Posts

இது மனைவிக்கு மட்டும் இல்லை...?? கணவர்களுக்கு தான்...!!

Image
இது மனைவிக்கு மட்டும் இல்லை...??  கணவர்களுக்கு தான்...!! அது ஒரு சைக்காலஜி வகுப்பு : ஆசிரியர் வந்து :- இன்னைக்கி நாம ஒரு கேம் விளையாடப்போறோம் ..." என்று கூறிவிட்டு ஒரு பெண்ணை அழைத்து:- "இந்த போர்டில் உனக்கு முக்கியம் என்று தோன்றும் 30 பேர் பெயரை எழுதுங்கள்..." என்று பணித்தார். அந்த பெண்ணும் எழுதினார்:-  பெயர்களை கவனித்த அவர், "இதில் உங்களுக்கு முக்கியம் இல்லை எனும் ஐந்து பேர் பெயரை அழித்து விடுங்கள்" என்றார்... அந்த பெண் உடன் பணிபுரியும் ஐந்து பேரின் பெயரை அழித்தார்.. அடுத்து மீண்டும் ஐந்து பேர் பெயரை அழிக்க சொன்னார். அந்த பெண் பக்கத்துக்கு வீட்டினர் ஐந்து பேரின் பெயரை அழித்தார்... இப்படியே அழித்து அழித்து கடைசியில் நான்கு பெயர்கள் மட்டுமே இருந்தன போர்டில்... அது அவரின் பெற்றோர், கணவர் மற்றும் ஒரே மகன்.... இப்போது மீண்டும் இரண்டு பேர் பெயரை அழிக்க சொன்னார்...  இப்போது தான் அங்கிருந்த அனைவரும் இங்கே நடப்பது வெறும் விளையாட்டு இல்லை என்பதை உணர்ந்தனர்... வேறு வழியே இல்லாமல் அரை மனதுடன் அவளின் பெற்றோர் பெயரை அழித்தார் அந்த பெண்... ம...

தப்புலீக் ஜமாத்தினர் செய்வது சரியா?*

*தப்புலீக் ஜமாத்தினர் செய்வது சரியா?* *அரசு ஆணைகளை மதிக்காமல் கூட்டம் கூட்டிய டெல்லி ஸஃதும்...* *உலமா சபையின் கட்டளைகளை புறந்தள்ளும் அவரின் சாத்திகளும்...* *செய்த மாபெரும்* *பிழைக்கு...* *நம் சமுதாயம் கெட்ட பெயரை, வாங்கித் தவிக்குது.* *தன் டெல்லி இஜ்திமா என்னும் உணவுத் திருவிழாவை தேவையில்லாமல் நடாத்தி, பெரும் சீர்கேட்டை விதைத்து விட்டது இக்கூட்டம்.* *அதை மறைக்க...* *மாற்றார் பால் விஷயத்தைத் திசை திருப்புவதிலேயே கவனமாக உள்ளது.* *தானும் கெட்டு* *சமுதாயத்தையும் கெடுக்கும்...* *இவ்வழிகெட்ட வஹ்ஹாபியக் கூட்டத்தின் வறட்டுப் பாதையை அறிய தொடர்ந்து படியுங்களேன் : ஒண்ட வந்த பிடாரியை ஊர்ப்பிடாரி தான் அடக்குமென்பார்கள். இப்போது தப்புலீக் ஜமாத் அந்த நிலமையில் தான் இருக்கிறது. தப்புலீக் ஜமாத் மீது முஸ்லிம் சமூகத்திற்கு எப்போதுமே ஒரு நல்லபிப்ராயம் இருந்தது கிடையாது. காரணம், அவர்கள் மஹல்லா ஜமாத்களுக்கோ, உலமா சபைக்கோ கட்டுப்படாத தான்தோன்றிகள். 'அசாதாரணமான சூழல் நிலவுகிறது. யாரும் எங்கும் செல்ல வேண்டாம். தொழக்கூட பள்ளிகளில் கூட வேண்டா' மென அரசு, பொது அமைப்புகள், உலமா சபை,...
ஆற்காடு நவாப் அவர்களுக்கு ஏற்பட்ட சந்தேகம் ஒரு முறை ஆற்காடு நவாப் அவர்கள் நபி(சல்லல்லாஹு அளைஹிவசல்லம்) அவர்களின் ஹதீஸை படித்து கொண்டு இருக்கையில் ஒரு வாசகத்தை மட்டும் திரும்ப திரும்ப ஓதினார்கள் இந்த உலகம் காபிர்களின் சொர்க்கம், முஸ்லிம்களின் சிறைச்சாலை.... இப்போது நவாபுக்கு வருத்தம் அதிகமாகி விட்டது நாமோ பகட்டான அரண்மனை வாழ்க்கை, உயர்ந்த உடை, பலவகை உணவு, செல்வ செழிப்பான வாழ்க்கை என்று வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் ஆனால் அல்லாஹ்(svt) முஸ்லிம்களுக்கு இந்த உலகம் சிறைச்சாலை என்று அல்லவா கூறுகிறான் என்று......... உடனே ஊரில் உள்ள அத்துனை ஆலிம்கள் மற்றும் உலமாக்களை அழைத்து அவர்களை கண்ணியம் செய்யும் விதமாக விருந்தும் படைத்தார் அந்த விருந்துக்கு வந்திருந்த அணைத்து ஆலிம்கள், உலமாக்களுக்கு தன் கையாலேயே அவர்கள் கைகளை கழுவ தண்ணீர் ஊற்றினார் நவாப். மன்னர் தண்ணீர் ஊற்றுகிறார் என்று எல்லோரும் பட்டும் படாததுமாக கையை கழுவி விட்டு போய் விட்டார்கள் அதில் ஒருவர் பெரியவர் மட்டும் கை, முகம், கால்கள் என்று சாவகசமாக எல்லோரும் வியக்கும் விதமாக நடந்து கொண்டார்கள்... எல்லா ஆலிம்களும், உலமாக்களும் சொன்ன...

அரஃபா நோன்பின் சிறப்பு :

Image
   அரஃபா நோன்பின் சிறப்பு ..!!!    عن أبي قتادة الأنصاري (رضي الله عنه) أن      رسول الله -صلى الله عليه وسـلـم- سـئـل عن    صوم يوم عرفة فقال: يكفر السنة الماضية                      والسنة القابلة அரபா நாளின் நோன்பைப் பற்றி நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் ‘அது கடந்துபோன ஓராண்டு மற்றும் எதிர்வரும் ஓராண்டு நிகழும் சிறு பாவங்களுக்கு பரிகாரமாக அமையும்’ என கூறினார்கள்.’               துஆக்களில் சிறந்த துஆ...        فإن الرسول الله -صلى الله عليه وسلم-           قال:       خَيْرُ الدّعَاء دعاء يَوْم عَرَفَةَ துஆக்களில் சிறந்தது அரஃபா நாளின் துஆ வாகும் என்று நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்...

குர்பானிக்கு தடை உள்ள பிராணிகள் !!!

Image
                           குர்பானிக்கு  தடை  உள்ள                                பிராணிகள் !!!  عَنِ البَرَاءِ بْنِ عَازِبٍ، رَفَعَهُ قَالَ: لاَ يُضَحَّى بِالعَرْجَاءِ بَيِّنٌ ظَلَعُهَا، وَلاَ بِالعَوْرَاءِ بَيِّنٌ عَوَرُهَا، وَلاَ بِالمَرِيضَةِ بَيِّنٌ مَرَضُهَا، وَلاَ بِالعَجْفَاءِ الَّتِي لاَ تُنْقِي. நான்கு பிராணிகளை குர்பானிக்காக அறுப்பது கூடாது !!! [ 1 ] = நன்கு தெரியும் படியான பொட்டைக் கண் பிராணி . [ 2 ] = வெளிப்படையாகத் தெரியும் நோயுற்றிருக்கும் பிராணி . [ 3 ] = வெளிப்படையாகத் தெரியும் ஊனம் உள்ள நொண்டியான பிராணி . [ 4 ] =எலும்பு மஜ்ஜை பலவீனமான வயது முதிர்ந்த பிராணி . [ அறிவிப்பாளர் ; பராஉபின் ஆஸிப் [ ரலியல்லாஹூ அன்ஹூ ] [ நூல் = அஹ்மது , அபூதாவுத் , நஸயீ , திர்மிதீ , இப்னு மாஜா ]   நாங்கு பிராணிகளை குர்பானிக்காக அறுப்பது கூடாது !!! عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَ...

குர்பானி & உழ்ஹிய்யா பற்றிய தெளிவான விளக்கம்...

Image
குர்பானி  &   உழ்ஹிய்யா  சட்டங்களை   பற்றிய தெளிவான      விளக்கம் ...             அஸ்ஸலாமு அலைக்கும்        வ ரஹ்மதுல்லாஹி வ பரகதுஹூ நாம் முதலில்  அறிந்து கொள்ள வேண்டியது சட்டங்கள் ...           குர்பானி என்றால் என்ன ..?       உழ்ஹிய்யா என்றால் என்ன ..?                என்பதை  தெளிவாக            விளங்கிகொள்ள வேண்டும்.. பொதுவாக உழ்ஹிய்யா என்பதற்கு குர்பான் என்றும் கூறப்படும் . ஆனால் இரண்டு வார்தைகளால் ஒன்று பட்டு இருந்தாலும்  இவைகளின்  சட்டங்கள் மாறுபட்டதாகும் ...      குர்பானி என்ற வார்த்தைக்கும்        உழ்ஹிய்யா என்ற வார்த்தைக்கும் வித்தியாசங்கள் உண்டு என்பதை விளங்கி கொ...

குர்பானி எப்போது கடமையாகும் ?

Image
குர்பானியின் பொதுவான சட்டங்கள் !!!! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரக்கதுஹூ  கேள்வி : குர்பானி எப்போது கடமையாகும் ?    பதில் = ஹனபியீ மத்ஹபின் படி குர்பானி கடமை !  இமாம் அபூஹனீஃபா [ ரஹ் ] கூறுகிறார்கள் அந்த நேரத்தில் ஜகாத்து கொடுக்கும் அளவிற்கு ஒருவரிடம் பொருள் இருந்தால் குர்பானி கடமையாகிவிடுகிறது = அதாவது =612, 1/2 ,கிராம் வெள்ளியோ அல்லது 87 ,1/2 ,தங்கம் அந்த நேரத்தில் இருந்தால் குர்பானி  "" வாஜிபு "" கடமையாகும்  ஷாஃஃபியீ மத்ஹபின் படி குர்பானி கடமை !  இமாம் ஷாஃபீ [ ரஹ் ] அவர்கள் கூறுகிறார்கள் ; குர்பானி தினத்தில் ,தனக்கும் ,தன் குடும்பத்திற்க்கும் உள்ள செலவு போக வசதி இருந்தால் குர்பானி கொடுப்பது சுன்னத்தாகும் ,  மேற்கண்ட இரண்டு இமாம்கள் அறிவிப்பிற்க்கும் ஹதீஸ்கள் உள்ளன .  குர்பானிக்கும் , ஜகாத்துக்கும் உள்ள வேறுபாடு !!! ஜகாத் கொடுக்க தகுதி பெற்றவருக்கு அதற்கென வரையறுக்கப்பட்ட தொகையோ , பொருட்களோ ,ஓராண்டு முழுவதும் அவர் கைவசம் இருந்திருத்தல் மட்டுமே அவர் மீது ஜகாது கடமையாகும் .ஆனால் குர...

குர்பானி ஏன் ? எதற்க்கு ?

Image
குர்பானி ஏன் ?                                  எதற்க்கு ?                                                எப்படி ?          அஸ்ஸலாமு அலைக்கும் [ வரஹ்மதுல்லாஹி வ பரக்கதுஹூ ] இஸ்லாமிய அன்பர்களே !!! நாம் ஏன் குர்பானி கொடுக்கிறோம் ? எதற்க்காக கொடுக்க வேண்டும் ? எப்படிக் கொடுக்கிறோம் ? என்பதை என்றைக்காவது சிந்தித்தது உண்டா ? சரி வாருங்கள் நாம் அதை பார்போம் !!! குர்பானி ஏன் !!! நபிகள் நாயகம் [ ஸல்லல்லாஹூ அலைஹி வ ஸல்லம் ] அவர்கள்  கூறினார்கள் : இது நமது பாட்டனார் , இப்ராஹிம் [ அலைஹி வ ஸல்லம் ] அவர்களின் வழிமுறையாகும் . அவர்களின்  நண்றியுணர்ச்சிக்கும் , தியாக பண்புக்கும் , உயிருள்ள நிலையான ஓர் அடையாளமாகும் . இதனை பரிபூரண மகிழ்ச்சியுடனும் , ஈமானின் உணர்ச்சியுடனும் நிறை வேற்றவது ஒவ்வொரு முஸ்லிமின் மீது கடமையாகும்    [  ...

இறைவனின் பாதையில் அர்ப்பணிக்கப்படும் பொருகள் பெறுகுவது எப்படி !!!

Image
இறைவனின் பாதையில் அர்ப்பணிக்கப்படும் பொருகள் பெறுகுவது எப்படி !!! لئن شكرتم لازيدنكم நீங்கள் [ எனக்கு ] நன்றி செலுத்தினால் [ நான் என்னுடைய அருளைப் ] பின்னும் உங்களுக்கு அதிகப் படுத்துவேண்  [ 14=7 ] மேலோட்டமாக பார்த்தால் குர்பானியால் மனிதனின் செல்வம் செலவழிவதாக நமக்குத் தெரியும் உண்மையில் குர்பானி கொடுப்பதால் பொருள் வளர்ச்சி அடைகிறது .இறைவன் பாதையில் அர்ப்பணிக்கப்படும் எந்த ஒரு பொருளும் குறைவு ஏற்பாடது மாறாக நிரந்தரமான வளர்ச்சி அடைந்து கொண்டே போகிறது . ஒரு விஷயத்தை உண்ணிப்பாக கவனித்தால் அந்த உண்மை புரியும் . அல்லாஹ்வின் பாதையில் குர்பானி கொடுக்கப்படும் பிராணிகள் சந்ததிகள் விரிவு டைந்து பெருகிக் கொண்டே இருப்பதையும் அவனது பெயரில் அறுக்கப்படாத பிராணிகளின் சந்த்திகள் குறைந்திருப்ப்தையும் நாம் கவனிக்க வேண்டும் .பசு ,எருமை , ஒட்டகம் ,ஆண்டுக்கு ஒரு முறை குட்டியைத்தான் பெருகின்றன .ஆடுகளும் சிரமத்துடன் அபூர்வமாக இரண்டு அல்லது மூன்று குட்டிகளை பெருகின்றன . இவற்றின் பிற்ப்பு குறைவானாலும் அழிவு அதிகம் உலகில் ஒவ்வொரு நாளும்  இலட்சக்கண்க்கான ஆடு மாடு  எருமைகள் அற...

புனித ஹஜ்ஜின் ஐந்து நாட்கள் செயல் விளக்கம் :-

Image
இஸ்லாத்தின் ஐந்தாவது கடமை       ஹஜ்ஜூ.....!!! அஸ்ஸலாமு அலைக்கும் [ வரஹ் ] புனித ஹஜ்ஜின் ஐந்து நாட்கள் செயல் விளக்கம் :- இதோ உங்களுக்காக :  இறைவன் கூறுகிறான் : وَلِلَّهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ إِلَيْهِ        سَبِيلاً  யாருக்கு ஹஜ் செய்ய சக்தி இருக்குமோ அவர்கள் மீது ஹஜ் கடமையாக இருக்கும் [ 3=97 ] رُوي عن النَّبي -عليه الصَّلاة والسَّلام- قوله: (مَن حجَّ للهِ، فلم يَرفُث ولم يَفسُقْ، رجَع كيوم ولدَته أمُّه).[٩ நபிகள் நாயகம் [ ஸல்லல்லாஹூ அலைஹி வ ஸல்லம் அவர்கள் கூறினார்கள் :  எவர் ஹஜ்ஜூ செய்து ஹ்ஜஜூக்கு பாதகமான காரியங்கள் செய்யாமலும் , வீணான வார்த்தைகள் பேசாமலும் , இருக்கிறாரோ அவர் அன்று பிறந்த பாலகனைப் போல் ஆவார் ,  [ அறிவிப்பாளர் = அபூஹூறைரா [ ரலியல்லாஹூ அன்ஹூ ]  [ நூல் = புகாரி =1819 ]  ஹஜ்ஜின் முதல் நாள் = 1 [ அதாவது ] துல் ஹஜ் பிறை = 8  <>  [ மினாவில் ] > இஹ்ராம் உடைய நிலையில் மினாவில் தங்குதல். >...