சத்திய இஸ்லாத்திற்காக ஸஹாபி பெண்களின் தியாகங்கள்..!
சத்திய இஸ்லாத்திற்காக ஸஹாபி பெண்களின் தியாகங்கள்..! முதல் பெண்மணியின் ஷஹாதத் சாட்சி… !!! சுமையா பின்த் கய்யாத் ரலியல்லாஹூ அவர்கள் முதன் முதலில் இஸ்லாத்தில் இணைந்த ஏழு நபர்களில் ஒருவராவார். இஸ்லாத்தில் இணைந்ததை துணிந்து மக்களுக்கு முன்பு வெளிப்படுத்தியவர் . பகிரங்கமாகச் சொன்னவர்.துணிச்சலோடு இந்த உலகிற்குச் சொன்ன பெண்மணி . குடும்பமே இஸ்லாத்தில் இணைந்ததைப் பொறுத்துக் கொள்ள முடியாத காஃபீர்கள் கடுமையாக வேதனை செய்தார்கள் இரும்பால் கட்டி சுடுமணலில் வீசினார்கள் .தண்ணீர் தாகத்தால் துடிக்க வைத்தார்கள் .கடுமையான நெருப்புக்கங்கில் சூடு வைத்தார்கள் . அந்த வழியே வந்த அண்ணல் நபிஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் ‘ யாசிரின் குடும்பமே! நீங்கள் ஓதுங்கும் இடம் சொர்க்கம் ‘ என்று கூறினார்கள் . முதுமை வயதையடைந்திருந்த சுமைய்யா ரலியல்லாஹூ அன்ஹா அவர்களின் முதுமையைக் கூடப் பொருட்படுத்தாமல் சுட்டேரிக்கும் சுடுமணலில் அவர்களைத் தூக்கி வீசினார்கள் .அப்போதும் அவர்கள் அல்லாஹ் அல்லாஹ் என்றே கூறினார்கள் சுமைய்யா ரலியல்லாஹூ அன்ஹா அவர்கள் உறுதியாக இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக் கொண்ட பெண்களுள்...
Comments
Post a Comment