Posts

Showing posts from 2018

அரஃபா நோன்பின் சிறப்பு :

Image
   அரஃபா நோன்பின் சிறப்பு ..!!!    عن أبي قتادة الأنصاري (رضي الله عنه) أن      رسول الله -صلى الله عليه وسـلـم- سـئـل عن    صوم يوم عرفة فقال: يكفر السنة الماضية                      والسنة القابلة அரபா நாளின் நோன்பைப் பற்றி நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் ‘அது கடந்துபோன ஓராண்டு மற்றும் எதிர்வரும் ஓராண்டு நிகழும் சிறு பாவங்களுக்கு பரிகாரமாக அமையும்’ என கூறினார்கள்.’               துஆக்களில் சிறந்த துஆ...        فإن الرسول الله -صلى الله عليه وسلم-           قال:       خَيْرُ الدّعَاء دعاء يَوْم عَرَفَةَ துஆக்களில் சிறந்தது அரஃபா நாளின் துஆ வாகும் என்று நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்...

குர்பானிக்கு தடை உள்ள பிராணிகள் !!!

Image
                           குர்பானிக்கு  தடை  உள்ள                                பிராணிகள் !!!  عَنِ البَرَاءِ بْنِ عَازِبٍ، رَفَعَهُ قَالَ: لاَ يُضَحَّى بِالعَرْجَاءِ بَيِّنٌ ظَلَعُهَا، وَلاَ بِالعَوْرَاءِ بَيِّنٌ عَوَرُهَا، وَلاَ بِالمَرِيضَةِ بَيِّنٌ مَرَضُهَا، وَلاَ بِالعَجْفَاءِ الَّتِي لاَ تُنْقِي. நான்கு பிராணிகளை குர்பானிக்காக அறுப்பது கூடாது !!! [ 1 ] = நன்கு தெரியும் படியான பொட்டைக் கண் பிராணி . [ 2 ] = வெளிப்படையாகத் தெரியும் நோயுற்றிருக்கும் பிராணி . [ 3 ] = வெளிப்படையாகத் தெரியும் ஊனம் உள்ள நொண்டியான பிராணி . [ 4 ] =எலும்பு மஜ்ஜை பலவீனமான வயது முதிர்ந்த பிராணி . [ அறிவிப்பாளர் ; பராஉபின் ஆஸிப் [ ரலியல்லாஹூ அன்ஹூ ] [ நூல் = அஹ்மது , அபூதாவுத் , நஸயீ , திர்மிதீ , இப்னு மாஜா ]   நாங்கு பிராணிகளை குர்பானிக்காக அறுப்பது கூடாது !!! عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَ...

குர்பானி & உழ்ஹிய்யா பற்றிய தெளிவான விளக்கம்...

Image
குர்பானி  &   உழ்ஹிய்யா  சட்டங்களை   பற்றிய தெளிவான      விளக்கம் ...             அஸ்ஸலாமு அலைக்கும்        வ ரஹ்மதுல்லாஹி வ பரகதுஹூ நாம் முதலில்  அறிந்து கொள்ள வேண்டியது சட்டங்கள் ...           குர்பானி என்றால் என்ன ..?       உழ்ஹிய்யா என்றால் என்ன ..?                என்பதை  தெளிவாக            விளங்கிகொள்ள வேண்டும்.. பொதுவாக உழ்ஹிய்யா என்பதற்கு குர்பான் என்றும் கூறப்படும் . ஆனால் இரண்டு வார்தைகளால் ஒன்று பட்டு இருந்தாலும்  இவைகளின்  சட்டங்கள் மாறுபட்டதாகும் ...      குர்பானி என்ற வார்த்தைக்கும்        உழ்ஹிய்யா என்ற வார்த்தைக்கும் வித்தியாசங்கள் உண்டு என்பதை விளங்கி கொ...

குர்பானி எப்போது கடமையாகும் ?

Image
குர்பானியின் பொதுவான சட்டங்கள் !!!! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரக்கதுஹூ  கேள்வி : குர்பானி எப்போது கடமையாகும் ?    பதில் = ஹனபியீ மத்ஹபின் படி குர்பானி கடமை !  இமாம் அபூஹனீஃபா [ ரஹ் ] கூறுகிறார்கள் அந்த நேரத்தில் ஜகாத்து கொடுக்கும் அளவிற்கு ஒருவரிடம் பொருள் இருந்தால் குர்பானி கடமையாகிவிடுகிறது = அதாவது =612, 1/2 ,கிராம் வெள்ளியோ அல்லது 87 ,1/2 ,தங்கம் அந்த நேரத்தில் இருந்தால் குர்பானி  "" வாஜிபு "" கடமையாகும்  ஷாஃஃபியீ மத்ஹபின் படி குர்பானி கடமை !  இமாம் ஷாஃபீ [ ரஹ் ] அவர்கள் கூறுகிறார்கள் ; குர்பானி தினத்தில் ,தனக்கும் ,தன் குடும்பத்திற்க்கும் உள்ள செலவு போக வசதி இருந்தால் குர்பானி கொடுப்பது சுன்னத்தாகும் ,  மேற்கண்ட இரண்டு இமாம்கள் அறிவிப்பிற்க்கும் ஹதீஸ்கள் உள்ளன .  குர்பானிக்கும் , ஜகாத்துக்கும் உள்ள வேறுபாடு !!! ஜகாத் கொடுக்க தகுதி பெற்றவருக்கு அதற்கென வரையறுக்கப்பட்ட தொகையோ , பொருட்களோ ,ஓராண்டு முழுவதும் அவர் கைவசம் இருந்திருத்தல் மட்டுமே அவர் மீது ஜகாது கடமையாகும் .ஆனால் குர...

குர்பானி ஏன் ? எதற்க்கு ?

Image
குர்பானி ஏன் ?                                  எதற்க்கு ?                                                எப்படி ?          அஸ்ஸலாமு அலைக்கும் [ வரஹ்மதுல்லாஹி வ பரக்கதுஹூ ] இஸ்லாமிய அன்பர்களே !!! நாம் ஏன் குர்பானி கொடுக்கிறோம் ? எதற்க்காக கொடுக்க வேண்டும் ? எப்படிக் கொடுக்கிறோம் ? என்பதை என்றைக்காவது சிந்தித்தது உண்டா ? சரி வாருங்கள் நாம் அதை பார்போம் !!! குர்பானி ஏன் !!! நபிகள் நாயகம் [ ஸல்லல்லாஹூ அலைஹி வ ஸல்லம் ] அவர்கள்  கூறினார்கள் : இது நமது பாட்டனார் , இப்ராஹிம் [ அலைஹி வ ஸல்லம் ] அவர்களின் வழிமுறையாகும் . அவர்களின்  நண்றியுணர்ச்சிக்கும் , தியாக பண்புக்கும் , உயிருள்ள நிலையான ஓர் அடையாளமாகும் . இதனை பரிபூரண மகிழ்ச்சியுடனும் , ஈமானின் உணர்ச்சியுடனும் நிறை வேற்றவது ஒவ்வொரு முஸ்லிமின் மீது கடமையாகும்    [  ...

இறைவனின் பாதையில் அர்ப்பணிக்கப்படும் பொருகள் பெறுகுவது எப்படி !!!

Image
இறைவனின் பாதையில் அர்ப்பணிக்கப்படும் பொருகள் பெறுகுவது எப்படி !!! لئن شكرتم لازيدنكم நீங்கள் [ எனக்கு ] நன்றி செலுத்தினால் [ நான் என்னுடைய அருளைப் ] பின்னும் உங்களுக்கு அதிகப் படுத்துவேண்  [ 14=7 ] மேலோட்டமாக பார்த்தால் குர்பானியால் மனிதனின் செல்வம் செலவழிவதாக நமக்குத் தெரியும் உண்மையில் குர்பானி கொடுப்பதால் பொருள் வளர்ச்சி அடைகிறது .இறைவன் பாதையில் அர்ப்பணிக்கப்படும் எந்த ஒரு பொருளும் குறைவு ஏற்பாடது மாறாக நிரந்தரமான வளர்ச்சி அடைந்து கொண்டே போகிறது . ஒரு விஷயத்தை உண்ணிப்பாக கவனித்தால் அந்த உண்மை புரியும் . அல்லாஹ்வின் பாதையில் குர்பானி கொடுக்கப்படும் பிராணிகள் சந்ததிகள் விரிவு டைந்து பெருகிக் கொண்டே இருப்பதையும் அவனது பெயரில் அறுக்கப்படாத பிராணிகளின் சந்த்திகள் குறைந்திருப்ப்தையும் நாம் கவனிக்க வேண்டும் .பசு ,எருமை , ஒட்டகம் ,ஆண்டுக்கு ஒரு முறை குட்டியைத்தான் பெருகின்றன .ஆடுகளும் சிரமத்துடன் அபூர்வமாக இரண்டு அல்லது மூன்று குட்டிகளை பெருகின்றன . இவற்றின் பிற்ப்பு குறைவானாலும் அழிவு அதிகம் உலகில் ஒவ்வொரு நாளும்  இலட்சக்கண்க்கான ஆடு மாடு  எருமைகள் அற...

புனித ஹஜ்ஜின் ஐந்து நாட்கள் செயல் விளக்கம் :-

Image
இஸ்லாத்தின் ஐந்தாவது கடமை       ஹஜ்ஜூ.....!!! அஸ்ஸலாமு அலைக்கும் [ வரஹ் ] புனித ஹஜ்ஜின் ஐந்து நாட்கள் செயல் விளக்கம் :- இதோ உங்களுக்காக :  இறைவன் கூறுகிறான் : وَلِلَّهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ إِلَيْهِ        سَبِيلاً  யாருக்கு ஹஜ் செய்ய சக்தி இருக்குமோ அவர்கள் மீது ஹஜ் கடமையாக இருக்கும் [ 3=97 ] رُوي عن النَّبي -عليه الصَّلاة والسَّلام- قوله: (مَن حجَّ للهِ، فلم يَرفُث ولم يَفسُقْ، رجَع كيوم ولدَته أمُّه).[٩ நபிகள் நாயகம் [ ஸல்லல்லாஹூ அலைஹி வ ஸல்லம் அவர்கள் கூறினார்கள் :  எவர் ஹஜ்ஜூ செய்து ஹ்ஜஜூக்கு பாதகமான காரியங்கள் செய்யாமலும் , வீணான வார்த்தைகள் பேசாமலும் , இருக்கிறாரோ அவர் அன்று பிறந்த பாலகனைப் போல் ஆவார் ,  [ அறிவிப்பாளர் = அபூஹூறைரா [ ரலியல்லாஹூ அன்ஹூ ]  [ நூல் = புகாரி =1819 ]  ஹஜ்ஜின் முதல் நாள் = 1 [ அதாவது ] துல் ஹஜ் பிறை = 8  <>  [ மினாவில் ] > இஹ்ராம் உடைய நிலையில் மினாவில் தங்குதல். >...

படைத்த இறைவனுக்காக எதனையும் அர்பணிக்கத்தயார் !!!!

Image
5000 ஆண்டுகளுக்கு முன்பு அரபு நாட்டில் ஒரு தியாகம் !!! படைத்த இறைவனுக்காக எதனையும் அர்பணிக்கத்தயார் !!!! சுய நலமில்லாத தியாகம் !!! தியாகம் என்பது வார்த்தைகளால் அல்ல !!! செயல்களால் ....!!! 5000 ஆண்டுகளுக்கு முன்பு அரபு நாட்டில் நடந்த  மா பெரும் தியாகம். பல வருடங்களாக குழந்தையே இல்லாமல் தவமிருந்து , வயதான கால கட்டத்தில் ஒரு ஆண் மகனை அல்லாஹ் கொடுத்தான் அந்த ஆண் மகனை அல்லாஹ் விற்க்காக அறுத்து பலியிட வேண்டும் , என்று அல்லாஹ் கட்டளையிட்டான்  நபி இப்ராஹிம் [ அலைஹி வ ஸல்லம் ] அவர்கள் அந்த கட்டளையை நிறை வேற்றினார்கள். அந்த சம்வத்தை படிக்கின்ற பொழுது உருகாத மனமும் உருகிப் போகும் என்பது தின்னம் . படித்து படிப்பினை பெற வேண்டிய அந்த தியாகச் சம்பவம் .இதோ உங்கள் கவனத்திற்க்கு  இப்ராஹிம் [ அலைஹி வ ஸல்லம் ] அவர்கள் தன்னுடைய மகன் இஸ்மாயீல் [ அலைஹி வ ஸல்லம் ]அவர்கள் பருவ வயதை அடைந்த பொழுது , மகனே ! உன்னை அறுத்துப் பலியிடுவதாக கனவு ஒன்றைக் கண்டேன் . அதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் ? என்று கேட்டார்கள் . தன் மகனாக இருந்தாலும்,தந்தை, தன் மகன் விசயத்தில்...

நபி இப்ராஹிம் [ அலை ] அவர்களின் தியாகம் தந்த படிப்பினைகள் என்ன!!

Image
நபி இப்ராஹிம் [ அலை ] அவர்களின் தியாகம் தந்த படிப்பினைகள் என்ன!! இந்த இடத்தில் ஒன்றை பதிய வைத்துக் கொள்ள வேண்டும் ஆடு ,,மாடு , ஒட்டகம் , போன்ற பிராணிகளை அற்த்துப் பலியிட்டால் மட்டும் போதாது , நமக்குள் உறைந்து கிடக்கும் ஆணவம் , அகம்பாவம் , பேராசை , போன்ற தீய குணங்களையும் கூண்டோடு  அழித்து சாம்பலாக்கி விட வேண்டும் .என்பதைத்தான் இந்த சம்பவம்  நமக்கு உணர்த்துகிறது . மனித இனம் ஒரே இனம் சாதி எனும் , உயர்வு ,தாழ்வு ஒழிய வேண்டும் . இதைக் கடமையாகவும் ,கொடுமையாகவும் கடைப் பிடிப்பவர்கள் அழிய வேண்டும் இறைவன் மனிதனில் உயர்வு தாழ்வு பார்ப்பதில்லை ,அதன் படி தண்டனைக் கொடுப்பதில்லை ,மனிதனின் உள்ளத்தையே பார்க்கிறான் , ஒற்றுமை , சுதந்திரம் , சகோதரத்துவம் , மனிதனுக்குள் இருக்க வேண்டும் அவனே வெற்றி பெற்றவன் தியாக உணர்வை நினைவுகூறும் வண்ணம் புனித ஹஜ்ஜூப் பெரு நாளில் முஸ்லிம்களின் புனிதத்தலமான கஃபா எனும் இடத்தில் பல லட்சம் மக்கள் ஒரே இடத்தில் கூடி ஹஜ்ஜூக் கடமைகளை நிறை வேற்ற உலகம் முழுவதும் பல நாட்டைச் சேர்ந்த பல தரப்பட்ட மக்கள் வெள்ளையர் ,கருப்பர்,தாழ்ந்தவர், உயர்ந்தவர் , அரபியர் ,...

ஹழ்ரத்_பாவா_சையத்ஷா_பீருல்_காதிரி_ரஹ்மதுல்லாஹி_அலைஹி

Image
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் நண்பர்களே சகோதரர்களே இறைநேசர்கள் காலடி படாத பூமியும் உண்டோ எனக் கேட்கும் அளவிற்கு உலகம் எங்கும் இறைநேசர்கள் பயனித்து இஸ்லாத்தை பரப்பி அந்த அந்நிய பூமியை தங்கள் சொந்த பூமியாக மாற்றி அங்கே தங்கள் மறைவாழ்விடத்தை அமைத்துக் கொள்வார்கள் (இறை நாட்டப்படி இன்ஷா அல்லாஹ் ) இது சேலம் மாவட்டத்தில் வனாந்திரக் காடு ஒரு காலத்தில் மக்கள் வர அஞ்சும் கட்டு மிருகங்கள் வாழும் பகுதி. தன் ஆன்மீக ஆசானின் கட்டளையை ஏற்று இறைவனின் வழிகாட்டுதல் படி இங்கு பயணித்து. ஏக இறைவனின் மகிமையை சொல்லி மக்களை இஸ்லாமிய மனத்தில் மீட்டு எடுத்தவர் தான் இந்தப் பெருந்தகை  ஹழ்ரத்_பாவா_சையத்ஷா_பீருல்_காதிரி_ரஹ்மதுல்லாஹி_அலைஹி அண்ணவர்களின் சேவையால் சேலம் மாவட்டதில் இஸ்லாத்தின் இனிய மனம் பரவியது. இன்று சேலம் மாவட்டத்தின் சன்யாசி குண்டு என்று அழைக்கப் படுகிறது மழை அடிவாரத்தில் இந்த நேசரின் தர்ஹா ஷரீஃப் உள்ளது. அண்ணவர்களின் மஜார்ஷரீப் ஐ சுற்றி ஒரு பெரிய மலை உண்டு. இது அந்த உயரிய மலையில் இருந்து உருண்டு வந்த இந்த பிரம்மாண்டமான பாறையை அண்ணவர்கள் தங்கள் பறக்க...

பெண்ணைப் பற்றி வினவப்பட்டது

Image
கணித மேதை அல்_குவாரிஸ்மியிடம் பெண்ணைப் பற்றி வினவப்பட்டது அதற்கு அவர் அளித்த பதில் இதோ..... ஒரு பெண் மார்க்க பற்றுடையவளாக இருந்தால் அவள் ஒன்றுக்கு சமன் 1= மேலும் அவள் அழகு மிக்கவளாக இருந்தால் ஒன்றுடன் ஒரு பூச்சியத்தை சேர்த்துக்கொள்ளுங்கள் 10= இன்னும் அவள் செல்வம் மிக்கவளாக இருந்தால் மேலும் ஒரு பூச்சியத்தை சேர்த்துக்கொள்ளுங்கள் 100= மேலும் குடும்ப, குல அந்தஸ்தை உடையவளாக இருந்தால் இன்னும் ஒரு பூச்சியத்தை சேர்த்துக்கொள்ளுங்கள் 1000= எனவே இதில் ஒன்று (மார்க்கம்) போனால் பூச்சியங்கள் மாத்திரமே எஞ்சி இருக்கும் அவற்றிற்கு எந்த பெறுமதியும் இல்லை!  20.07.2018

அன்பு.... பாசம் ... !!!

Image
அன்பு.... பாசம் ... !!! ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.  பழங்களை எடை போட்டு வாங்கி பணம் செலுத்திய பின் அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய்த்து வாயில் போட்டு விட்டு, _ இந்த பழம் மிகவும் புளிப்பாக உள்ளது என்று அந்த பாட்டியிடம் கொடுத்து சாப்பிட சொல்லி புகார் செய்வார்.  உடனே பாட்டி ஒரு சுளையை வாயில் போட்டு விட்டு,  இல்லையேப்பா,  நல்லா தானே இருக்கு" என்பார்,  உடனே அந்த இளைஞர் எதுவும் பேசாமல் மீதி பழங்களை எடுத்துக் கொண்டு செல்வார். இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அவர் மனைவி அவரிடம், ஏங்க..  பழங்கள் நல்லா இனிப்பாக தானே உள்ளது, என் தினமும் இப்படி நல்லா இல்லைனு சொல்லி டிராமா போடறீங்க" என்று கேட்ப்பார்.  உடனே அந்த இளைஞர் சிரித்து கொண்டு மனைவியிடம்,  அந்த பாட்டி நல்ல இனிப்பான பழங்களை தான் விற்கிறார், ஆனாலும், தனக்கென்று ஒரு பழத்தைக் கூட சாப்பிட மாட்டார். நான் இப்படி குறை கூறி கொடுப்பதால் தினம் அவர் காசு இழப்பின்றி ஒரு பழத்தை சாப்பிடுகிறார் என்றார். தினமும் நடக்கு...

சிகரட் ஹலலாலா....?

Image
சிகரட்டை ஹல்லா ....? சிகரட்டை ஹலால் என்று நீ கருதினால் புகைக்கும் முன் நீ ஏன் 'பிஸ்மில்லாஹ்' சொல்வதில்லை? அல்லது புகைத்த பிறகு ஏன் 'அல்ஹம்துலில்லாஹ்' கூறுவது இல்லை.  ........????? சிகரட்டை அல்லாஹ்வின் அருள் என்று நீ கருதினால் (அஸ்தஹ்பிருல்லாஹ்) அதை ஏன் செருப்பால் மிதித்து அணைக்கிறாய். ........????? சிகரட்டை ஒரு சாதாரணமான விஷயம் என்று நீ .... கருதினால் அதை ஏன் உன் பெற்றோர் முன்னிலையில் புகைப்பதில்லை. ........????? இதை நீ ஒரு விளையாட்டிற்காக செய்கிறாய் என்றால் ஏன் உனது பிள்ளைகளுக்கு அதை கற்றுக்கொடுப்பதில்லை. ........????? சிந்தியுங்கள் .....முடிவு உங்கள் கையில் ....வாழ்க்கையை வீணடித்து விடாதீர்கள்.

புனித ஹஜ்ஜின் ஐந்து நாட்கள் செயல் முறை விளக்கம்

Image
அஸ்ஸலாமு அலைக்கும் [ வரஹ் ] புனித ஹஜ்ஜின் ஐந்து நாட்கள் செயல் முறை விளக்கம்  இதோ உங்களுக்காக :  இறைவன் கூறுகிறான் :  யாருக்கு ஹஜ் செய்ய சக்தி இருக்குமோ அவர்கள் மீது ஹஜ் கடமையாக இருக்கும் [ 3=97 ]  நபிகள் நாயகம் [ ஸல்லல்லாஹூ அலைஹி வ ஸல்லம் அவர்கள் கூறினார்கள் :  எவர் ஹஜ்ஜூ செய்து ஹ்ஜஜூக்கு பாதகமான காரியங்கள் செய்யாமலும் , வீணான வார்த்தைகள் பேசாமலும் , இருக்கிறாரோ அவர் அன்று பிறந்த பாலகனைப் போல் ஆவார் ,  [ அறிவிப்பாளர் = அபூஹூறைரா [ ரலியல்லாஹூ அன்ஹூ ] [ நூல் = புகாரி =1819 ]  ஹஜ்ஜின் முதல் நாள் = 1 [ அதாவது ] துல் ஹஜ் பிறை = 8  <>  [ மினாவில் ] > இஹ்ராம் உடைய நிலையில் மினாவில் தங்குதல். > லுஹர் , அஸர் , மஃரிப் , மற்றும்  இஷா , தொழுகையை நிறைவேற்றுதல் . > இரவு மினாவில் தங்குதல். ஹஜ்ஜின் இரண்டாம் நாள் =2 [ அதாவது ] துல் ஹஜ் பிறை = 9 <> [ மினா & அரஃபா > மினாவில் இன்று ஃபஜர் தொழுகையை  நிறைவேற்றுதல்  >  சூரியன் உதயமானதற்கு பின் அரஃபா...

இறைநேசர்கள்

அருமையான விளக்கம்

அருமையான விளக்கம்

உணவு தூஆ பயான்

கவனம் மிக மிக அவசியம் ..   நாம் வணக்கத்தில் அது மிக முக்கியம்..

நாம் சிந்திக்க கடமை பட்டுள்ளோம் ..

இந்த காலத்தில் நாம் சினிமா பாடல் வரிகள் தவறிபாடினால் பிள்ளைகள் திருத்தி தருவார் கள்..... ஆனால் இப்படி குர்ஆனில் ஓதும் போது தவறை திருத்தி தர முடியும்மா ? நாம் சிந்திக்க கடமை பட்டுள்ளோம் .. நம் குழந்தைகளுக்கும் குர்ஆனை கற்றுக் கொடுப்போம் ...ஆமீன்

வஸீலா பயான்

வஸீலா ஓர் விளக்கம் ...

50 GB of Internet Data Without any Recharge

Image
50 GB of Internet Data Without any Recharge என்று உங்களுக்கு வரும் இதுபோன்ற Message பற்றிய உண்மை.. கண்டிப்பாக படித்து அறிந்து உங்களை பாதுகாத்து கொள்ளுங்கள் இவ்வாறு 50 GB Data இலவசம் என்று Message வந்தவுடன் நாம் என்ன செய்கின்றோம்....! முந்தி அடித்துக் கொண்டு அதிலுள்ள Linkஐ அழுத்தி உடனே குறித்த இணையத்துக்குள் நமது தொலைபேசியில் உள்ள Browser மூலமாக உள் நுளைகின்றோம்.... ஆம் அந்த இடத்தில்தான் நாம் முதலாவது தவறை செய்கின்றோம்.... ஏன் என்ற உங்களுடைய கேள்விக்கு முழுமையான பதிலினை ஒரு கணினி தொழிநுட்பவியலாளனாக எனது சமூகத்துக்கு கூறி புரிய வைக்க வேண்டிய கடமையின்பால் இந்த பதிவை எழுதுகின்றேன் இறுதிவரை படிக்க தவறாதீர்கள் ஏன் என்றால் இது உங்களுடைய சொந்த தகவல்களையும், புகைப் படங்களையும், வீடியோக்களையும் யாரோ இனம் தெரியாத Hacker இணைய வளி திருடர்களிடம் இருந்து பாதுகாத்து கொள்ள வேண்டிய நிலையில் நீங்கள் உள்ளீர்கள் இவ்வாறான போலி செய்திகளை கணினி துறையில் நிபுணத்துவம் உள்ள சொந்த லாபத்துக்காக எதையும் செய்யக் கூடிய கீழ்தரமான தொழிநுட்பவியலாளர்கள் தயாரிக்கின்றனர். இவ்வாறு உண்மையிலே இலவசமாக Data தரு...

அமைதியைத் தரும் மருந்து இருக்கிறதா.!!!

அமைதியைத் தரும் மருந்து இருக்கிறதா.!!!  நீங்கள் பார்க்கும் வீடியோவில்... ஒருவர் மருந்து கடை ஒன்றுக்கு வருகிறார் தான் வாங்க வந்த மருந்தை கேட்டு வாங்குகிறார்.. அச்சமயம் அந்த கடையில் ஒரு போர்டு ஒன்று வைக்கப்பட்டுள்ளதைப்  பார்க்கிறார். அதில் இங்குஉள்ளத்திற்குஅமைதியை தரக்கூடியதும் கிடைக்கும்  என்பதாக எழுதப்பட்டிருந்தது.  அதைப் பார்த்த அவர் உள்ளத்திற்கு அமைதியைத் தரும் மருந்து இருக்கிறதா என்று கேட்க கடைக்காரர் ஒரு பையை கொடுக்கிறார் அதை திறந்து பார்த்தவர் ஆச்சரியப்பட்டார் உள்ளே திருக்குர்ஆன் இருந்தது. ஆம் நண்பர்களே உண்மை தான்  எத்தனையோ மருந்துகளை சாப்பிடக்கூடிய நாம் குர்ஆனை எந்த அளவு பயன்படுத்துகிறோம்...?  அல்லாஹ் கூறுகின்றான்.  وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا இன்னும், நாம் முஃமின்களுக்கு ரஹ்மத்தாகவும், அருமருந்தாகவும் உள்ளவற்றையே குர்ஆனில் (படிப்படியாக) இறக்கிவைத்தோம்; ஆனால் அக்கிரமக்காரர்களுக்கோ இழப்பைத் தவிர வ...

முதியவர் இல்லத்தில் சேர்த்து விட்டான் மகன் .

Image
இது தான் அம்மா ...!!! தந்தை இறந்த பின் தன் தாயை கவனிக்க முடியாமல் முதியவர் இல்லத்தில் சேர்த்து விட்டான் மகன் . மனைவியும் வேலைக்கு போவதால் தன் தாயை வீட்டில் கவனிக்க யாருமில்லை என்ற காரணத்திற்காக முதியவர் இல்லத்தில் சேர்த்து விட்டான். மாதத்திற்கு ஒரு முறை தன் தாயை அங்கு சென்று சந்தித்து வந்தான். வருடங்கள் கடந்தன. ஒருநாள் அவருடைய தாய் ரொம்பவும் முடியாமல் இருப்பதாக தகவல் வந்தது.  மகனும் உடனடியாக தன் தாயை சந்திக்கச் சென்றான்.  தாய் சாகும் தருவாயில் இருந்தார்கள். “உங்களுக்கு ஏதாவது வேண்டுமா?” என மகன் கேட்டான். இந்த முதியவர் இல்லத்தில் மின் விசிறிகள் எதுவும் இல்லை. காற்று இல்லாமலும், கொசுக் கடித்தும் நிறைய நாட்கள் தூங்காமல் இருந்திருக்கிறேன். இங்கு தரும் கெட்டுப் போன சாப்பாட்டை சாப்பிட முடியாமல் பல நாட்கள் சாப்பிடாமல் தூங்கியிருக்கிறேன்.  எனவே இந்த இல்லத்திற்கு சில மின் விசிறிகளும் , சாப்பாட்டை கெடாமல் பாதுகாத்து வைத்திருக்க ஒரு குளிர்சாதனப் பெட்டியும் வாங்கிக்கொடுப்பாயா?” என மெல்லிய குரலில் தாய் கேட்டார். மகன் ஆச்சரியப்பட்டான். “பல ...
அரேபியாவின் இஸ்லாமிய வசந்த வரலாற்றில் ஒருநாள் ! அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தாயிப் போர் முடிந்து திரும்பி வந்து கொண்டிருந்தார்கள். கூடவே அலீ ( ரலி ) அவர்களும் அண்ணலோடு அணிவகுத்து வந்து கொண்டிருந்தார்கள். அன்புக்குரிய மருமகனும் கண்மணி மகள் பாத்திமாவின் அருமைக் கணவருமான அலீ ( ரலி ) அவர்களை தனியே அழைத்துச் சென்ற பெருமானார் ஆன்மீக ரகசியங்கள் பலவற்றை அலீ அவர்களுக்கு எடுத்துச் சொன்னார்கள். அதைக் கண்ட உமர் ( ரலி ) அவர்கள் ... " யா ரசூலல்லாஹ் ! தாங்கள் அலீ ( ரலி ) அவர்களுக்கு மட்டும் ரகசியமாக ஏதாவது  போதிக்கிறீர்களா ?" என்று கேட்டார்கள். " நான் ஒன்றும் போதிக்கவில்லை.  அல்லாஹ்தான் போதித்தான்  " என்று பதிலுரைத்தார்கள் நபிகள் ( ஸல் ) அவர்கள். அதாவது .... நானாக எதுவும் சொல்லவில்லை. அல்லாஹ்வின் நாட்டம் அலீ அவர்களுக்கு சில ஆன்மீக ரகசியங்களை சொல்ல வேண்டுமேன்பது. அவன் நாட்டப்படியே அது நிகழ்ந்தது என்பது அதன் விளக்கம். இப்படி அண்ணலாரிடமிருந்து ஆன்மீக ரகசியங்களை எல்லோரும் பெற்று விடவில்லை. அல்லாஹ் நாடியவர்களுக்கு மட்டுமே அது கிடைத்தது. அதன...