தீன் என்னும் கட்டிடத்திற்கு நான்கு ..!!
தீன் என்னும் கட்டிடத்திற்கு நான்கு தூண்கள் :-
முதலாவது தூண் :-
ஈமான் ( நம்பிக்கை )
இரண்டாவது தூண் :-
இஸ்லாம் ( வழிபாடு )
மூன்றாவது தூண் :-
தவ்ஹீத் ( ஏகத்துவம் )
நான்காவது தூண் :-
மரிஃபா ( அல்லாஹ்வை அறிதல் )
இந்த நான்கில் ஏதேனும் ஒன்று மாறும் பட்டாலும் தீன் ( மார்கம் ) மாறிவிடும் .
முதல் தூண் ஈமான் :-
ஈமான் என்பது
1 - இதயத்தினால் உறுதிக் கொள்ள வேண்டும் .
2 - நாவினால் கூற வேண்டும் .
3 - உறுப்புகளினால் அமல் செய்ய வேண்டும் .
ஈமானின் வேராகிறது :-
அல்லாஹ்வை அறிவதும் , அவனை உண்மை கொள்வதும்,
நம்பிகை கொள்ள வேண்டியவற்றை நம்பிக்கை கொள்வதாகும் . இவற்றை விட்டால் காபிராகி விடுவான் .
شعب الايمان .
ஈமானுக்கு பல கிளைகள் உண்டு
அவற்றில் சிலதை விட்டால் காஃபிராக மாட்டான். ஆனால் பெரும் பாவியாவான் அதற்கு உதாரணம் :- ஐந்து நேரத் தொழுகைகள் போல் ,அதன் ஷர்துகளைப் போல்,
சிலதை விட்டால் பாவியாகமாட்டான் ,எனினும் சிறப்பை விட்டவனாவான் :- சுன்னத் தொழுகையை போல்.
Comments
Post a Comment