام يا ربِّ أكرمتني بالتكليم فهل أعطيت أحَدًا مثل ذلك فأوحى الله تعالى إليه يا موسى إنَّ لي عبادًا أخرجهم في آخر الزمان وأكرمهم بشهر رمضان فأكون أقرب إلى أحدهم منك لأنك كلمتني وبيني وبينك سبعون ألف حجاب فإذا صامت أمة محمد صلى الله عليه وسلم حتى ابيضّت شفاههم واصفرت ألوانهم أرفع الحجب بيني وبينهم وقت إفطارهم يا موسى طُوبى لمن عطش كبده وأجاع بطنه في رمضان.
ஒரு தடவை மூஸா ( அலைஹி வஸல்லம் ) அவர்கள் அல்லாஹ்விடம் கேட்டார் .
யா அல்லாஹ்!
நீ என்னை உன்னுடன் நேரடியாக பேசவைப்பதன் மூலம் கெளரவப்படுத்தினாய்..
இது போன்ற பாக்கியத்தை வேறு எவருக்கேனும் கொடுத்ததுண்டா ? என கேட்டார்.
அதற்கு அல்லாஹு தஆலா ; மூஸாவே!
இறுதி காலப்பகுதியில் நான் முஹம்மத் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் ) அவர்களின் கூட்டத்தினரை அனுப்புவேன்.
அவர்கள் காய்ந்த உதடுகளுடனும்; வரண்ட நாவுடனும், மெலிந்து கண்கள் குழிவிழுந்த தோற்றத்துடனும் இருப்பதோடு;
வயிற்றில் பசியுடன் -என்னை அழைப்பர்(துஆ மூலம்).அவர்கள் தான் அதிகம் அதிகம் எனக்கு நெருக்கமானவர்கள்.
மூஸாவே! உங்களுக்கும் எனக்கும் மத்தியில் 70000 தடுப்புக்கள் இருந்தன.
ஆயினும் இஃப்தார் நேரத்தில் எந்த ஒரு தடுப்பும் எனக்கும் நபி முஹம்மதின் உம்மத்திற்கும் இருக்காது.
மூஸாவே! இஃப்தார் நேரத்தில் நோன்பாளியின் துஆ நிராகரிக்கப்படாது .அதற்கான பொருப்பை நானே ஏற்கிறேன்.என்றான்..
ஸூப்ஹானல்லாஹ...!!!
மகத்துவம் மிக்க அந்த நோம்புடைய மாதத்தை அடைந்து இருக்கிறோம் ...
துஆ ஏற்றுக்கொள்ளப்படும் அந்த நேரம் ...
நம்முடைய நிலை ...!!!
நம்முடைய நிலை ...!!!
நாம் துஆ கேட்கிறோமா என்றால் .!!
இல்லை.
அந்த நேரத்தில் தான் கஞ்சி கொட்ராவையும் ...வடையையும் ...
தேடும் நேரமாக வைத்துள்ளோம்...
என்று சொன்னாலும் பொருந்தும்..
நாம் இது வரை அப்படிதான் இஃப்தார் நேரத்தை கழித்து இருக்கிறோம்..
இனியாவதும் ...நோம்பு திறக்கும் அந்த நேரத்தை
வீணாக கழிக்காமல் இறைவனிடம் அருளை பெற்றிட முயற்சி செய்வோமாக...
இறைவனின் பொறுத்ததை பெறுவோமாக ...
இந்த மாதம் நமக்கு கிடைத்தது மிக பெரிய ஆபஃர்....
இது குர்ஆன் அல்லது ஹதீஸில் எங்கு உள்ளது? தயவுசெய்து தெரியபடுத்துங்கள்?
ReplyDelete