தப்புலீக் ஜமாத்தினர் செய்வது சரியா?*

*தப்புலீக் ஜமாத்தினர் செய்வது சரியா?*

*அரசு ஆணைகளை மதிக்காமல் கூட்டம் கூட்டிய டெல்லி ஸஃதும்...*

*உலமா சபையின் கட்டளைகளை புறந்தள்ளும் அவரின் சாத்திகளும்...*

*செய்த மாபெரும்*
*பிழைக்கு...*

*நம் சமுதாயம் கெட்ட பெயரை, வாங்கித் தவிக்குது.*

*தன் டெல்லி இஜ்திமா என்னும் உணவுத் திருவிழாவை தேவையில்லாமல் நடாத்தி, பெரும் சீர்கேட்டை விதைத்து விட்டது இக்கூட்டம்.*

*அதை மறைக்க...*

*மாற்றார் பால் விஷயத்தைத் திசை திருப்புவதிலேயே கவனமாக உள்ளது.*

*தானும் கெட்டு*
*சமுதாயத்தையும் கெடுக்கும்...*

*இவ்வழிகெட்ட வஹ்ஹாபியக் கூட்டத்தின் வறட்டுப் பாதையை அறிய தொடர்ந்து படியுங்களேன் :

ஒண்ட வந்த பிடாரியை ஊர்ப்பிடாரி தான் அடக்குமென்பார்கள். இப்போது தப்புலீக் ஜமாத் அந்த நிலமையில் தான் இருக்கிறது. தப்புலீக் ஜமாத் மீது முஸ்லிம் சமூகத்திற்கு எப்போதுமே ஒரு நல்லபிப்ராயம் இருந்தது கிடையாது. காரணம், அவர்கள் மஹல்லா ஜமாத்களுக்கோ, உலமா சபைக்கோ கட்டுப்படாத தான்தோன்றிகள்.

'அசாதாரணமான சூழல் நிலவுகிறது. யாரும் எங்கும் செல்ல வேண்டாம். தொழக்கூட பள்ளிகளில் கூட வேண்டா' மென அரசு, பொது அமைப்புகள், உலமா சபை, அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு, பள்ளிவாசல்களின் கூட்டமைப்பு... இவர்கள், அவர்கள் என்ற வரையறை இல்லாமல் எல்லாரும் சொல்லிவிட்டார்கள். ஆனாலும் இவர்கள் கேட்கவில்லை.

ஆலிம்கள், இயக்கத்தினர் என யார் சொல்லியும் அடங்காதவர்களை ஊர்ப்பிடாரிகள் தானே அடக்கும்?. இந்த கூமுட்டைகள் செய்த பிழைக்கு இப்போது முஸ்லிம்கள் வீணே பழி சுமக்கிறார்கள்.

"தப்புலீக் ஜமாத்தை குறி வைக்கிறார்கள் என்று கருதாதீர்கள். ஒட்டுமொத்த முஸ்லிம் இனத்தையே குறி வைக்கிறார்கள்" என்று நாசூக்காக தூண்டிவிடுகிறார்கள் அமீர்சாப்கள். இந்த அமீர்சாப்கள் எப்படியெல்லாம் பகட்டாய் பேசித்தான் முஸ்லிம் இளைஞர்களை பெரிய அளவில் உழைக்க விடாமல் தள்ளு வண்டிக் கடைகளோடும், ரோட்டோரக் கடைகளோடும் முடக்கிப்போட்டு முஸ்லிம்களின் பொருளாதாரத்தை காயடித்து வைத்துள்ளார்கள்.

அடைத்து வைக்கப்பட்டுள்ள தப்புலீக் சாத்திகளை இப்போது அவர்கள் 'டெல்லியிலிருந்து வந்துள்ள முஸ்லிம்கள்' என்று தற்காலிகமாக பெயர் மாற்றம் செய்து அழைக்கப்படுகிறார்கள். இல்லை. அவர்களை எப்போதும் போல 'தப்புலீக் சாத்திகள்' என்றே அழையுங்கள். காரணம், *தொழுகைக்குக் கூட பள்ளிகளில் கூடவேண்டாம்* என்று ஜமாஅத்துல் உலமா அறிவிப்பு செய்தபோது பொதுமுஸ்லிம்களுக்கு அது ஒரு அதிருப்தியைத் தந்த போதிலும், அதன் தூரநோக்கை பின்னர் புரிந்து கொண்டு அவர்கள் சமாதானம் ஆயினர்.

ஆனால், இப்போது டெல்லி சென்று திரும்பியுள்ளவர்கள் எவருமே மஹல்லா ஜமாத்களுக்கோ, உலமா சபைக்கோ கட்டுப்படாதவர்கள். அவர்கள் டெல்லி நிஜாமுதீனிலிருந்து வருகிற உத்தரவுகளை மட்டுமே சிரமேற்று நடக்கிற 'தப்புலீக் ஜமாத்தினர்'. இவர்கள் பொது முஸ்லிம்களைப் போலல்லாமல் தனி பிரிவாக செயல்படுகிறவர்கள். அதனால் தான் இங்கு எல்லா அமைப்புகளும் தந்த அறிக்கைகளை படித்தும், கேள்விப்பட்டும் தெரிந்து கொண்டே டில்லிக்கு தயாரானார்கள். பொது முஸ்லிம்கள் அப்படி செய்யமாட்டார்கள்.

'நிலமை சரியில்லை. போகவேண்டாம்' என்று சொன்னவர்களையெல்லாம் ஏளனமாக பார்த்து விட்டு 'தவக்குல்' என்று சொல்லிக் கிளம்பியவர்கள், இப்போது மிக நாசூக்காக 'இது முஸ்லிம் இனத்திற்கான பிரச்சினை' என்று மாற்றப் பார்க்கிறார்கள். தவக்குல் குறித்து ஒழுங்கற்ற பார்வை கொண்ட இந்த தப்புலீக் ஜமாஅத்தினரால் இதுநாள் வரை அவர்களின் குடும்பமும், இப்போது முஸ்லிம் சமுதாயமும் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறது.

"ஒட்டகத்தையும் கட்டிப்போடு, தவக்குலும் வை" என்று நபியவர்கள் சொல்லித் தந்த தவக்குலை இவர்கள் 'அழுக்கு ஜிப்பாவோடு திரிவது' என்று புரிந்து வைத்துக் கொண்டு தங்களது வாழ்க்கையையும் நாசம் செய்து கொண்டு, இப்போது முஸ்லிம்களுக்கும் இழுக்கை ஏற்படுத்தியுள்ளார்கள்.

எதையுமே பொருட்படுத்தாமல் டெல்லி சென்று திரும்பியுள்ள முட்டாள் தப்புலீக் சாத்திகள், இப்போதும் கூட இதை 'முஸ்லிம்கள் மீது விழுந்த பழி' யாக பார்க்காமல், அந்த குற்ற உணர்ச்சி சிறிதுமின்றி இவர்கள் மீது வருகிற விமர்சனங்களுக்கு பதில் சொல்ல ஒட்டுமொத்த இஸ்லாமியர்களையும் அழைக்கிறார்கள்.

நாடு இருக்கும் நிலையில் 'கூட்டுமனசாட்சி' என்றும், "நிலமும், பள்ளியும் உன்னுடையது தான். என்றாலும் நம்பிக்கை அவனுடையது' என்றும் அநியாயமாக எல்லாவற்றையும் இழந்து வரும் வேளையில் நமக்கு இவர்கள் வேறு ஒரு கேடாய் வந்து அமைகிறார்கள்.

"ஈஷா யோக மையத்தில் கூடிய கூட்டத்தில் கலந்து கொண்டவர்களை பரிசோதனை செய்தீர்களா?. முஸ்லிம்களை பரிசோதனை செய்ததை மட்டுமே செய்திகளாக்குகிறீர்களே.... ராமுக்கு ஒரு நீதி? ரஹீமுக்கு ஒரு நீதியா?" என்று பொதுத்தளத்தில் நாமெல்லாம் கொதிக்கிறோம் தான். அதே சமயம், தப்புலீக் ஜமாத்தினர் செய்த செயலுக்கு நாம் பொறுப்பேற்க முடியாது. வாதாடலாம். போராடலாம். இவர்கள் மீது வரும் விமர்சனத்திற்கு எதிர் விமர்சனங்களுக்கு நாம் பதில் சொல்லலாம். சொல்கிறோம். சொல்ல வேண்டும் தான்.

ஆனால், இவர்களின் ஒவ்வொரு பொறுப்பற்ற செயல்களாலும் முஸ்லிம்கள் மீது விழுகிற பழிகளுக்கு ஒவ்வொரு முறையும் பதில் சொல்வது தான் நம் வேலையா?. அவர்களை அடக்க இங்கு ஆட்களே இல்லையா?.

Comments

Popular

இஸ்லாமிய கேள்வி பதில் :- பாகம் : 5

சத்திய இஸ்லாத்திற்காக ஸஹாபி பெண்களின் தியாகங்கள்..!

கஃபாவை பற்றிய சிறப்பு & ருசிகர தகவல்கள்

இஸ்லாமிய கேள்வி பதில் .!! பாகம் : 4

இஸ்லாமிய கேள்வி பதில் ..!! பாகம் : 2

புனித ஹஜ்ஜின் ஐந்து நாட்கள் செயல் முறை விளக்கம்

முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ( ரலியல்லாஹூ அன்ஹூ ) ஆண்டகை அவர்களின் சிறப்பு திருநாமங்கள்