Posts

Showing posts from May, 2018

வசந்த வரலாற்றில் ஒருநாள் !

Image
அரேபியாவின் இஸ்லாமிய வசந்த வரலாற்றில் ஒருநாள் ! அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தாயிப் போர் முடிந்து திரும்பி வந்து கொண்டிருந்தார்கள். கூடவே அலீ ( ரலி ) அவர்களும் அண்ணலோடு அணிவகுத்து வந்து கொண்டிருந்தார்கள். அன்புக்குரிய மருமகனும் கண்மணி மகள் பாத்திமாவின் அருமைக் கணவருமான அலீ ( ரலி ) அவர்களை தனியே அழைத்துச் சென்ற பெருமானார் ஆன்மீக ரகசியங்கள் பலவற்றை அலீ அவர்களுக்கு எடுத்துச் சொன்னார்கள். அதைக் கண்ட உமர் ( ரலி ) அவர்கள் ... " யா ரசூலல்லாஹ் ! தாங்கள் அலீ ( ரலி ) அவர்களுக்கு மட்டும் ரகசியமாக ஏதாவது  போதிக்கிறீர்களா ?" என்று கேட்டார்கள். " நான் ஒன்றும் போதிக்கவில்லை.  அல்லாஹ்தான் போதித்தான்  " என்று பதிலுரைத்தார்கள் நபிகள் ( ஸல் ) அவர்கள். அதாவது .... நானாக எதுவும் சொல்லவில்லை. அல்லாஹ்வின் நாட்டம் அலீ அவர்களுக்கு சில ஆன்மீக ரகசியங்களை சொல்ல வேண்டுமேன்பது. அவன் நாட்டப்படியே அது நிகழ்ந்தது என்பது அதன் விளக்கம். இப்படி அண்ணலாரிடமிருந்து ஆன்மீக ரகசியங்களை எல்லோரும் பெற்று விடவில்லை. அல்லாஹ் நாடியவர்களுக்கு மட்டுமே அது கிடைத்தது. அ...

முஹம்மது நபி இஸ்லாமியர்களுக்கு மட்டுமில்லை...!!!

Image
முஹம்மது நபி இஸ்லாமியர்களுக்கு மட்டுமில்லை, நாம் அனைவருக்குமானவர் - ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணன் ஆர்.எஸ்.எஸ் வேண்டுமானால் பாகிஸ்தான் போகட்டும், முஸ்லிம்கள் போக வேண்டியது இல்லை என்று ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணன் அதிரடி தாக்கு தொடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது.... பகவத் சிங்க்கை தூக்கில் ஏற்றியது முஸ்லிம்கள் இல்லை, காந்தியை கொன்றது முஸ்லிம்கள் இல்லை, இந்திர காந்தியை கொன்றது முஸ்லிம்கள் இல்லை, ராஜீவ் காந்தியை கொன்றது முஸ்லிம்கள் இல்லை, சுதந்திரத்திற்கு பாடுபட்ட எந்த தலைவர்களையும் முஸ்லிம்கள் கொள்ளவில்லை, மாறாக தனது சமூகத்தின் பெரும் பங்களிப்பை அளித்தனர், பிறகு அவர்களை எப்படி தீவிரவாதி என்று அழைக்கிறார்கள். தாகித்தவருக்கு தண்ணீர் தருவது இஸ்லாம்... இக்கட்டான சூழ்நிலையில் மற்றவர்களுக்கு உதவுவது இஸ்லாம், பசித்தவருக்கு உணவளிப்பது இஸ்லாம், அன்பு, தியாகத்தை போதிப்பது இஸ்லாம், சுயநலத்தோடு இருக்காதே என்று சொல்வது இஸ்லாம், அப்பாவிகளை கொள்வது இஸ்லாத்திற்கு எதிரானது. இந்த நாடு பகத்சிங்கின் நாடு, இது காந்திஜியின் நாடு, இது அசரப்குல்லாவின் நாடு, இது வீரன் அப்துல்...

உங்களுக்கு நோன்பில்லையா?

Image
நாம் வைப்பதற்க்கு பெயர் நோம்பு ...!! ரமளான் மாதத்தில் தள்ளாத வயதுடைய ஒரு முதியவர் ஒரு மூலையில் அமர்ந்து எதையோ சாப்பிட்டுக்கொண்டிருந்தார் அப்போது சில இளைஞர்கள் அவர் அருகில் வந்து, “என்ன..பெரியவரே ! உங்களுக்கு நோன்பில்லையா? என்று கேட்டனர். அதற்கு அவர் சொன்னனார்: “ யார் சொன்னது எனக்கு நோன்பு இல்லையென்று ? எனக்கு நோன்பு உண்டு.! ஆனால் என்னால் சாப்பிடாமல் இருக்க முடியாது.  இளைஞர்கள் பலமாக சிரித்தனர். ஹ..ஹா..ஹ..இப்படியொரு நோன்பு உண்டா..? இது என்ன வகை நோன்போ...? முதியவர் சொன்னார் : எனக்கு பொய் பேசும் பழக்கம் கிடையாது. யார்மீதும் கெட்ட எண்ணம் வைப்பதில்லை. யாரையும் பரிகாசம் செய்வதில்லை. எவரையும் ஏளனம் செய்வதில்லை. எவர் மனதையும் நோகடிப்பதில்லை. அவதூறு சொல்வதில்லை. புறம் பேசுவதில்லை. எவர் மீதும் பொறாமை கொள்வதில் ஐந்து வேளை தொழுகையும் நேரம் தவறாமல் பள்ளிக்கு சென்றுதான் தொழுவேன். குன் ஆன் ஓதுவதற்கும் வாசிப்பதற்கும் நேரம் ஒதுக்குவதுண்டு. அப்புரம்...ஹராமான எதையும் சாப்பிடுவதில்லை. தகுதியற்ற எந்தப் பொருளையும் பெற்றுக்கொள்வதில்லை. பொருப்ப...

நோன்பாளியின் துஆ நிராகரிக்கப்படாது

Image
நாமும் ...!!  நோம்பு திறக்கும் நேரமும் .....!!! இஃப்தார் நேரத்தில் நோன்பாளியின் துஆ நிராகரிக்கப்படாது .அதற்கான பொருப்பை நானே ஏற்கிறேன்..என்று அல்லாஹூ தாலா சொல்கிறான் .. இஃப்தார் நேரம் ....நம்முடைய நிலை ..? وقال سيدنا موسى عليه السلام يا ربِّ أكرمتني بالتكليم فهل أعطيت أحَدًا مثل ذلك فأوحى الله تعالى إليه يا موسى إنَّ لي عبادًا أخرجهم في آخر الزمان وأكرمهم بشهر رمضان فأكون أقرب إلى أحدهم منك لأنك كلمتني وبيني وبينك سبعون ألف حجاب فإذا صامت أمة محمد صلى الله عليه وسلم حتى ابيضّت شفاههم واصفرت ألوانهم أرفع الحجب بيني وبينهم وقت إفطارهم يا موسى طُوبى لمن عطش كبده وأجاع بطنه في رمضان. ஒரு தடவை மூஸா ( அலைஹி வஸல்லம் ) அவர்கள் அல்லாஹ்விடம் கேட்டார் . யா அல்லாஹ்!  நீ என்னை உன்னுடன் நேரடியாக பேசவைப்பதன் மூலம் கெளரவப்படுத்தினாய்.. இது போன்ற பாக்கியத்தை வேறு எவருக்கேனும் கொடுத்ததுண்டா ? என கேட்டார். அதற்கு அல்லாஹு தஆலா ; மூஸாவே!  இறுதி காலப்பகுதியில் நான்   முஹம்மத் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் ) அவர்களின்   கூட்டத்தினரை அனுப்ப...

நாம் குழப்பம் நிறைந்த ஒரு கால கட்டத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் .

Image
நீங்கள் தான் பொருப்பாளர்கள் !!!  நாம் குழப்பம் நிறைந்த ஒரு கால கட்டத்தில்  வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் .  தரீக்காவைப் பற்றி   இன்னும் இறை நேசர்களை பற்றி இன்னும் பையத்தை பற்றி விவாகரம் செய்யக் கூடிய ஒரு கால கட்டத்தில் இருக்கிறோம் !  தரீக்கா சம்மந்தமான ஈடுபாடுகளை குறித்து கொச்சைப்படுத்துகிற கால கட்டத்தில் இருக்கிறோம் ! இது மாத்திரம் அல்ல இதற்க்கு முன்பும் நம் சமூகத்தில் இந்த குற்றச் சாட்டுகள் இருக்கிறது , இப்போதும் இருக்கிறது ஆனால் முன்பை விட அந்த பழிச்சொல்லும் , அவச் சொல்லும் , மிக அதிகமாக இருக்கிறது . அந்த அவச் சொல்லுக்கும் ,பழிச் சொல்லுக்கும் தரீக்காக்கள் காரணம் அல்ல ! இந்த அவச் சொல்லுக்கும் , பழிச் சொல்லுக்கும் இறை நேசர்கள் காரணம் அல்ல !! இந்த அவச் சொல்லுக்கும் , பழிச் சொல்லுக்கும் ஷைகு மார்கள்  காரணம் அல்ல !! இந்த அவச் சொல்லுக்கும் , பழிச் சொல்லுக்கும் பையத்துகள்  காரணம் அல்ல ! தரீக்கா என்ற பெயரில் நடக்கின்ற போலிதனம் தான் அதற்கு காரணம் . இறை நேசர்கள் என்ற பெயரில் நடக்குகிற போலிதனம் தான்அதற்கு காரணம் . ஷைகு மார்கள் என்ற பெய...

போலிகள் என்று ஆதாரத்தோடு நிருபித்தார்களோ

Image
புனித தரீக்காவின் பெயரில் போலிகள் : உஷார் ;  அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரக்கதுஹூ  இஸ்லாமிய அன்பர்களே !! புனித தரீக்காவில் போலிகள் என்ற விசையம் [ கட்டுரை ] என்னுடைய சொந்த கருத்து அல்ல . கற்பனையும் அல்ல . மனோ இச்சைப் படியும் எழுத வில்லை ,மாறாக நம்முடைய இறை நேசர்கள் , ஷைகு மார்கள் , சங்கைக் கூறிய உலமாக்கள் யரை ? போலிகள்  என்று ஆதாரத்தோடு நிருபித்தார்களோ ! பேசினார்களோ ! அந்த ஆதரத்தைக் கொண்டே நாம் இந்த கட்டுரையை உருவாக்கி உள்ளோம் .இதில் துளி அளவுக்கூட அல்லாஹ் & ரஸூலுக்கு [ ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் ] மாற்ற மான என்னுடைய சுயகருத்தை புகுத்தவில்லை என்பதையும் தெரிவித்து கொள்கிறேன் . நாம் கூறுகிற கருத்தை தயவு செய்து அல்லாஹ் & ரஸூலுக்காக [ ஸல்லல்லாஹூ அலைஹி வ ஸல்லம் } நடுனிலையோடு இருந்து சிந்தித்து பாருங்கள் : இது நம்முடைய குடும்ப விசையம் அல்ல ! குடும்ப விசையம் என்றால் இந்த உலகதோடு இந்த பிரச்சனை முடிந்து விடும் . இது மார்க்க சம்மந்தப்பட்ட விசையம்!!! எனவே நாம் இதை பற்றி தெளிவாக நிதானமாக ஆராய்வோம் என்றால் அல்லாஹ் தாஅலா  நமக்கு சிறப்பான விளக்கத்...

அன்பு வைக்கத் தெரியாத பாவீகள்

Image
அஸ்ஸலாமு அலைக்கும் [ வரஹ்மதுல்லாஹி பரக்கத்துஹூ ]  நாயகமே !  நாங்களோ தாங்கள் மீது அன்பு வைக்கத் தெரியாத பாவீகள்  اللهم حبب نبيك محمد فينا யா அல்லாஹ் உனது திருத்தூதர் முஹம்மத் அவர்களை  எங்களுக்கு மிகவும் உகந்தவர்களாக ஆக்கி அருள் புரிவாயாக என்ற துஆவை ஒதி வருகிறோம்  எனவே இந்த துஆவின் ஹூர்மத்தினால் [ தங்கள் மீது தூய்மையான அன்பு கொண்ட முஹிப்பிங்களுடைய பட்டியலில் எங்களை இடம் பெறச் செய்வாய்யாக , ஆமீன் 

அது தான் ரமலான் மாதம்...

Image
       நன்மைகளை அள்ளி தரும் மாதம் ...!!!    அது தான் ரமலான் மாதம்... !!!           فضل شهر رمضان.   நாம் மிகவும் ஆவலோடு ஆர்வத்தோடும் எதிர் பார்த்து கொண்டு இருக்க கூடிய சங்கையான  மாதம்.... கண்ணியமான மாதம்.....  ஏன் பல சிறப்புகளை தன்னில் பொதிந்த மாதம் ..      அது தான் ரமலான் மாதம்..    இந்த ரமலான் மாதத்தின் சிறப்புகளை வார்தையால் சொல்லி முடிக்க முடியாது  .அவ்வளவு சிறப்புகளை பொதிந்த மாதம்  நாம் இந்த ரமலான் மாதத்தை  எதிர்பார்தவர்களாக இருக்கிறோம்.. நாம் ,ரமலானை  எதிர் பார்பது  என்பது ஷஃபான் மாததின் பிறை - 29 ,30 .. தான் ......   ஆனால் நபிகள் கோமான் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்  அவர்கள் ஏறக் குறைய இரண்டி மாதங்களுக்கு முன்னால் இருந்து ரமலானை வரவேற்பார்கள் ... اللهم بارك لنا في رجب و شعبان وبلغنا رمضان எங்கள் இறைவா ...! ரஜப் மாத்திலும் ,ஷஃபான் மாத்த்திலும் எங்களுக்கு பரக்கத் செய்வாயாக..இன்னும் ரமலான் மாதத்தை அடையசெய்வாயா...

ஸல்மான் பாக்..

Image
ஸஹாபிகள் அடக்கஸ்தலம் ...!!! பக்காதிலிருந்து 40 மைல் தொலைவில் ஸல்மான் ஃபார்ஸி | ரலி) அவர்களின் அடக்கஸ்தலம் உள்ளது இதன் காரணமாக அந்த ஊருக்கே "ஸல்மான் பாக்" என்றழைக்கப்படுகிறது இதன் பழைய பெயர் மதாயின்  அங்கிருந்து இரண்டு பர்லாங்கு தொலைவில் "ஹஜ்ரத் ஹூதைபதுல் யமான் (ரலி) , " "ஹஜரத் ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) " ஆகிய இரு நபித்தோழர்களின் கபறு தஜ்லா நதி யின் கரையில அடக்கப்பட்டுள்ளது் பக்கத்தில் தஜ்லாந்தி ஓடுவதால் வெள்ளம் வரும் போது தண்ணீர் இரு கறுகளிலும் ஊடுருவி வெளியாகிறது. இந்நிலையில் முதலாம் பைசல் மன்னர் மற்றும் இராக் தலைமை முஃப்தீ (நீதிபதி) ஆகியோர் தனித்தனியாக கண்ட கனவில் மேற்படி இருநபித் தோழர்கள் தோன்றி "எங்களின் கப்றுகளை இடம் மாற்றங்கள் " என்று கூறினார்கள் தேதி குறிக்கப்பட்டு எல்லா நாட்டு மதத்தினர் கள் வெளிநாட்டு தூதுவர்கள் என சுமார் 5 இலட்சத்திற்கும் அதிகமானோர் கூடினார்கள் ஹிஜ்ரி 1350 துல்ஹஜ் கடைசியில் 1932 வருஷம் ஏப்ரல் மாதம் ஒரு திங்கட் கிழமை பகல் 12 மணிக்கு மேற்கண்ட எல்லோர் முன்னிலையிலும் புனித உடல்கள் கிரேன் மூலம் வெ...

சோதனைகளுக்கு காரணம் ...!!!

Image
 சோதனைகளுக்கு காரணம் ...!!! பாவங்களை நீக்குவதற்கான வழிகள் ..! قال رسول الله صلى الله عليه وصلم من يردالله به خيرا  صب منه. رواه مالك والبخاري كدا فى الترغيب ஃபிரஅவ்னுக்கு 500 வருடமாக தலைவலி கூட வந்ததில்லை. அதனால் தான் அவன் கர்வம் கொண்டான். அந்த கர்வம் வராமல் நம்மைக் காப்பாற்றி நம்மைப் பக்குவப்படுத்துவதற்குத் தான் நமக்கு சோதனைகளை அல்லாஹ் தருகிறான். وَمَا أَصَابَكُمْ مِنْ مُصِيبَةٍ فَبِمَا كَسَبَتْ أَيْدِيكُمْ وَيَعْفُو عَنْ كَثِيرٍ "உங்களுக்கு ஏற்படுகின்ற சோதனைகள் அவை உங்கள் கரங்கள் சம்பாத்ததின் காரணமாக ஏற்பட்டவை" அல்குர்ஆன். [42 ; 30] "ஒருவன் காணாமல் போன ஒரு பொருளைத் தேடுவதும் அவன் பாவத்திற்குப் பரிகாரமாகும்" {நபிமொழி} அழுக்கைப் போக்குவதற்கு நாம் சோப்பை பயன் படுத்துகிறோம். பலவகையான அழுக்குகள் இருக்கிறது.அதே போன்று சோப்புகளும் பல வகையாக இருக்கிறது. துணி துவைக்க ஒரு சோப்பு.உடலை சுத்தம் செய்வதற்கு ஒரு சோப்பு.பாத்திரத்தைக் கழுவுவதற்கு ஒரு சோப்பு. அதுபோல நம் பாவங்கள் பல வகையாக இருக்கிற காரணத்தினால் அதை நீக்குவதற்கும் அல்லாஹ் பல வகையான சோதன...

தவ்ஹீத்வாதிகள் யார் - ?

Image
     தவ்ஹீத்வாதிகள் யார் - ?  தவ்ஹீத் என்பதை நான்கு படித்தரங்களை, கொண்டது. முதலாவது:- நாவினால் "லா இலாஹ இல்லல்லாஹ்" என்று கூறுவது. இரண்டாவது:- அதன் அர்த்ததை கல்பால் (இதயத்தால்) உண்மைப்படுத்துவது. மூன்றாவது:- இறை ஒளியினால் கஷ்புடைய, ஞானத்தை, பெற்றவர்களின் நிலை. நான்காவது:- பிரபஞ்சத்தின் அல்லாஹ்வைத்தவிர, எதையுமே காணாத நிலையாகும். இந்த நிலையை அடைந்தவர்தான் உண்மையான, தவ்ஹீத்வாதி ஆவார். ..... (இஹ்யா உலூமுத்தீன்-245:4)

தீன் என்னும் கட்டிடத்திற்கு நான்கு ..!!

Image
தீன் என்னும் கட்டிடத்திற்கு நான்கு தூண்கள் :- முதலாவது தூண் :-  ஈமான் ( நம்பிக்கை )  இரண்டாவது தூண் :- இஸ்லாம் ( வழிபாடு )  மூன்றாவது தூண் :- தவ்ஹீத் ( ஏகத்துவம் )  நான்காவது தூண் :- மரிஃபா ( அல்லாஹ்வை அறிதல் )  இந்த நான்கில் ஏதேனும் ஒன்று மாறும் பட்டாலும் தீன் ( மார்கம் ) மாறிவிடும் . முதல் தூண் ஈமான் :- ஈமான் என்பது  1 - இதயத்தினால் உறுதிக் கொள்ள வேண்டும் . 2 - நாவினால் கூற வேண்டும் . 3 - உறுப்புகளினால் அமல் செய்ய வேண்டும் . ஈமானின் வேராகிறது :-  அல்லாஹ்வை அறிவதும் , அவனை உண்மை கொள்வதும், நம்பிகை கொள்ள வேண்டியவற்றை நம்பிக்கை கொள்வதாகும்  . இவற்றை விட்டால் காபிராகி விடுவான் .                                 شعب الايمان .                          ஈமானுக்கு பல கிளைகள் உண்டு அவற்றில் சிலதை விட்டால் காஃபிராக மாட்டான். ஆனால் பெரும் பாவியாவான் அத...

அவனேதான் இவன்....!!!

Image
                   அவனா ...!! இவன் ...!!!                                அவனேதான் இவன்....!!!      எனது  ஸஹாபாக்களை  திட்டாதீர்கள்  என்றார்கள்  நபி  ஸல் அவர்கள்... அந்த ஸஹாபாக்களை  க்ரிமினல்கள் என்கிரான்.... நபி ஸல்  வாழ்க்கையில் பொய்யே சொன்னதில்லை  என்று  புகாரியில் வருகிறது... நபி ஸல் அவர்களை  அல்அமீன் நம்பிக்கை குரியவர்  என்று  எதிரிகள் கூட ஒப்பு  கொண்டார்கள் அந்த  நபியை  பார்த்து  போர்களில்  பொய்  சொன்னார்கள்  என்கிரான்.... அப்பாஸ்  ரலி  அவர்களை கொண்டு உமர்  ரலி  வசீலா  தேடினார்கள்  என்று  புகாரியில் 1010வது ஹதீசாக வருகிரது.. வஸீலா தேடுவது  இணை வைப்பு  என்று  சொல்வதன் மூலம்  சஹாபாக்களும்  புகாரீ  இமாம்  உட்பட ஹதீஸ்  வல்லுனர் களும்  இணை வைப்பிர்கு...

வழிகேடர்களே உங்களை தான் ...

Image
தடுமாறும் இளைஞர்களே .. உங்களைதான் .. வழிகேடர்களே உங்களை தான் ...  குர்ஆன் ,ஹதீஸ் இருக்க மத்ஹப் ஏன்...???  என்று கண்ணியமான அரபு இலக்கணப் பண்டிதர்களான இமாம்களை தூக்கி எறிந்து குர்ஆன்,ஹதீஸுக்கு அரபே ஒழுங்காக தெறியாத நாங்களே நேரடியாக விளக்கம் கொடுக்கலாம் என்று சில ஆலிம்களை நம்பி அறியாமல் புதிதாக இஸ்லாத்தை சொல்பவர்களின் கூடாரத்துக்கு சென்று இப்பொழுது எந்த tj பக்கம் போவது என்று தடுமாறும் அப்பாவி இளைஞர்களே...?  உங்களிடம் சில கேள்விகள் முடியுமென்றால் பதில் தரலாம்..? கியாம நாள்வரைக்கும் அவகாசம்..?  இமாம்களின் கிதாபின் பக்கம் நெருங்காமல் முடியுமென்றால் குர்ஆன்,ஹதீஸிலிருந்து நேரடியாகவே ஆதாரம் தர வேண்டும்..?   உங்களுடைய வஹாபி ஆலிம்சாக்களையும் உதவிக்கு அழைக்கலாம்...!!!  முதல் கேள்வி ....? நீங்களும் நாமும் உலக முஸ்லிம்களுக்கும் கடமையாக்கப்பட்ட  இரண்டாவது கடமை தொழுகையில்  சுபஹ் 2 ரக்அத்  ளுஹர் 4 ரக்அத்  அஸ்ர் 4 ரக்அத்  மஃரிப் 3 ரக்அத்  இஷா 4 ரக்அத்  என்று இத்தனை ரக்அத்துக்கள்தான் தொழவேண்டும் ...

அருமையான பதில்களும் ...!!

Image
அற்புதமான கேள்விகளும் ...  ?? அருமையான பதில்களும் ...!!    ரோமாபுரியின் சக்கரவர்த்தி கைஸர், அமீர் முஆவியா [ரலியல்லாஹூ அன்ஹூ ] அவர்களுக்கு ஒரு கடிதம் அனுப்பி, அதில் கீழ்காணும் கேள்விகளுக்கு பதில் வேண்டியிருந்தார்.....!!! 1, கிப்லா இல்லாத பகுதி எது ? 2, தந்தை இல்லாதவர் யார் ? 3, குடும்ப பாரம்பரியமில்லாதவர் யார் ? 4, ஒருவரை அவருடைய கப்று கொண்டு நடந்தது அவர் யார் ? 5, கருவறையில் படைக்கப்படாத மூன்று வஸ்துக்கள் எவை ? 6, மூன்று பொருள் :- ஒன்று முழுமையானது. இன்னொன்று அரைகுறையானது. மற்றொன்று ஒன்றுமே இல்லாத வஸ்து. இவை யாவை ? 7, உலகிலுள்ள எல்லாப் பொருளின் வித்தையும் ஒரு பாட்டிலில் போட்டு எனக்கு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு கேள்விகள் அடங்கிய இக்கடிதத்தை அமீர் முஆவியா [ ரலியல்லாஹூ அன்ஹூ ] அவர்கள், அப்துல்லாஹ் பின் அப்பாஸ் [ரலியல்லாஹூ அன்ஹூ ]  அவர்களுக்கு அனுப்பினார்கள்... அருமை நாயகம் [ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் ] அவர்களால் “திருக்குர்ஆனின் விஷய ஞானத்தையும் மார்க்கத்தின் சட்ட ஞானத்தையும் யா அல்லாஹ்! இவருக்கு கற்றுக்கொடு” [புகாரி : 75,143]...

அல்- இர்ஷாத் ...!!!

Image
அல்- இர்ஷாத் -   இந்த தளத்தில் :   குர்ஆன் , ஹதீஸ் , ஆன்மீகம், ஸஹாபாக்கலின் வரலாறு , இறைநேசர்களின் வரலாறு ,  அறிவியல் , இஸ்லாமிய கலாசரம் , கொள்கை விளக்கம் , சமூகம் , கேள்வி பதில் , அரசியல், படிப்பினை கதைகள் , என பன் முகத்தன்மையோடு " அல்- இர்ஷாத் " ஆய்வுப் பயணம் விரிவடைந்தால் நீண்ட காலமாக பெயரளவில் பல இஸ்லாமிய இணைய தளங்களுக்கு முன்னோடியாய் ' அல்- இர்ஷாத் ' அமையும் என்பதில் எந்த ஒரு சந்தேகமுமில்லை ...  இன்ஷா அல்லாஹ்.......  எங்கள் பணி தொடர்ந்து நடைப்பெற தங்களின் துஆ ஒரு காரணம் ....!!!

ஹுஜ்ஜத்துல் இஸ்லாம்..!!!

Image
இறை உண்மை...!!! سَنُرِيْهِمْ اٰيٰتِنَا فِى الْاٰفَاقِ وَفِىْۤ اَنْفُسِهِمْ حَتّٰى يَتَبَيَّنَ لَهُمْ اَنَّهُ الْحَـقُّ‌  اَوَلَمْ يَكْفِ بِرَبِّكَ اَنَّهٗ عَلٰى كُلِّ شَىْءٍ شَهِيْدٌ‏  " நிச்சயமாக  இதுதான்  உண்மையானது என்று  அவர்களுக்கு தெளிவாகும் பொருட்டு நம்முடைய அத்தாட்சிகளை விளங்குவதற்காக இம்மண்ணுலகிலும், அவர்களுக்கு உள்ளேயும்  நாம் நமது அடையாளங்களை காட்டுகிறோம் " ( அத்: 41 : ஆ : 53 ) தன்னை அறிந்தவன் தன் இறைவனை அறிந்தவனாவான்  (ஹதீஸ்) நீ யார்? நீ எங்கிருந்து வந்தாய்? இங்கே சிலகாலம் நீ தங்கியிருப்பதன் நோக்கம் யாது? உன் உண்மையான மகிழ்வும்,துயரமும் எதில் அடங்கியுள்ளன? உன் பண்புகளில் சில மிருகங்களிடம் உள்ளவை. மற்றும் சில மலக்குகளிடம் உள்ளவை...!! பண்புகளில் எவை தற்செயலானவை, எவை இன்றியமையாதவை என்பதை நீ தெரிந்துகொள்ள வேண்டும்....! இவற்றை நீ அறிந்துகொள்ளாதவரை, உன் உண்மையான இன்பம் எங்குள்ளது என்பதை நீ கண்டுகொள்ள மாட்டாய்....!! உண்பதும்,தூங்குவதும், கலவி புரிவதும், சண்டையிடுவதும் மிருகங்களின் தொழில்கள்......

ஷைத்தானாகவே ஆகிவிடாதீர்கள்..!!

Image
ஷைத்தானுடன் போரிடுங்கள்...!! ஆனால் ஷைத்தானாகவே ஆகிவிடாதீர்கள். ஷைத்தான் யார்?  ‘நான், எனக்கு, என்னுடையது’ என்கிற சிந்தனையின் வடிவம்தான் ஷைத்தான்.  ஆதமுக்கு முன்னால் ஸஜ்தா செய் எனச் சொல்லப்பட்ட போது அவனைத் தடுத்து நிறுத்தியதும் ‘நான், எனக்கு, என்னுடையது’ என்கிற சிந்தனைதான்.  தவறு இழைத்துவிட்ட பிறகும் அதனை அவனால் உணர முடியாமல் போனதற்குக் காரணமும் அந்தச் சிந்தனைதான்.  அதற்கும் மேலாக ‘ஆதமோ வெறும் மண்ணு; நானோ நெருப்பு’ என தன்னுடைய செயலுக்கு சால்ஜாப்பு சொல்ல வைத்ததும் அந்தச் சிந்தனைதான்.  அதனால் தான் அவன் சபிக்கப்பட்டவன் ஆனான்.  இப்போது முகநூல் பக்கத்திலிருந்து கண்களை விலக்கி, சற்றே யோசித்துப் பாருங்கள்... உங்களை நீங்களே கேட்டுப் பாருங்கள்... ‘நான், எனக்கு, என்னுடையது’ என்கிற எண்ணம் உங்களின் மனத்தில் வேரூன்றி இருக்கின்றதா? உங்களின் செயல்களில் பிரதிபலிக்கின்றதா? உங்களின் அன்றாட வாழ்வில் கோலோச்சுகின்றதா?  இல்லை என்றால் அல்ஹம்துலில்லாஹ். இருக்கின்றது எனில் அந்த எண்ணத்தை இன்றே அகற்றி வீசி எறியுங்கள். ...