நேர்ச்சை செய்வது கூடும்
நேர்ச்சை செய்வது கூடும் :-
ஆதாரப் பூர்வமான ஹதீஸ் வெளிச்சத்தில் :
ஒருமுறை நம் உயிரினும் மேலான கண்மணி நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களின் திருச்சமூகத்திற்கு வருகைதந்த ஒரு ஸஹாபி பெண்மணி அருமை நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களிடம், தனக்கு ஒரு ஹாஜத்து இருந்ததாகவும் அது நிறைவேறிவிட்டால் எம்பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களின் திருச்சமூகத்திற்கு வந்து ஈருல ரட்சகர் முஹம்மது ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களின் முன்னிலையில் தப் அடித்து மதகு (மௌலீது, பெருமானார் புகழ்) பாடுவதாக முராது (நேர்ச்சை) செய்துள்ளதாகவும் தற்போது ஹாஜத்து நிறைவேறிவிட்டதாகவும் தனது முராதை (நேர்ச்சையை) நிறைவேற்ற அனுமதி வேண்டுவதாகம் தெரிவித்தார். இதனை கேட்ட நமது ஆருயிர் ரட்சகர் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்அவர்கள் எந்தவித மறுப்பும் தடையும் சொல்லாமல் அந்த ஸஹாபி பெண்மணிக்கு அவருடைய முராதை (நேர்ச்சையை) பரிபூரணமாக நிறைவேற்றிக் கொள்ள அனுமதி அளித்தார்கள்.
ஆதாரம் :மிஷ்காத்.
ஷரகு நூல் :மிர்காத்
ஆதாரப்பூர்வமான இந்த ஹதீஸ் வெளிச்சத்தில் நாம் அறிந்துகொள்ள வேண்டியது நபிமார்கள், அவுலியாக்கள், வலிமார்கள்,மீது நேர்ச்சை செய்வதும், பெருமானார் முஹம்மது முஸ்தபா ரஸூல் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் மீது புகழ்மாலை பாடுவதும், அதற்காக தப் அடிப்பதும் கூடும் என்பது தெள்ளத்தெளிவாக விளங்குகிறது
Comments
Post a Comment